என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rape"
- காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் [Saffron Rajesh] மிரட்டியுள்ளான்
- சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கினார்
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமூக வலைத்தளத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் [Saffron Rajesh Singh] என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதளத்தில் தாகாத முறையில் பதிவிட்டு வந்ததுடன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் கோபத்தில் இருந்த அந்த பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து சாப்ரோன் ராஜேஷின் தனது வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தப்பித்துளான்.
वाराणसी : सोशल मीडिया पर कमेंटबाजी हुई मारपीट में तब्दील➡कमेंट करने वाले व्यक्ति के घर पहुंची कांग्रेस नेत्री ➡लाइव आकार नेत्री रोशनी कुशल जायसवाल ने किया हंगामा➡कमेंट करने वाले व्यक्ति,उनके परिवार के साथ दुर्व्यवहार का आरोप➡फेसबुक लाइव का वीडियो सोशल मीडिया पर हो रहा… pic.twitter.com/p5b5jcDb3p
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 15, 2024
இதனைகோடர்ந்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில், சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தாகத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்தான் என்று தெரிவித்துள்ளார்.
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
ஓடும் ரெயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரெயில்வே ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது குடும்பத்துடன் பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த பிரசாந்த் குமார் [34 வயது] என்ற ரெயில்வே ஒப்பந்த ஊழியர் தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
தனது தாய் வந்தவுடன் அந்த சிறுமி நடந்ததைக் கூறவே, சிறுமியின் குடும்பத்தினரும், அந்த பெட்டியில் பயணித்த சக பயணிகளும் இணைந்து பிரசாந்த் குமாரை சுமார் ஒன்றரை மணி நேரமாக சரமாரியாகத் தாக்கினர். பின் கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
- ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
- நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.
அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள்
- ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, குற்றவாளி பாஜகவை சேர்ந்தவன் என்பதால் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் 5 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நிர்வாணமாக ஆடவைத்து சித்ரவதை செய்ததாகக் காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் அளித்த புகாரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி தன்னை அவர்கள் கடத்திச் சென்று குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள், அதன்பின் தொலைக்காட்சி பார்த்த அவர்கள் தன்னை பெல்டால் அடித்து வற்புறுத்தி அந்த நிலைமையில் அரை மணி நேரம் தன்னை நிர்வாணமாக நடனம் ஆட வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.
19 நாட்களுக்கு முன்னர் அந்த பெண் புகார் அளித்திருந்தும் போலீசார் இந்நாள்வரை எப்.ஐஆர் பதியாமல் இருந்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்றத்தில் தலையீட்டுக்கு பின்னர் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர் பதியாததற்கு காரணம், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐவருள் ஒருவன் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, பாஜக போலீசை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சாலுஜா, குற்றவாளியின் அரசியல் சார்புகள் எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடதப்பட்டும் என்று துணை ஆணையர் அபிநய் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
- லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர பெண்ணுடன் ஒப்பந்தம் [MOU]
பாலியல் பலாத்கார வழக்கில் லிவ் இன் டுகெதர் சாக்கை பயன்படுத்தி குற்றவாளி முன் ஜாமீன் பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியும் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டியும் பல முறை தன்னை 46 வயது நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களது உறவு வளர்ந்த நிலையில் அந்த நபர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் அவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தங்களது உறவை முறித்துக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் முற்பட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைத்து தங்களது உறவைத் தொடர அந்த நபர் மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் இதுபோல பலமுறை அவர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்படாமல் இருக்க அந்த நபர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கு மிடையிலான லிவ் இன் டுகெதர் உறவை 11 மாதங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 1 2024 முதல் ஜூன் 30 ,2025 வரை தொடர அந்த பெண்ணுடன் தான் ஒப்பந்தம் [MOU] செய்துள்ள ஆதாரத்தை அந்த நபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அக்ரிமென்டில் பெண்ணின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளதாக அந்த நபரின் வக்கீல் நீதிமன்றத்தில் வாதாடினார். எனவே இதை ஆதாரமாக ஏற்றும், அந்தரங்க வீடியோக்களுக்கான ஆதாரங்களை அந்த பெண் சமர்ப்பிக்காததாலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் அந்தரங்க வீடியோகக்ளை வைத்து மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத் தெரிந்த நபருக்கு லின் இன் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்க அதிக நேரமானது என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர்.
- கர்நாடகாவில் கேவாலா என்ற அறக்கட்டளையை பிரதீப் உல்லால் என்ற யோகா ஆசிரியர் நடத்தி வருகிறார்.
- வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வரும் பிரதீப் உல்லால் (54) என்ற யோகா ஆசிரியர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
அப்பெண் தனது புகாரில், "பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன்.
அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
- படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்
- நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தின் இன்னும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் அம்மாநிலத்தில் வெவேறு மருத்துவமனைகளில் பாலியல் துன்புறுத்தல் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்கம் - பீர்பும் மாவட்ட அரசு மருத்துவமனையில் இரவு டியூட்டியில் இருந்த நர்ஸுக்கு குளுக்கோஸ் ஏற்றும் நிலையில் இருந்த நோயாளி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அந்த நோயாளிக்கு நேற்று இரவு டியூட்டியில் இருந்த நர்ஸ் குளுக்கோஸ் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, படுத்த படுக்கையாக இருந்த நோயாளி நர்ஸை தகாத இடங்களில் தொட்டும், ஆபாச வார்த்தைகளால் பேசியும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் அளித்த நிலையில், அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்
இதேபோன்று நேற்று இரவு மேற்கு வங்கம் ஹவுராவில் உள்ள மருத்துவமனையில் வைத்து 13 வயது சிறுமிக்கு மருத்துவமனை ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருத்துவமனை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர், நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமிக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், ஸ்கேன் அறையில் இருந்து தங்களது மகள் அழுதுகொண்டே ஓடிவந்து நடந்ததைச் சொன்னதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விஷயம் மருத்துவமனை கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினர். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை அவர்கள் தாக்க முயன்ற நிலையில் சமய இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த நகரை மீட்டு கைது செய்தனர். இருப்பினும் மருத்துவமனையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.
- 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது.
கேரள திரைத்துறை பாலியல் புகார்கள், கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார கொலை, தினந்தோறும் நாடு முழுவதும் நடந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் என அனைத்தையும் முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.பி சசி தரூர் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொரு நாளும் நான் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீது அரங்கேறிய குற்றங்களே அதில் இருக்கிறது. அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.
இந்த விஷயத்தை நம்மால் நிறுத்தமுடிவில்லை என்றால் இந்திய ஆண்களிடம் கண்டிப்பாக எதோ பிரச்சனை உள்ளதாகவே தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் முதலில் பெரிய அளவிலான கோபம் வெளிப்படுகிறது ஆனால் அதன்பின் அடுத்த கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. 2012 நிர்பயா விவகாரம் தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது. பல வருடங்களாக எதுவும் மாறவில்லை.
இதற்கு நிச்சயம் தீர்வு தேவை. அது அடிப்படையிலிருந்தே நடந்தாக வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கேரள திரைத்துறையில் ஹேமா ஆணையத்துக்குப் பின் வெளி வரத் தொடங்கியுள்ள பாலியல் புகார்கள் குறித்துப் பேசிய சசி தரூர், திரைத்துறையில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதில் கேரளா முன்னோடியாக இருப்பதில் எனக்குப் பெருமையே, குறைந்த பட்சம் கேரளாவிலாவது துணிந்து உண்மைகளைக் கூறத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
- 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த சம்பவத்தில் 29 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் கொள்ளை முயற்சியின் போது 70 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கனகக்குன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் என்ற 29 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மூதாட்டியிடம் இருந்து சுமார் ஏழு சவரன் தங்கத்தை திருடியதாகவும், நகைகளை விற்க முயன்ற போது பிடிபட்டதாகவும் போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட தனேஷ், மூதாட்டி தனியாக வசித்து வருவதை தெரிந்து கொண்டு அவரது வீட்டிக்கு சென்று கொள்ளையடித்ததுமின்றி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின்னர் அவரது செல்போனை திருடி விட்டு, கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் இன்று காலை மூதாட்டியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அவர் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது.
- சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9-ந்தேதி ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர் பாக போலீசில் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சஞ்சய் ராயை சிபிஐ பல கட்டங்களாக விசாரித்து வருகிறது. இந்நிலையில் சஞ்சய் ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி உள்ளது. டெல்லி ஃபாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்தில்[CFSL] இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய் ராயை பரிசோதனைகளுக்கு உட்படுத்தினர்.
சஞ்சய் ராய் தான் செய்த வெறிச்செயலை எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் விளக்கியுள்ளான். சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலமும் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமும் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட ஆசாமி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது.
முன்னதாக சம்பவ நடந்த அன்றைய இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியில் இரண்டு இடங்களுக்குச் சென்றதாகவும் அதன் பின்னர் தனது நண்பர்கள் தன்னை மருத்துவமனையில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறினான். பின்னர் தூங்கலாம் என்று தான் ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு பெண் மருத்துவர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பலாத்காரம் செய்தேன் என்று ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது இந்த வாக்குமூலத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
- தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
- உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும்
கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாள் விசாரணையில் மேற்கு வங்காள அரசையும், போலீசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தாமதமாக வழக்குப் பதிந்தது ஏன்? மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் எப்படி நுழைந்தனர்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களிடம் அரசு தங்களின் பலத்தைக் காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தது. ஆனால் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்திய ரெசிடெண்ட் மருத்துவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி டி,ஒய்.சந்திரசூட் வாக்குறுதி அளித்தார். மேலும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
- குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
- மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.
குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Not just a champion in running, but also in party connections!Engaged in a gathering with TMC leaders of South Dinajpur are none other than Kolkata Police's notable ASI Anup Dutta, alongside Civic Volunteer Sanjay! pic.twitter.com/xU5jkvUZ5o
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) August 21, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்