search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train"

    • உத்தரப்பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் செனறனர்.
    • உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல.

    பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரெயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரெயிலை ரெயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது ஒன்றும் முதன்முறையல்ல. இந்தாண்டு மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கான ரெயில் சென்றுகொண்டிருக்கும்போது நடுவழியிலேயே பழுதாகி நின்றதால் தண்டவாளத்தின் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரெயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்றுள்ளனர்.

    • தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் இளையராஜா.
    • இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.

    இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில் 'ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா' என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

    தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்த இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

    இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.
    • வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    மனிதன் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், உடல் மற்றும் மனதை மீண்டும் புத்துணர்ச்சியூட்ட உறக்கம் மிக மிக முக்கியம். ஆனால், இந்த உறக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என பலருக்கும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க தான் செய்கிறது.

    படுத்ததும் உறங்குபவர்கள், எந்நேரமும் உறங்குபவர்கள், எங்கும் உறங்குபவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அந்த வகையில், டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் குடை பிடித்தப்படி அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தண்டவாளத்தில் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டார். பிறகு ரெயிலை விட்டு கீழே இறங்கி வந்து, உறங்கிக் கொண்டிருந்த நபரை எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்து அவர் சென்ற பிறகு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பல லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளது. பலர் தண்டவாளத்தில் உறங்கிய நபரை வசைபாடியும், பலர் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். 


    • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின்.
    • இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார்.

    அதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்டியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரைன் ஆகும்.

    ட்ரைன் படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.
    • நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன்.

    ராஜ்தானி விரைவி ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ரெயிலில் உள்ள குப்பைகளின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "ராஜ்தானி விரைவு ரெயிலின் பரிதாப நிலை இது. ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. இது எங்களின் மகிழ்ச்சியான பயணத்தை கெடுத்துவிட்டது. சாதாரண ரெயில் பெட்டிகளை விட பாத்ரூமின் நிலை மிக மோசமாக உள்ளது.

    நான் 12000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து நரக வேதனை அடைந்தேன். ரெயில் சுத்தமாக இல்லை. ரெயில் பெட்டிகளுக்குள் அனுமதியில்லாமல் சிலர் பொருட்களை விற்கின்றனர். பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்கின்றனர். மொத்தத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    ரெயில் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் எனது மகன் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளான். பிரதமர் மோடி அவர்கேள தயவு செய்து இதை சரிசெய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவில், இந்திய ரெயில்வே துறை, ரெயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் மோடியை அவர் டேக் செய்துள்ளார்.

    இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ரெயில்வே, உங்களது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 


    • ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்கள் செழித்து வளர்ந்துள்ளது.
    • இந்த புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ரெயிலுக்குள் காளான் வளர்ந்துள்ள புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த படத்தில், ரெயிலுக்குள் நிலவும் ஈரமான சூழலில் காளான்களும் பாசிகளும் ஒன்றாக செழித்து வளர்ந்துள்ளது.

    அந்த பதிவில், இந்தியாவில் நீண்ட தூர ரெயில் பயணம் செய்யும் சைவப் பயணிகள் இப்போது 2 அல்லது 3 நாட்கள் இந்த காளான்களை பறித்து சாப்பிட்டு கொள்ளலாம்" என்று அவர் கிண்டல் அடித்துள்ளார்.


    • 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர்.
    • இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்தனர்.

    அரக்கோணம்:

    கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (வயது 56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

    உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை சென்றனர்.

    பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரெயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.

    அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது.

    அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.

    இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.

    இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரெயில் சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.

    என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என கூறியபடி அலறி கூச்சலிட்டார்.

    மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.

    அப்போது, மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது.

    பின்னர் ரெயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வடமாநில ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    • புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் பில்பூர் அருகே ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து, பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து பயணிகள் வெளியே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மொராதாபாத் கோட்டத்தின் கீழ் வரும் பில்பூர் நிலையத்திற்கு அருகே ஹவுரா- அமிர்தசரஸ் மெயிலின் பொதுப் பெட்டியில் இன்று சிலர் தீயை அணைக்கும் கருவியை இயக்கியுள்ளனர்.

    இதனால், அந்த பெட்டி முழுவதும் புகை கிளம்பியுள்ளது. புகையை கண்ட சக பயணிகள் ரெயிலில் தீ பிடித்ததாக நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, பயணிகள் சிலர் பீதியில் ஓடும் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர். இதில், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பயணிகள் அவசரகால நிறுத்தத்திற்கான சங்கிலியை இழுத்துவிட்டு குதித்ததால், ரெயில் மெதுவாக செல்லும்போது பயணிகள் பீதியில் ரெயிலில் இருந்து குதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீ விபத்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .
    • விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த ரெயிலின் 3 ஏசி பெட்டிகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    B6, B7,M1 ஆகிய 3 பெட்டிகளில் மளமளவெனப் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அணைத்தனர்.

    சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து விசாகப்பட்டினம் வந்திருந்த ரெயிலிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு தீப்பிடித்ததால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த தீ விபத்து விசாகப்பட்டினம் ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது .

    • ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை ஜார்கண்டில் அருகே தடம் புரண்டது.
    • வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் ஏற்படுகின்றன

     மேற்கு வங்க தலைநகர் கால்கத்தாவிலுள்ள ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் சரக்கு ரெயிலுடன் மோதி இந்த விபத்து நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் 20 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் அலட்சியப் போக்குக்கு ஒரு முடிவு என்பதே இல்லையா என்று சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்நிலையில் விபத்து உட்பட சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ரெயில் விபத்துகளுக்கு மத்திய பாஜக அரசைக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

    விபத்துகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுதான் ஆட்சியா?. ரெயில் விபத்துகள் நடப்பது என்பது வழக்கமாகி விட்டது. வாராவாரம் நடக்கும் இந்த விபத்துகளால் மரணங்கள், படுகாயங்கள் நடக்கின்றன. நான் சீரியாகக் கேட்கிறேன்?, இது உண்மையில் ஆட்சிதானா?, இன்னும் எத்தனை காலம் இதையெல்லாம் பொறுத்துக்கொள்வது என்று கேள்விக் கணைகளை விளாசியுள்ளார்.

    • வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
    • பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.

    இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.

    பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

    • ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

    பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் இடையே 'ரூட்டுதல' பிரச்சனையால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பஸ், ரெயில்களில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்களிடம் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி மின்சார ரெயில் வந்தபோது 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரே பெட்டியில் ஏறினர்.

    அவர்கள் ரெயில் புறப்பட்டதும் ரகளையில் ஈடுபட தொடங்கினர். சில மாணவர்கள் மின்சார ரெயிலின் ஜன்னலில் ஏறி நின்றபடி கூச்சலிட்டு சாகச பயணம் செய்தனர். மேலும் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடியும் சென்றனர். "பச்சையப்பா கல்லூரி மாஸ்...." என்று சத்த மிட்டபடி பயணம் செய்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மாணவர்களின் அட்டகாசத்தை கண்டித்த சில பயணிகளையும் மாணவர்கள் சிலர் கிண்டல் செய்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பயணிகள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்துடனே பயணம் செய்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "மாணவர்கள் ஆபத்தான நிலையில் ரெயில் பொட்டியின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்ததை பார்க்கவே பயமாக இருந்தது. மாணவர்களின் அட்டகாசத்தால் பயணிகளுக்கும் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக போலீசார் இல்லை" என்றனர்.

    ×