search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திப்பு"

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
    • ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.

    தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

    ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    இதனையடுத்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலமாகும். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க ஒவ்வொரு தேசபக்தரும் உதவ வேண்டும். பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

    • நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவிருப்பதாக அண்மையில் அறிவித்தார். இதற்கிடையில், ஜூன் 6-ம் தேதி ஜிரிபாமில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த விவசாயி சோய்பம் சரத் சிங் என்பவர் கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார். அதைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் வன்முறை வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.


    இந்த நிலையில், அஸ்ஸாமில் பெய்து வரும் தொடர் கனமழையால், 28 மாவட்டங்களில் சுமார் 22.70 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், இன்று மணிப்பூர் புறப்பட்ட ராகுல் காந்தி, பயணத்தின் வழியில், அஸ்ஸாமில் உள்ள காச்சார் மாவட்டத்திற்கு சென்று ஃபுலெட்ரல் கிராமத்தில் உள்ள நிவாரண முகாமில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். அவர்களிடம் நிவாரணம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து மணிப்பூர் சென்றார்.


    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி. தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்றவர், எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார். ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.


    சந்திப்பை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது.
    • மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடக்கும் 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இன்று மதியம் ரஷியா செல்ல உள்ளார். இன்று மற்றும் நாளை [ஜூலை 8-ஜூலை 9] ரஷியாவில் தங்க உள்ள மோடி அதிபர் புதினிடம் இருநாட்டு பொருளாதார, வணிக மற்றும் ராஜ்ய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலும் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்றது. அதன்பின் 2022 , 2023 ஆகிய ஆண்டுகளில் மாநாடு நடைபெறாத நிலையில் தற்போது இந்த வருடத்திற்கான மாநாடு நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக மோடி ரஷியா செல்ல உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக கடைசியாக ரஷியா சென்றிருந்தார் மோடி.




     

    மோடியின் வருகை குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஷ்கோவ் பேசுகையில், 'மோடி - புதினின் சந்திப்பு விரிவானதாக இருக்கும். மோடியின் வருகையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். இரு தலைவர்களும் ராஜ்ய உறவுகள் என்பதையும் தாண்டி இயல்பாக பல விஷயங்களை பேசுவர் என்று எதிர்பார்கிறோம்.மேற்கு நாடுகள் இந்த சந்திப்பை பொறாமையுடன் மிகவும் உன்னிப்பாகவும் கவனித்து வருகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு மமுக்கியத்துவம் பெருகிறது' என்று தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரினால் ரஷியா மீது மேற்கு நாடுகள் பொருளாதர தடைகளை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

    • அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
    • இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    அறிமுக இயக்குனரான ராம் கந்தசாமி எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

    இப்படத்தில் கமல்குமார்,நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி,கார்த்திக் விஜய் ,குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன்,லாவண்யா கண்மணி,நக்கலைட்ஸ் ராம்குமார் ,நக்கலைட்ஸ் மீனா ,வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இப்படக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும். குழந்தைகள் உலகத்தைத் திரையில் காட்டும் அனுபவமாக மே 31-ல் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது.


    நண்பர் வேல் மாணிக்கம் மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. நாங்கள் தயக்கத்தோடு அவரிடம் கேட்டபோது .அவர் பார்க்கலாம் என்றார். எடுத்த காட்சிகளை எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம். பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார் . சில நாள் எதுவுமே கருத்து சொல்லாமல் இருந்தார் .பிறகு சந்தித்த போது,என் மகள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார். ஆடு கிடைத்ததா இல்லையா என்று. படம் அவருக்குப் பிடித்திருந்தது சம்பளம் எப்படி இருக்குமோ என்று நாங்கள் யோசித்தபோது, அது எல்லாம் ஒன்றும் தேவையில்லை என்றார் .எங்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அளவிற்கு ஈடுபாடு காட்டிச் சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்து படத்தை உயர்த்தி உள்ளார்.

    இப்படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.
    • அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் சம்பந்தி.

    இந்நிலையில், நேற்று மாலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் மாலையில் தஞ்சையில் தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து திடீரென தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டிற்கு சென்றார்.

    அவருக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார். அப்போது அண்ணாமலையும் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு சால்வை அணிவித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    பின்னர் கிருஷ்ண சாமியும், அண்ணாமலை மட்டும் தனி அறைக்கு சென்று சில நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீண்ட காலமாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பார்க்க ஆசை. சென்னையில் சந்தித்தபோது, நான் தஞ்சாவூருக்கு வரும்போது, உங்களது வீட்டுக்கு வந்து காபி அருந்துகிறேன் என கூறினேன். அதன்படி வந்துள்ளேன்.

    இவர்களது குடும்பத்தின் மீது எங்களது தலைவர்கள் எல்லோருக்கும் பெரிய மரியாதை உண்டு. நான் தேர்தல் பிரசாரத்துக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளேன். இந்த சந்திப்பை எல்லாம் அரசியல் வட்டத்துக்குள் போட்டு அடைக்க வேண்டாம். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கிருஷ்ணசாமி வாண்டையார் கூறுகையில்:-

    நான் காங்கிரஸ் கட்சியை விட்டு, பா.ஜனதாவில் இணையமாட்டேன். எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திக்க வந்துள்ளனர். இதில் வேறு ஏதும் உள்நோக்கம் கிடையாது என்றார். இந்த சந்திப்பின்போது பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
    • பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    • மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
    • 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.

    பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

    தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-

    ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.

    அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

    20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.

    • நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.
    • இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    திருச்சி

    நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் நடிக்கும் விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைபடத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார்.

    இத்திரைப்படத்தின் ஷூட்டிங், திருச்சி - சிதம்பரம் சாலை, சிறுமருதூர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது,

    அந்த வழியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றார். காணக்கிளியநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அமைச்சரை கண்டதும், படப்பிடிப்பு குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதனை கண்ட அமைச்சர் கே.என்.நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்வையிட்டார்.

    அமைச்சர் கே.என்.நேரு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த விஷால் அவரை வரவேற்றார். அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரகனியும் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு குழுவினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் உள்ளிட்டோர், அமைச்சர் நேருவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.

    பின்னர் எந்த உதவியென்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் நேரு புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் க. வைரமணி, மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் அச்சம்-போக்குவரத்து பாதிப்பு
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    களியக்காவிளை :

    நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சற்று நேரத்தில் 10 அடி ஆழமாக மாற அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற் குள்ளாக்கியது.

    அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களும், இளைஞர்களும் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    எனவே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

    சாலை பணி நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஊட்டி,

    கூடலூர் ஒன்றிய தலைவர் கீர்த்தனா, தேவர்சோலை பேருராட்சி தலைவர் வள்ளி ஆகியோர் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நேரில் சந்தித்து பேசினர்.

    தொடர்ந்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 5 பெரிய ஊராட்சிகளை கொண்ட கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தர கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    மேலும் அடிப்படை தேவைகளுக்கான கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு மாவட்ட. நிர்வாகத்திடம் வழங்கபட்டு உள்ளது. அதற்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    கோரிக்கை மனுவை படித்து பார்த்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதுகுறித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
    • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலஅமைச்சர் கயல்விழியையும் சந்தித்தார்

    ஊட்டி,

    திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் அவர் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பத்மநாபன் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நீலகிரி தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் அ.ஜாகிர்உ சேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்தித்தனர்.
    • தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

    மதுரை

    மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஓ.சி.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 11, 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 63 பேர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளி பருவத்தில் நடை பெற்ற நிகழ்வுகளை கூறி ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது இதில் சிலர் தொழில் அதிபர்களாகவும், சுய தொழில் செய்பவர்களா கவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் சிலர் மருத்துவர், வெளிநாட்டில் பணி பொறியாளராகவும் பணி யாற்றி வருகின்றனர். மேலும் தங்களுடைய முகவரி மற்றும் தொலை பேசி எண்களை பரிமாறிக் கொண்டு பள்ளிப் பரு வத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியு டன் காணப்பட்டனர். தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

    ×