search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள்"

    • வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசினர்.
    • முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொண்டல் வழியாக வடரங்கம் கிராமத்திற்கு அரசு நகர பஸ் சென்று கொண்டிருந்தது. சீர்காழி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த ரமேஷ் பேருந்து ஓட்டிச் சென்றார்.

    அதில் நடத்துனராக வள்ளுவக்குடியை சேர்ந்த அகோரமூர்த்தி பணியில் இருந்தார்.

    பஸ்சை மன்னங்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் நிறைந்த பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசி சென்றனர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்த நொறுங்கியதோடு பாட்டிலில் இருந்த பீர் மற்றும் கண்ணாடி துகள்கள் முழுவதும் ஓட்டுநர் ரமேஷ் மீது கொட்டியது.

    நிலை தடுமாறிய ஓட்டுனர் ரமேஷ் சாதுரியமாக ஓடிய பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பஸ்சின் முன் பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சின் கண்ணாடியை உடைத்த போதை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி அருகே நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடீயோ எடுத்து மிரட்டிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிநகரை சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கல்லூரி மாணவியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட சபரிராஜன் உணவு இடைவேளையில் கல்லூரியை விட்டு வருமாறும், வெளியே செல்லலாம் என்று கூறினார்.

    இதனை நம்பிய மாணவி கல்லூரியில் இருந்து வெளியே வந்தார். அங்கு நண்பர்கள் 3 பேருடன் சபரிராஜன் காரில் தயாராக நின்று கொண்டு இருந்தார்.

    அவர்கள் மாணவியை காரில் பின் இருக்கையில் அமர வைத்து ஊஞ்சவேலம்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென சபரிராஜன் மாணவியின் துப்பட்டாவை கழற்றி உள்ளார். காரின் முன்னால் அமர்ந்து இருந்த சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்த சதீஸ் மாணவியை ஆபாசமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் பயந்தபோன 4பேரும் மாணவி கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மாணவியை தாராபுரம் ரோட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றனர்.

    பின்னர் மாணவியை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்ட இவர்கள் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் பணம் தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினர்.இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

    அவர்கள் உடனடியாக மாணவியை அழைத்துச் சென்று பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவியின் நண்பர் சபரிராஜன், மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சதீஸ், பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இவர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், நரிப்பள்ளி அருகே டாஸ்மாக விற்பனையாளர் மகரஜோதி கடந்த 16-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது அன்றைய விற்பனை தொகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீர்த்தமலை- நரிப்பள்ளி சாலையில், தெத்து முனியப்பன் கோவில் அருகே சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் ஊத்தங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (வயது 32), பரதன் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் துப்பாக்கியால் சுட்டு டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தது உறுதியானது.

    போலீசார் கைதான 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இதில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ரப்பர் குண்டை பயன்படுத்தி சுடும் ஏர்கன் துப்பாக்கிகள் சிக்கியது. பரதன் வீட்டில் இருந்து எஸ்.பி.எம்.எல். (சிங்கிள் பேரல் மஸ்லோடு கன்) ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்களும், வெடி (கரி) மருந்துகளும் சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான 2 பேர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியில் டாஸ்மாக் ஊழியர்கள் முருகன், ஆனந்தன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்புடையது தெரியவந்தது.

    கைதான வெங்கடேஷ் மற்றும் பரதன் ஆகிய 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பைக்கில் ஏற்றி வந்துள்ளனர்.

    ஆனால், வீட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே வாகனங்களை நிறுத்திய அந்த வாலிபர்கள், மாணவியை கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மாணவியை  4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். தன்னை காப்பாற்றும்படி மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் சிலர் கரும்புத் தோட்டத்திற்குள் சென்றனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்ததும் 4 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #UPGirlMolested
    கும்பகோணத்தில் வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. #GoondasAct
    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கடந்த 2-ந் தேதி வங்கி பயிற்சி பணிக்காக மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் வந்தார்.

    அப்போது ரெயில் நிலையம் அருகே வந்த ஒரு ஆட்டோவில் இளம்பெண் ஏறி, தான் செல்ல வேண்டிய ஓட்டலில் இறங்கி விடுமாறு கூறினார்.

    ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண் சொன்ன முகவரிக்கு செல்லாமல் வேறு பாதையில் ஆட்டோவை ஓட்டி சென்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டதால் ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

    நள்ளிரவில் தனியாக ரோட்டில் நடந்து சென்ற அந்த இளம்பெண்ணை 4 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அந்த பெண் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (வயது 24), மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த் (21), மூப்பனார் நகரை சேர்ந்த சிவாஜி மகன் புருஷோத்தமன் (19), ஹலிமா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (19) ஆகிய 4 பேர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்த், தினேஷ்குமார், அன்பரசன் மற்றும் புருஷோத்தமன் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 4 வாலிபர்களிடம் அதன் நகலை போலீசார் வழங்கினர். #GoondasAct
    திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவிகளை கடத்தி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிபிரியா (வயது17), காப்பிளிய பட்டியை சேர்ந்த பிச்சை முத்து மகள் கவுரி (17). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    இதனால் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கவிபிரியாவின் தந்தை மாரிமுத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமண ஆசை காட்டி மாணவிகளை 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    பெரியகோட்டையை சேர்ந்த சூர்யா (19), மகேந்திரன் (19) ஆகிய 2 பேரும் பஸ்சில் ஒட்டன்சத்திரம் வந்தபோது மாணவிகளிடம் பழகி வந்துள்ளனர்.

    பின்னர் காதலிப்பதாக கூறினர். இந்த சூழ்நிலையில் திருமண ஆசை காட்டி அவர்களை சென்னைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் குளித்தபோது நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சத்தியமங்கலம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.

    அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.

    குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.

    உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
    உத்தரபிரதேசத்தில் போனில் பேச வற்புறுத்தியதை தந்தையிடம் கூறிய மாணவியை வாலிபர்கள் உயிரோடு எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மீரட்:

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சர்தானா நகரம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தினமும் மாலையில் வீட்டில் இருந்து கோச்சிங் சென்டருக்கு டியூசன் செல்வது வழக்கம்.

    அப்போது வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு அந்த மாணவிக்கு தினமும் தொல்லை கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் டியூசனுக்கு சென்று வீடு திரும்பிய அந்த மாணவியை இடைமறித்த வாலிபர்கள் கையில் ஒரு செல்போனை திணித்தனர்.

    இந்த போனில் நள்ளிரவு நேரத்தில் தங்களுடன் பேசும்படி அவர்கள் கூறினார்கள். பின்னர் மாணவி அங்கிருந்து வீட்டுக்கு வந்துவிட்டாள். தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அந்த வாலிபர்கள் கொடுத்த செல்போனையும் தந்தையிடம் கொடுத்தாள்.

    உடனே மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் போனை கொடுத்த வாலிபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அந்த வாலிபரின் பெற்றோரிடம் புகார் செய்தனர். மேலும் கடுமையான எச்சரிக்கையும் செய்துவிட்டு வந்தனர்.

    இது, அந்த வாலிபருக்கும், அவது நண்பர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் 6 பேர் மாணவியின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லை. மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அவளிடம் சென்று எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம்? என கூறி தகராறு செய்தனர்.

    திடீரென அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்தனர். இதில், அவளது உடல் பற்றி எரிந்தது. வீட்டிலும் தீப்பற்றி கொண்டது. பின்னர் வாலிபர்கள் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

    மாணவி மீது தீ வைத்தவர்கள் ராஜ்வன்ஸ் பக்டி, தேவேந்திர பக்டி, ரோகித் சைனி, கச்சிராலா சைனி, அமன், தீபக் என்று தெரிய வந்தது.

    போலீசார் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    2004-ம் ஆண்டு இந்த ஊரில் இதே போல் பாலியல் தொல்லை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். பல நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    சர்தானா நகரில் பெண்களை கேலி செய்வது, பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக அந்த ஊர் மக்கள் புகார் கூறி உள்ளனர்.
    டிரைவரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்ற வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    பல்லடம்:

    கோவை விரும்மாண்டம்பாளையம் நஞ்சேகவுண்டன்புதூர் விவேகானந்தா வீதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஏ.கே.டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந் தார். இந்த நிலையில் கடந்த 8.3.2013 அன்று இரவு ஆனந்தகுமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசியவர் பழனிவரை செல்வதற்கு வாடகைக்கு கார் ஒன்று வேண்டும் என்றும், அந்த காரை கோவை புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு எடுத்து வருமாறும் கூறினார். இதையடுத்து ஆனந்தகுமார், டிரைவர் அருள்பிரகாசுக்கு மேற்கண்ட முகவரிக்கு செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பினார்.

    இதையடுத்து அருள்பிரகாஷ், புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு காரை ஓட்டிச்சென்றார். அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பின்னர் கார் அங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றது. அப்போது அங்கு மேலும் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் காரில் ஏறிக்கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்து கார் கோவை புறப்பட்டது. காரை அருள்பிரகாஷ் ஓட்டினார். காரின் டிரைவர் இருக்கை அருகே ஒருவரும், பின் இருக்கையில் 3 பேரும் அமர்ந்து இருந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே 9.3.2013 அன்று காலை 5 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று காரில் இருந்த 4 பேரும் கத்தியால், டிரைவர் அருள்பிரகாசை குத்தி, அவரை கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து அருள்பிரகாஷ், பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற 4 பேரையும் வலை வீசி தேடி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அருள்பிரகாசை கத்தியால் குத்தி விட்டு, காரை கடத்தி சென்று இருப்பது தர்மபுரி மாவட்டம் திண்டலனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்ற வாசுதேவன் (22), கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் நியூ காலனி வீதியை சேர்ந்த தாமஸ் அருண்பிரசாத் (22), சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூரை சேர்ந்த பிரபு(30 ) மற்றும் அவரது தம்பி அருண்(28 )ஆகியோர் என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வழக்கில் சந்திரசேகரன், தாமஸ் அருண்பிரசாத், பிரபு மற்றும் அருண் ஆகிய 4 பேரையும் பல்லடம் போலீசார் கைது செய்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பல்லடத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் சார்புநீதிமன்ற நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் சந்திரசேகரன் என்ற வாசுதேவனுக்கும், தாமஸ் அருண்பிரசாத் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், பிரபு, அருண் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எம்.பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார். 
    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 38) கட்டிட தொழிலாளி. அவருடன் அதே கிராமத்தைச்சேர்ந்த தேசூ (40), சரவணன் (28) ஆகியோர் கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு சிக்கன் பகோடா கடை முன்பாக தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மேல் மருவத்தூர் சாலையில் இருந்து வந்தவாசி நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் தீயணைப்பு நிலைய பின் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அதிவேகமாகவும் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது உரசியபடி சென்றுள்ளனர்.

    தொழிலாளர்கள் 3 பேரும் ஏன் இது போல் வேகமாக செல்கின்றீர்கள் என தட்டி கேட்டனர். அதற்கு 4 வாலிபர்களும் அப்படித்தான் செல்வோம் உன்னால் என்ன பன்ன முடியும் என கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெருமாளை முகத்தின் மீது தாக்கியுள்ளனர்.

    தடுக்க வந்த தேசூ, சரவணன் ஆகியோரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பெருமாள் உள்ளிட்ட 3 பேரும் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பெருமாள் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து. தீயணைப்பு நிலையம் பின் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகள் உமா(வயது 20). இவர் கட்டிமேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த முருகையன் மகன் வெற்றிவேலுக்கும்(25), உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு உமா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வெற்றிவேல் மற்றும் அவருடைய நண்பர்களான சுந்தரபாண்டி(22), கோகுல்(22) ஆகியோர் உமாவின் உறவினரான வடபாதியை சேர்ந்த கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த உமா, வெற்றிவேல் உள்ளிட்ட 3 பேரிடமும், எனது உறவினரிடம் என்ன பேசினீர்கள்? என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாவை தாக்கினர்.

    இதில் காயமடைந்த உமா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தங்களை தேடுவதை அறிந்த வெற்றிவேல் உள்பட 3 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து கழிவறையை சுத்தம் செய்யும் ‘ஆசிட்’டை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×