search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறியல்"

    • அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது.
    • இதில் கோபம் கொண்ட அவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு விதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திராவ் இவருடைய மகன் கார்த்திக்ராவ்(23).இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார் .

    இவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக காம்பவுண்ட் அருகே இந்து மக்கள் முன்னனி ஆட்டோ ஸ்டால் என புதிய ஒரு பிளக்ஸ் போர்டை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வைத்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர் ரஞ்சித் குமார் அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது என கார்த்திக்ராவிடம் கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கார்திக்ராவிடம் பிளக்ஸ் போர்டை கழட்டுமாறு கூறியுள்ளனர் .

    இதில் கோபம் கொண்ட கார்த்திக்ராவ் திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டார் இது குறித்து ஊழியர் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கார்த்திக்ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிைறயில் அடைத்தனர்.

    எரியோடு அருகே பட்டதாரி வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எரியோடு:

    திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.

    இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.

    இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.

    செய்யாறு-திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த தண்டரை மேட்டுக்காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வழங்கபட்டு வந்தன.

    கோடை வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் அப்பகுதிக்கு குடிநீர் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்படவில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செய்யாறு-ஆரணி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு தாசில்தார் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அபோது பொதுமக்கள் கூறுகையில்:- எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக தூர் வார வேண்டும், மேலும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இரண்டு அல்லது மூன்று நாட்களில் குடிநீர் தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என்ற அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குரிசிலாபட்டு வடுகம்முத்தம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் வழங்கபடவில்லை.இது குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆலங்காயம் திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டார வளர்ச்சி பொறியாளர் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதானந்தம், குரிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    ஒடுகத்தூர் அருகே உள்ள அகரம் ஊராட்சியில் 3 மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் ஒடுகத்தூர்-மாதனூர் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருப்பத்துர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் பனந்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கபடவில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    புதுவண்ணாரப்பேட்டையில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவில் நேற்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.

    இதுபற்றி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று காலை வரை அவர்களுக்கு மின் சப்ளை வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் மின் விசிறியை இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.

    இந்த நிலையில் மின்தடையை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை எண்ணூர் விரைவுச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    காசிமேடு மின்பிடி துறைமுக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உடனடியாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கூத்தாநல்லூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்கார செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தப்பிய ஒரு மாணவி மன முடைந்து தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டது திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

    அப்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

    ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி சென்றனர். ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்த அந்த மாணவியை 4 பேரும் பிடித்து கீழே தள்ளி, அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். 4 பேரின் கோரப்பிடியில் இருந்து மீண்டும் தப்பித்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாஸ் (வயது21), அஜித்(19), விஜய் (20), முருகேசன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததும், இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் உடனடியாக கைது செய்யக்கோரி வடகோவனூர் கிராம மக்கள் கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அப்போது 4 வாலிபர்கள் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சிறிதுநேரம் கோ‌ஷமிட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு வசதி இன்றி இருந்தனர் கடந்த 2015ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் ஆதிதிராவிட மக்கள் நான்குவழிச் சாலை அருகே உள்ள கொக்கலாஞ்சேரி கண்மாய்க்குள் 12 சென்ட் இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது

    இந்நிலையில் நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி(60) இயற்கை மரணம் அடைந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக புதிய சுடுகாட்டிற்கு கொண்டு வரும்போது சுடுகாடு அருகே உள்ள இடத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இங்கு புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் மக்கள் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனிடையே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அன்னக்கிளியின் உறவினர்கள் கருப்பையா, மணிகண்டன், கருப்பு, ராமர், பாலா, சின்னா, ராசுக்குட்டி, மருதுபாண்டி, குருசாமி, மாரியப்பன், விஜயபாண்டி, பெரியாத்தாள் ஆகிய 12 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் சரியாக இயங்காத காரணத்தால் பயணிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். #koyambedubusstand
    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 10மணி முதல் சரியாக இயங்காததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.

    இதுகுறித்து டெப்போவில் இருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 12மணி அளவில் திடீரென்று பிளாட்பாரம் 1-ல் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வழியில்லாமல் வரிசையாக காத்துநின்றன.

    தகவலறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அவர் வெளியூர் பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #koyambedubusstand
    தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்கிறது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இதேபோல் தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்தது.

    அதன் பின்பும் போராட்டம் நீடிப்பதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைக்கு வராமல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கைதான முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை எழிலகத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இவர்களில் 5 பெண்கள் உள்பட 41 பேர் மட்டும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறி மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுதலை செய்தார்.

    செங்கல்பட்டில் 20 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் 30 பேர், சேலம் நாமக்கல்லில் 97பேர், வேலூர், திருவண்ணாமலையில் 13 பேர், கோவையில் 16 பேர், நாகர்கோவிலில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகர்கோவிலில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 188, 341, 353, 7(1)ஏ சி.எல்.ஏ. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் பல நகரங்களில் கைதானவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை வாங்க மறுத்ததால் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முழு விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை பாய்கிறது.

    முதல் கட்டமாக ‘நோ ஒர்க் நோ பே’ அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு வராத நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கிடையாது.

    அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கையும், தொடர்ந்து சஸ்பெண்டு நடவடிக்கையும் பாய்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    25-ந்தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

    இதை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய பணியாகும். நீங்கள் தனிக்கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளும் எந்தத்தடையும் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    இதுபோல் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #JactoGeo

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடித்து வரும் நிலையில் மெரினா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தியாகராஜன், தாஸ் ஆகியோர் தலைமையில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். எந்த நிலையிலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்நாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு.

    ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எழிலகம் வளாகத்தில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள். பின்னர் மறியல் செய்வதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரினா சாலையில் உட்கார்ந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

    மதுரை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. பணிக்கு திரும்பவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரத்தில் அரசையும், அரசு ஊழியர் பிரச்சினையை முறையாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளது. கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை. எங்களது நியாயமான கோர்க்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என இப்போது போராடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இந்த பிரச்சினையை தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எங்களைவிட அவர்கள் மீது அக்கறைப்பட யாராலும் முடியாது.

    தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு என்று கூறி பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்சினை. எங்கள் போராட்டம் தொடரும். அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    குளித்தலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலைமறியலில் 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குளித்தலை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக குளித்தலை காந்திசிலை முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ஊர்வலமாக வந்த போராட்டக்குழுவினர் குளித்தலை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இலக்குவன் மறியலை தொடங்கி வைத்தார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 78 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வைகநல்லூர் அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    குளித்தலையில் எல்.ஐ.சி ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி குளித்தலை எல்.ஐ.சி. அலுவலக வளாகத்தில் இச்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் குளித்தலை வட்ட கிளைத்தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகநாதன், முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    திருவள்ளூரில் இன்று காலை சத்துணவு ஊழியர்கள் மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    திருவள்ளூர்:

    சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கடந்த வியாழக் கிழமை முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முதல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று காலை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் 2-வது நாளாக மறியல் செய்தனர். திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதில் மாவட்டத் தலைவர் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைமணி, மாநிலத் தலைவர் சுந்தரம்மாள், மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் ஆண்டாள், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle

    ×