இந்தியா

ராகுல் காந்தி வயநாடு பயணம் திடீர் ரத்து

Published On 2024-07-31 02:43 GMT   |   Update On 2024-07-31 02:43 GMT
  • நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
  • வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

புதுடெல்லி:

கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று வயநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் செல்ல இருந்தார். இதற்கிடையே ராகுல் காந்தியின் வயநாடு பயணம் நேற்று இரவு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'வயநாட்டுக்கு சகோதரி பிரியங்காவுடன் நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டு இருந்தேன். ஆனால், கனமழை, மோசமான வானிலை காரணமாக நாங்கள் அங்கு செல்ல இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். நாங்கள் விரைவில் நேரில் வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். வயநாட்டில் உள்ள சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News