search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலி"

    பல்லடத்தில் கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    ஈரோடு எஸ்.எஸ்.பி.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். மணிகண்டன் ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அங்கு சந்தியா என்பவர் வேலை பார்த்து வந்தார். சந்தியாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் மணிகண்டனுக்கும், சந்தியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    சந்தியாவின் குழந்தையை அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல்லடம் லட்சுமி மில் பகுதியில் மணிகண்டனுடன் சந்தியா தனியாக வாடகை வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் தனது கணவர் மணிகண்டனை காணவில்லை என்று அவரது மனைவி மைதிலி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.

    சந்தியா தனது குழந்தையை பார்த்து விட்டு வருவதாக ஈரோடு சென்றார். அங்கு மனம் மாறி திரும்பி வராமல் இருந்தார். சந்தியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு

    மீண்டும் வருமாறு மணிகண்டன் அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்து விட்டார்.

    இதனால் மனம் உடைந்த மணிகண்டன் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி அருகே தொழிலாளியை வெட்டி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழ நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி.

    சிவக்குமார் ஒரு அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என 2 மகன்கள், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள் மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவக்குமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.

    பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீரா வர வழைக்கப்பட்டது.

    கொலையுண்ட சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார உத்தரவின் பெயரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மலையம் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிவகுமாரின் கள்ளக்காதலி ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த கள்ளக்காதலி கொடுமுடி அருகே காசி பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று மொடக்குறிச்சி சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சிவகுமார் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    சிவகுமார் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    கொலை நடந்த இரவு முதல் கள்ளக்காதலி தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அந்த பெண் தான் சில பேருடன் சேர்ந்து சிவகுமாரை வெட்டி கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஆந்திர வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார்(25). இவர் கோவை நல்லாம் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த பெண்ணிற்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் கெம்பட்டி காலனியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண் ஊருக்கு செல்வதாக கூறி உள்ளார். ஆனால் லோகேஷ்குமார் வேண்டாம் என கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த லேகேஷ் குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் பெரிய கடை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் லோகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியில் பெண் பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த காதலன் இன்று உயிரிழந்தார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் இங்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் வருகை தருகிறார்கள்.

    இவர்கள், இங்குள்ள லாட்ஜுக்கள், தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கிறார்கள். காதல் ஜோடிகள், கள்ளக்காதலர்களும் இங்குள்ள சில விடுதிகளில் தங்கி ஜாலியாக பொழுதை கழிப்பதால் இங்கு தங்குபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

    லாட்ஜுகளில் அறை எடுப்பவர்கள் தங்களது முகவரி சான்று நகலை அளிக்க வேண்டும். மேலும் சந்தேகப்படும் வகையில் இங்கு தங்குபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். போலீசாரும் அடிக்கடி சோதனை நடத்துவார்கள்.

    ஆனாலும் கன்னியாகுமரியில் சில லாட்ஜுகளில் காதல் ஜோடி, கள்ளக்காதலர்கள் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 27). கோபி செட்டிப்பாளையம் ஆதி திராவிடர் காலனியைச் சேர்ந்த கார்த்திகா (26) ஆகிய கள்ளக்காதல் ஜோடி கன்னியாகுமரி லாட்ஜில் அறை எடுத்து தங்கி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

    கார்த்திகாவுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு திருமணம் ஆகவில்லை. சதீஷ் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கார்த்திகா ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் சதீசும், கார்த்திகாவும் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர். கன்னியாகுமரி வந்து லாட்ஜில் தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    எப்படியும் தங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டதால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் வி‌ஷத்தை குடித்தனர். அதன் பிறகு தங்களது கைகளையும் பிளேடால் வெட்டிக் கொண்டனர்.

    இதில் கார்த்திகா, லாட்ஜ் அறையிலேயே இறந்து விட்டார். உயிருக்கு போராட்டிக் கொண்டிருந்த சதீஷை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்ததனர்.

    அங்கு சதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.30 மணிக்கு சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இறந்த கார்த்திகாவின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் உள்ளது. அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைகளும் இன்று நடக்கிறது. இதையொட்டி சதீஷ் மற்றம் கார்த்திகாவின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    புதுவையில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை குருசு குப்பத்தை சேர்ந்தவர் தேவா (வயது 23). இவர் கவுண்டன் பாளையம் ஆருத்ரா நகரில் ஒரு வாடகை வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார்.

    இவர், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தார். நாளடைவில் அந்த பெண்ணின் மகளான பிளஸ்-2 மாணவிக்கு தேவா பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அந்த மாணவியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் இது குறித்து அந்த மாணவி குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து குழந்தைகள் நல குழு தலைவர் ராஜேந்திரன் விசாரித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார்.

    இந்த புகாரை ஏற்று இதன் மீது விசாரணை நடத்தும்படி ரெட்டியார் பாளையம் போலீசுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    இதன்படி ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை நடத்திய போது மாணவிக்கு தேவா பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தேவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 26). இவருக்கும் உச்சப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது மணமகள் வீட்டில் இருந்து 10 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அதன்பிறகு குமார் கள்ளக்காதலி மற்றும் உறவினர்களான ஜெயராமன், அவரது மனைவி தேவி ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொடுமைப்படுத்தினார்.

    இது தொடர்பாக நந்தினி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    வேலூர் சத்துவாச்சாரியில் தகராறில் ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது.

    சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

    தண்டுமாரி இந்திரா நகரில் வசித்து வந்தார். அவரது கணவர் இறந்து விட்டார். அவருக்கு போடி (20) என்பவர் உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

    தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்போதும் தண்டுமாரி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். 2 பேருக்கும் 6 ஆண்டுகளாக கள்ளக்காதல் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தங்கராஜ் தண்டுமாரி வீட்டுக்கு வந்தார். அப்போது தண்டுமாரிக்கும், தங்கராஜ்க்கும் இடையே நள்ளிரவு 1 மணியளவில் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடியுடன் சேர்ந்து தங்கராஜின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தங்கராஜ் இறந்ததை உறுதி செய்த தண்டுமாரி தனது மகனுடன் தலைமறைவாகி விட்டார்.

    சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

    3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றார். அங்கு ரெமோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்நிலையில் மனைவியை விட்டு விட்டு தஞ்சை சென்றார். அங்கு உஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவரையும் விட்டு விட்டு தாராபுரம் வந்தார். இங்குள்ள நஞ்சியம் பாளையத்தில் தங்கினார். அப்போது லட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இங்குள்ள நாடார் தெருவில் வசித்து வந்த ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் காலையில் ராஜா காயங்களுடன் ரோட்டில் மர்மமான முறையில் கிடந்தார். 

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னீஸ்வரி (வயது 40). இவருக்கும் தஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வியாபாரி, உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    பொன்னீஸ்வரி தஞ்சையில் கணவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் உதய குமாருக்கும், தஞ்சையை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

    இதையறிந்த பொன்னீஸ்வரி தனது கணவரை சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் உதயகுமார் மகாலட்சுமியுடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் உதயகுமாரும், மகாலட்சுமியும் சேர்ந்து பொன்னீஸ்வரியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு பதிவு செய்து மகாலட்சுமியை கைது செய்தார். தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகிறார்.
    என்னை விட்டு விலகியதால் கள்ளக்காதலியின் கணவரை கொன்றேன் சேலம் டிரைவர் கொலையில் கைதான வாலிபர் வாக்குமூலம்

    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடியை சேர்ந்தவர் பெருமாள். இவர் கோவையில் செப்டிங் டேங்க் வண்டியின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முருகேஸ்வரி, குழந்தைகளுடன் சீரகாப்பாடிக்கு வந்து விட்டார். சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள டெய்லரிங்கடையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு, பரமகுடியை சேர்ந்த அருள் என்கிற அருள்செல்வம் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் பெருமாளின் உறவினர்கள் சமாதானம் செய்து பெருமாளையும், முருகேஸ்வரியையும் சேர்த்து வைத்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி பெருமாள் திடீரென மாயமானார். பின்னர், அவர் இறந்த நிலையில் உடல் வீரபாண்டி ஏரியில் இருந்து மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பெருமாளை கொலை செய்து விட்டதாக கூறி, கடந்த வாரம் அருள்செல்வம் பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். நேற்று முன்தினம் முதல் அவரை ஆட்டையாம்பட்டி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், அருள் செல்வம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கார்மென்ட்ஸ் கடையில் வேலை செய்தபோது முருகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை பார்த்தவுடனே, அவரது அழகில் நான் மயங்கினேன். அவரை, எப்படியாவது எனது வலையில் வீழ்த்தி விட வேண்டும் என எண்ணினேன். இது முருகேஸ்வரிக்கு தெரியாது. தவறான கண்ணோட்டத்தில் பழகுவது குற்றம் என தெரிந்தும் பழகினேன்.

    முருகேஸ்வரி தனது குடும்பம் வி‌ஷயம் குறித்தும், கணவரை பற்றியும் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். ஒரு நாள் அவர், தனியாக கார்மென்ட்ஸ் கடை தொடங்கப்போகிறேன். இதற்கு தேவையான உதவிகளை செய்ய முடியுமா? என கேட்டார். ஏற்கனவே, அவரது அழகில் மயங்கிய நான், அவர் உதவிகேட்டவுடன் மறுக்கவில்லை. உதவிகள் செய்து கொடுத்தேன்.

    ஊரில் உள்ளவர்களுக்கு எங்களது தொடர்பு பற்றி தெரிய தொடங்கியது. அவர்கள் முருகேஸ்வரிக்கு அறிவுரை கூறினார்கள். அருள்செல்வத்தை நம்பாதே உன்னை ஏமாற்றுகிறான் என்றனர். என் மீது ஒரு கட்டத்தில் முருகேஸ்வரிக்கும் சந்தேகம் ஏற்பட்டது. நான் ஏமாற்றுவதாக அறிந்தார். இதனால் என்னிடம் இருந்து விலக தொடங்கினார். இருந்தாலும் நான் அவரை விடவில்லை.

    இந்த நிலையில் திடீரென பெருமாளுடன் சேர்ந்து கொண்ட அவர், என்னுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இது எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பழி வாங்கவே பெருமாளை எனது வீட்டிற்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    சென்னையில் இருந்து வந்த எனது நண்பர் உசிலம்பட்டி பால் பாண்டியுடன் சேர்ந்து பெருமாளின் உடலை வீரபாண்டி ஏரியில் கல்லை கட்டி வீசினோம். பின்னர் நாங்கள் இருவரும் தலைமறைவாகி விட்டடோம். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்ததை அறிந்ததும் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக தெரிகிறது.

    கொலைக்கு துணையாக இருந்த உசிலம்பட்டியை சேர்ந்த பால்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×