search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
    • பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

    இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தார். இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.45 கோடி நர்சு லவ்லி மோள் அச்சம்மாவுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். பரிசு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் எனது கணவர் தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன்.

    மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவேன். மீதி பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார். 

    • 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
    • 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    கடலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • சிவகாசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
    • தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் ராம்கோ கிளப் சார்பில் தென்னிந்திய அளவிலான ராம்கோ டிராபி 2023- 24-ம் ஆண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகள் பி.ஏ.சி.ஆர். பாலிடெக்னிக் மைதா னத்தில் ராம்கோ கிரிக்கெட் கிளப் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. ராம்கோ கிரிக்கெட் கிளப் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 32 அணிகளும், 480-க்கும் மேற்ப்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.

    முதல் மற்றும் 2-ம் பரிசுக்கான போட்டி நேற்று மாலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் சிவகாசியைச் சேர்ந்த சிவகாசி ஸ்டார்ஸ் அணியும், விருதுநகரைச் சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிவகாசி ஸ்டார்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விருதுநகரை சேர்ந்த அக்வா ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சிவகாசி ஸ்டார் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் பரிசையும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் பெற்றது.

    போட்டியில் சிவகாசி ஸ்டார் அணி முதல் பரிசையும், விருதுநகர் அக்குவா கிங்ஸ் அணி 2-ம் பரிசையும், ராஜபாளையம் ராம்கோ குரூப் அணி 3-ம் பரிசையும் தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராம்கோ நூற்பாலை பிரிவுகளின் தலைவர் மோகனரங்கன், முன்னாள் கூட்டுறவு வங்கியின் மேலாளரும், ராஜபாளையம் தி.மு.க. தெற்கு நகர செயலாளருமான பேங்க்ரா மமூர்த்தி, சரஸ்வதி அகாடமி நிறுவனர் மணிகண்டன், 36-வது வார்டு கவுன்சிலர் குணாகோபிநாத், 37-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் தெய்வா பேக்ஸ் குமார், அரசு வக்கீல் அழகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

    • கபடி அணிகளுக்கு பரிசுகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சியாபுரம் ஊராட்சி செவன் லயன்ஸ் கபடிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து நடத்திய கபடி போட்டியையும், ராஜ பாளையம் ஆவாரம்பட்டி யாழினி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கபடி போட்டியை யும் எம்.எல்.ஏ. தங்கப் பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில் நமது முதலமைச்சரும், விளை யாட்டுத்துறை அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் ரூ. 1 லட்சத்தை முதல் பரிசாக கொண்டு மாபெரும் கபடி போட்டி நடத்தப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பொன்னுத்தாய், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார்.
    • 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 12-ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் பிரிய தர்ஷனி, பிரேமா மற்றும் பொன் ராதா, 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள் சுஜி, சுமதி, சஹானா ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் பொன்னா டை அணிவித்து பாராட்டு கள் தெரிவிக்க ப்பட்டு கவுரவிக்கப்பட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜபதி டி.எல்.லெட்சுமண பெருமாள் கல்வி மற்றும் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் தங்கவேல் பூபதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார்.

    தென்திருப்பேரை சுற்று வட்டார தேவேந்திர குல வேளாளர் ஆன்மீக அறக்கட்டளையின் தலைவர் ராஜகுமார் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிங்ஸ்லி நிகழ்ச்சி யினை ஒருங்கிணைத்தார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், ராஜாதி பஞ்சாயத்து தலைவர் சவுந்திரராஜன், சேதுக்கு வாய்தான் பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன், குருகாட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராணி ராஜ்குமார், குரங்கணி பஞ்சாயத்து தலைவர் ஜெய முருகன், சமூக ஆர்வலர் பலவேசம், கவுன்சிலர் ஆனந்த், துர்க்கை யாண்டி, மாரியப்பன், குமார் பெருமாள், ஜெயசிங், வக்கீல் துர்க்கை ராஜா, கடம்பாகுள பாசன விவசாய சங்க உறுப்பினர் கணேசன், சுதா வீரமணி, ஆல்பர்ட் மற்றும் தென்திருப்பேரை சுற்று வட்டார ஆன்மீக அறக்க ட்டளை பொருளாளர் மாரிதுரை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சமூக ஆர்வலர் முத்து வீர பெருமாள் நன்றி கூறினார். இவ்விழாவில் பள்ளி மாண வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
    • வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வீரகாஞ்சிபுரம் கிராமத்தில் உள்ள பொன் மாடசாமி கோவில் வைகாசி கொடை விழாவை முன்னிட்டு முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன.

    போட்டியானது சிறிய மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்ப ட்டது. பின்னர் இப்போ ட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையா ளர்களுக்கும், ஒட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. திருவிழா வையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் விழா கமிட்டியினர் ராமர், மாடசாமி, காசி, செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள்,கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
    • 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலையில் அமைந்துள்ள ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கோயம்புத்தூர் ஸ்போர்பி இவெண்ட்ஸ் என்ற நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிளான "அக்வா சாலஞ்" நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெ ல்வேலி, விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.

    இப்போட்டியினை தஞ்சாவூர் நீச்சல் சங்கம் செயலாளர் ராஜேந்திரன்,

    ஸ்போர்பி இவெண்ட்ஸ் தலைவர் ரகு மற்றும் ஷியாம், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர்கள் மார்டின், ஜோன்ஸ், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை நீச்சல் பயிற்றுனர் சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்போட்டியில் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.

    நீச்சலில் ஆறு வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.

    போட்டியில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிக ளுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் ஸ்போர்பி இவெண்ட்ஸ் சார்பாக வழங்கபட்டது.

    • தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.
    • தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் கோபி. இவர் ஜார்க்கண்ட் விடுதலை புலிகள் என்ற அமைப்பை தொடங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் அந்த இயக்கம் இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அமைப்பு மூலம் தொழில் அதிபர்களை மிரட்டி கோடி கணக்கில் அவர் சம்பாதித்து வந்தார். அவர் மீது ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் மாநிலங்களில் 102 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தினேஷ் கோபி பீகார் மாநில எல்லை அருகே நேபாளத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு அவர் சீக்கியர் போன்று தன்னை மாற்றிக் கொண்டு ஓட்டல் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து இந்தியா அழைத்து வந்தனர்.

    • போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
    • 8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

    3-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கஸ்டம்ஸ் புனே அணியும், இந்தியன் பேங்க் சென்னை அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் கஸ்டம்ஸ் புனே அணி வெற்றி பெற்றது.

    8-வது லீக் ஆட்டத்தில் யூனியன் பேங்க் மும்பை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ் டல் ஆப் எக்ஸலன்ஸ்- எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகள் மோதுகின்றன.

    9-வது லீக் ஆட்டத்தில் ரெயில் வீல் பேக்டரி பெங்களுரு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை அணியும், 10-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க், நியூ டெல்லி மற்றும் நிஸ்வாஸ் ஹாக்கி டீம் பாம்போஸ் அணிகளும் மோதுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடை பெறும் இப்போட்டிகளின் தமிழ் நாடு போலீஸ் சென்னை- சாய்-எஸ்.டி.சி. பெங்களூரு அணிகள் மோதுகின்றன,

    இதேபோல் பெட்ரோ லியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ மோஷன் போர்டு -சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகளும் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, நியூ டெல்லி - ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி. கோவில்பட்டி அணிகளும், சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் - இந்தியன் பேங்க் சென்னை அணிகளும் மோதுகின்றன.

    • சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 'சிறப்பாக பணியாற்றிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருமயம் , ஆர்.ஆர்.சமுத்திரம் விற்பனையாளர் தனபாலுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், ஆலங்குடி, சிக்கப்பட்டி விற்பனையாளர் அமுதாவிற்க்கு இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம், ரேஷன் கடை எடையாளர் ராமாயிக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மீமிசல் அமுதம் அங்காடி எடையாளர் கண்ணகிக்கு இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழோடு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் சதீஸ்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
    • கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இரண்டாம் ஆண்டு தொடக்க விழாயையொட்டி நேஷனல் ஷாப்பிங் மால் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    நெற்குப்பை

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அஞ்சப்பர் டவரில் நேஷனல் ஷாப்பிங் மாலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு வாஷிங் மெஷின், பிட்ஜ், 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி., டேபிள் டாப் கிரைண்டர், மிக்ஸி, 100 வாடிக்கையாளர்களுக்கு தோசை தவா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இவ்விழாவில் நேஷனல் ஷாப்பிங் மால் உரிமையாளர் எம்.முகமது நசுருதீன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். வர்த்தக சங்க தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.

    வின்னர்ஸ் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். முதல் பரிசு வாஷிங் மெஷின் பெறுபவர் புகழேந்தி ராங்கியம், இரண்டாவது பரிசு பிரிட்ஜ் பெறுபவர் மகாலட்சுமி வளையப்பட்டி, மூன்றாவது பரிசு 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. பெறுபவர் கண்ணன் பொன்னமராவதி, நான்காவது பரிசு டேபிள் டாப் கிரைண்டர் பெறுபவர் தஸ்வின் பொன்னமராவதி, ஐந்தாவது பரிசு மிக்ஸி பெறுபவர் கதிர்வேல் நெற்குப்பை மற்றும் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒன்று வீதம் 100 தோசை தவா வழங்கப்பட்டது.

    ×