என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய்"

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-

    அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

    • கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
    • சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் 15- வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெருவாக நடந்து ஆய்வு மேற்கொண்டார் .

    அவர் அந்த வார்டு பகுதியில் உள்ள ஹென்றி ரோடு, புது குடியிருப்பு, தேவ சகாயம் தெரு , ரேச்சல் தெரு, காமராஜபுரம், எம்.எஸ்.ரோடு, குமரி காலனி, பரமதெரு , புதுக்குடியிருப்பு, சாஸ்தான் கோவில்தெரு, டிஸ்டிலரி ரோடு , டிஸ்டிலரி அப்ரோச் ரோடு ஆகிய பகுதியில் ஆய்வு செய்தார். 

    ஆய்வின்போது வெட்டூர்ணி மடம் கால்வா யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். சாலையோரம் குப்பை கள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

    மேலும் குப்பைகளை தரம்பிரித்து தூய்மை பணியாள ரிடம் வழங்க வேண்டும் எனவும் , ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் கொடுத்த னர்.

    அதனை மேயர் மகேஷ் வாங்கிக்கொண்டு விரைவில் செய்துகொடுக்கப்படும் என உறுதி அளித்தார் . ஆய்வின்போது நிர்வாக அதிகாரி ராமமோகன், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செய லாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன்,கவுன்சிலர் லீலாபாய், பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்பட பலர் உடன் சென்றனர்

    • நீரோட்டம் முழுவதுமாக தடைபட்டு காணப்படுகிறது.
    • பாசனத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனபகுதி களில் வேளாண் பணிகளுக்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று, மகசூலும் அதிக அளவில் கிடைக்கப்பெற்றது.

    பூதலூர் ஒன்றிய பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக் கொண்டான்நீட்டிப்பு கால்வாய் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பி அதன் மூலம் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    நடப்பாண்டு உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாயின் தண்ணீர் 16க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 3500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றது.

    உய்யக் கொண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தலைப்பு உள்ள பகுதியில் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து நீர் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்டாலும், அப்போது தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக இந்த நீட்டிப்பு கால்வாய் பாசன பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி சாகுபடி நடைபெற்று உள்ளது.

    இதற்கிடையில் உய்யக்கொண்டாயின் நீட்டிப்பு கால்வாய் தண்ணீர் செல்லும் கீழ்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது, அதிலிருந்து தண்ணீர் அதன் மேலே உள்ள காட்டு வாரி மூலம் வெளியேறிய கொண்டுள்ளது.

    இதனால் நீரோட்டம் முழுவது மாக தடைபட்டு போய் காணப்படு கிறதுகீழ்ப்பால உடைப்பை தற்போதுசீரமைக்க இயலாது என்று பொதுப்ப ணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக கட்டளை மேட்டு கால்வாய் மூலம் உய்யக் கொண்டான்கால்வாய் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளித்துள்ளது.

    தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலை விற்கு பாசன நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை மற்றும் வள்ளி செடிகளை அகற்றி தலைப்பின் அருகில் கீழ்ப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து அந்த இடத்தில் ஒரு மாற்று ஏற்பாடாக தண்ணீரை குழாய் மூலம் சிறு தொலைவுக்கு கொண்டு வந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ள இந்த பகுதி விவசாயிகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஏரிகளில் நீர் நிரம்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பொதுப்பணித்துறை விரைந்து செயல்பட்டு கால்வாயில் படர்ந்துள்ள செடிகளை அகற்றி விவசாயம் செய்துள்ள பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    • 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்தினால் தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
    • மறுகால்நீர் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் ½ பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து,

    இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது.ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது

    எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகா லிருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.
    • டெங்கு முதலிய கொசு தொல்லைகளும் சுகாதார கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    திருவையாறு:

    திருவையாறில் அருகே கும்பகோணம் மெயின்ரோடில் அமைந்துள்ளது காருகுடி கிராமம். காருகுடி மெயின்ரோடிலிருந்து வடபுறமாக பிரிந்து செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காவேரி பாசன மேல வாய்க்கால் சாலை பராமரிக்கப்படாமல் சிதைவுற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.மேலும், இந்த சாலையோரத்தில் உள்ள பாழடைந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும், பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் உலவும் இடமாகவும் உள்ளது.

    மேலும், மெயின் ரோடின் தென்புறத்தில் உள்ள காவிரி ஆற்றின் தலைமதகிலிருந்து காருகுடிபிரிவுச் சாலையின் மேல்புறத்திலேயே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று காருகுடி, ராயம்பேட்டை, அம்மாள்கிராம் மற்றும் பருத்திகுடி ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 800 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக உள்ள காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது.

    இதனால், மேலவாய்க்காலின் ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதோடு, டெங்கு முதலிய கொசுத் தொல்லைகளும் சுகாதாரக் கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    எனவே, காருகுடி கிராம மேல வாய்க்கால் சாலையை குண்டும் குழியும் இல்லாமல் புதுப்பிப்பதோடு,தண்ணீர் வசதியுடன் கூடிய புதிய சுகாதார வளாகம் கட்டிடவும், பாசன மேல வாய்க்காலை முழுமையாக தூர்வாரி பாசனத்திற்கும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும்படி பராமரிப்பு செய்திடவும் ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களிடம் காருகுடி கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும்
    • கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும்

    நாகர்கோவில் :

    மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவாலை டெல்லியில் அவரது அலுவலகத்தில் விஜய்வசந்த் எம்.பி. சந்தித்தார்.

    அப்போது, 19-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜாவால் திருவ னந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக ஏ.வி.எம். கால்வாய் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி பாதியில் நிறுத்தப்ப ட்டது.

    தற்போது அந்த கால்வாய் அரை குறையாக காணப்படுகிறது. இந்த கால்வாய் பணியை மத்திய அரசு ஏற்றெடுத்து முடித்தால், மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும். இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலும்.

    திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி என்பதை பிற்காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் வரையிலும், தமிழ்நாட் டின் தூத்துக்குடி வரை யில் நீட்டிக்க முடியும். மேலும், இந்த கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உய ர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும். மேலும், கன்னியா குமரி சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.

    எனவே ஏ.வி.எம்., கால் வாயை சீரமைக்க தேவை யான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.

    கன்னியாகுமரி:

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற மார்ச் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    மாசிக்கொடையை முன்னிட்டு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள மற்றும் வெளி மாவட்ட பக்தர்களும் திரளாக மண்டைக்காடு வந்து செல்வர். பக்தர்கள் நீராட மற்றும் புனித கால் நனைப்பதற்கு கோவிலின் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் பரம்பை இரணியல் கால்வாய் வழியாக பாய்ச்சப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது.

    அணை நீர் இரணியல், நெய்யூர், ஆத்திவிளை, பொட்டல்குழி, காஞ்சிர விளை, தலக்குளம், புதுவிளை, திங்கள்நகர், செட்டியார்மடம், கல்லுக் கூட்டம், லட்சுமிபுரம், கருமங்கூடல் ஆகிய சானல் வழியாக மண்டைக்காடு செல்வதால் இந்த பகுதியில் நிலத்தடி நீராதாரம் பெருகுகிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களும் பயன் பெறுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரணியல் அருகே நெய்யூர் பரம்பை என்னுமிடத்தில் இரட்டை ரெயில் பாதைக்காக இரணியல் கால்வாய் துண்டிக்கப்பட்டது.தண்டவாளத்தின் குறுக்கே தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பகுதிகளுக்கு அணை நீர் பாய்ச்ச முடியாமல் உள்ளது. தொட்டியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவை துரிதமாக சீரமைக்க வேண்டும்.

    மண்டைக்காடு பக வதியம்மன் கோவில் கொடியேற்று விழாவுக்கு முன்பாக தெப்பக்குளத்தில் நீர் தேக்க வேண்டும்.அதனால் பரம்பை இரணியல் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுவது அவசியமாகிறது. தெப்பக்குளத்தில் நீரை தேக்கினால்தான் மண்டைக்காட் டிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படும்.பரம்பை இரணியல் கால்வாயை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் மேற்படி கால்வாயில் ராட்சத குழாய் பதித்து மண்டைக்காடு தெப்பக்குளத்திற்கு நீர் பாய்ச்ச மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது
    • கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு-1 சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு ஆண்டு தோறும் ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி அணைகள் மூடப்படும். இந்த ஆண்டும் ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஆனால் மாவட்டத்தில் உள்ள சேனல்களில் தண்ணீர் கடைமடை பகுதிகளை இன்று வரை போய் சேரவில்லை. குறிப்பாக கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடை வரம்பு பகுதி வரை தண்ணீர் சென்று சேராமல் உள்ளது. பல இடங்களில் சானல்கள் சரிவர தூர்வாரப்படாத தால் மண் நிரம்பி காணப்ப டுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்ல வில்லை. தற்பொழுது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் வாழை, தென்னை, மிளகு, கத்தரி பயிர் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசா யிகள் பாதிக்கப்பட்டு உள்ள னர்.

    100-க்கும் மேற்பட்ட குளங்களும் தண்ணீர் இல்லா மல் உள்ளது. இதனால் பல கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து உள்ளது.

    எனவே விவசாயிகள் நலன் கருதி வருகிற மார்ச் மாதம் 30-ந்தேதி வரை பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதையாறு வடிகால் கோட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ. 53 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டு ஆய்வுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

    விரைவாக ஆய்வு பணிகளை முடித்து அரசுக்கு அறிக்கை வழங்கி போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    ஜோத்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள கலிபா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராம் (வயது32). இவரது மனைவி பட்லி (30).

    இவர்களுக்கு ரமீலா (12), பிரகாஷ் (10), கேகி (8), ஜான்கி (6), ஹிதேஷ் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று சங்கர் ராம், பட்லி ஆகியோர் தங்களது 5 குழந்தைகளுடன் சாஞ்சூரில் உள்ள நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது ஆடைகள் மற்றும் செல்போன் ஆகியவை கால்வாய் கரையில் இருந்தது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதில் 6 பேரின் கைகள் ஒன்றொடு ஒன்று கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த சிலர் சங்கர் ராம் குடும்பத்தி னருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தததாகவும், இது தொடர்பாக அந்த தம்பதியி னர் பஞ்சாயத்து கூட்டம் கூட்டி நீதி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அந்த கூட்டத்தி லும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சங்கர் ராம் தனது குடும்பத்தி னருடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் 25-வது வார்டு ராஜாஜி நகரில் அய்யப்பன் கோவில் எதிர்புறம் ஜாக் பள்ளிவாசல் செல்லும் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.

    அங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.

    எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 33 லட்சம் ரூபாயும், கலைஞர் மேம்பாடு நிதியில் சுமார் 16.80 லட்சம் ரூபாயுடன் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்திரின், நகர மன்ற ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், மற்றும் ஒப்பந்தர் ஜெயராம், தி.மு.க நிர்வாகிகள் அபி பேன்சி, ரஷீத் பாய், சாதிக் ஜிம், சாதிக், இஸ்மாயில் பாய், தர்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனை நிறைவேற்றி தருவதாக தேர்தலின் போது தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் உசேன் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை தற்போது நிறைவேற்றி கொடுத்துள்ளார். அவரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • ரூ.253 - கோடிக்கான அரசாணை பிறப்பித்து, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாததன் காரணத்தால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராள மான மீனவ மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக, தங்களிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் 3 கட்டங்களாக ரூ.253 - கோடிக்கான அரசாணை பிறப்பித்து, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென இந்தப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. 'ஏப்ரல்' மாதம் முதல் கடல் சீற்றம் தொடங்கும் போது பணிகள் மேற்கொள்ள இயலாது. ஆகவே, கடல் சீற்றம் தொடங்குவதற்கு முன் இந்த பணிகளை தங்கு தடையின்றி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடை முறைப்படுத்த உடனடியாக உத்தரவிட வேண்டும்.

    இரையுமன்துறை கிராமம் (மேற்கு பகுதி) மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் தாழ்நிலை படகு இணையும் தளம் அமைக்க வேண்டும். நீரோடி முதல் இரையுமன்துறை வரையுள்ள ஏ.வி.எம். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்து ஆழப்படுத்தி, முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

    புதுக்கடை – பரசேரி மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுகுடிநீர் திட்ட காங்கிரீட் குழாய்களால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக டி.ஐ.பைப்புகளை சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட கிள்ளியூர் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை குறித்தும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

    ×