search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228973"

    • லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
    • திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

    பிறகு இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. பிறகு மறுநாள் காலையில் மின்சாரம் இயக்கப்படுகின்றது.

    இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக காரியாவிடுதி, எஸ்.எஸ்.ஊரணிபுரம் பிடரில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்யும் படி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • திருச்சி ரெயில்வே பயிற்சிப் பள்ளியில் தங்கியிருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
    • அம்மை நோயா? மாநகராட்சியினர் ஆய்வு

    திருச்சி,

    திருச்சி ரெயில்வே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தவர்களில் சிலருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.ரெயில்வே பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு திருச்சியில் அமைந்துள்ள மண்டல ரெயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 400 பேர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில், பயிற்சி மையத்தில் தங்கியிருந்த இருவருக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக பயிற்சி மையத்திலிருந்த சுமார் 10 பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு ரெயில்வேதுறை சார்பில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரவர் விருப்பப்படி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுக்குறித்த தகவலறிந்த திருச்சி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், நகர்நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில், ரெயில்வே பயிற்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், கடும் வெயில்தாக்கம் மற்றும் ஒவ்வாமை (அலர்ஜி) யினால் ஏற்பட்ட கொப்புளங்கள் என்பதும், அம்மை நோய் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பயிற்சி மையம் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை படுத்தப்பட்டுள்ளது.

    • 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-

    பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு நிதிஉதவி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஒன்றியம், இனையாளூர் ஊராட்சி வடகரை புதுத்தெருவை சேர்ந்த விவசாயி எபி. இவரது வீடு மின் கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட எபி குடும்பத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தேசிய சட்ட உரிமை கழகம் சார்பில் நிதி உதவி, மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் வழங்கி ஆறுதல் கூறினார்.

    அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், துணை செயலாளர் வெங்கட்ராமன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சங்கீதா, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதி என்கிற பாரதிராஜா, நகர மன்ற செயலாளர் மணி கண்ட பிரபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் லியாத்அலி, செம்பை ஒன்றிய செயலாளர் ஜாபர்சாதிக் , ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தை சேர்ந்த சேகர், பிரேம்நாத், சிவக்குமார், பிரபாகரன், சங்கர் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.

    தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
    • சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன
    • விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

    திருச்சி, 

    திருச்சி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை (குண்டுமல்லி) பயிரிட்டுள்ளனர். குறிப்பாக போசம்பட்டி, பொடவூர், புலியூர், கோப்பு, வியாழன் மேடு, அயிலாடிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பயிர்கள் பூக்கள் பூக்கும் பருவத்தை எட்டி உள்ளது.இந்த நிலையில் சிறிய ரக ஈக்கள் மலர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் மலர் மொட்டுகள் சிவப்பு நிறமாகி அதன் பின்னர் பூக்கள் உதிர்து விடுகின்றன. மேலும் மொட்டுகளின் தரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதன் காரணமாக மகசூல் மற்றும் வருமானம் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சிறுகமணியைச் சேர்ந்த கே.வி.கே. விஞ்ஞானிகள், மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (சி.ஐ.பி.எம்.சி.) மற்றும் தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கண்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தெரிவித்தனர். இதையடுத்து பூச்சிகளை கட்டுப்படுத்த போலியார் ஸ்ப்ரேயினை வார இடைவெளியில் தெளிக்க அறிவுறுத்தினர்.

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.  இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர்.  இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.
    • கனமழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயிலடி , கான்வென்ட், ராமநாதன் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் பஸ்களும், அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு , தனியார் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பயணிக்கின்ற இந்த வழியில் ரெயில்வே கீழ் பாலம் அமைந்துள்ளது.

    ஆனால் மழை பெய்யும் நேரங்களில் இந்த ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் தேங்குகிறது.

    போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடிந்து வெளியே செல்ல வழி இல்லாததால் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    மழை நேரங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளிவதற்கு வடிகால்கள் ஓரளவு சரி செய்யப்பட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் ஒன்று வைக்கப்பட்டது.

    ஆனால் நிரந்தரமாக தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    நேற்று மாலை திடீரென பெய்த கன மழை காரணமாக கீழ் பாலம் தண்ணீர் தேங்கி, வெளியேற முடியாமல் நிரம்பியதால் இந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாக பழைய பஸ் நிலையத்திலிருந்து , புதிய பஸ் நிலையம் செல்பவர்களும், வருபவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.

    வருங்காலத்தில் இந்த மாதிரி நிலைமைகளை தவிர்த்திட, மழைக்காலம் வருவதற்கு முன்னர் நிரந்தரமாக ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் வெளியேறுவதற்குரிய பணிகளை விரைவாக செய்து முடித்து தர வேண்டும் என்று ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • .கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
    • கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை அதிகாரிகள் இடித்து தகர்த்தனர்

    கடலூர்:

    கடலூரின் முக்கிய பாலமாக அண்ணா மேம்பாலம் உள்ளது. இது கடலூர் நகரின் இணைப்பு மேம்பாலமாக இருந்து வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றது.     இங்கு ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் நாளடைவில் அதன் பயன்பாடு முழுவதும் குறைந்து வந்தது. இந்தநிலையில், மாநகராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் குழாய், இரும்பு மேம்பாலம் வழியாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த இரும்பு பாலத்தை சரியான முறையில் பராமரித்து வராத காரணத்தினால் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், கடலூர் நகரின் முக்கிய சின்னமாக இருந்து வந்த இரும்பு மேம்பாலத்தை இடித்து தகர்த்தனர்.இந்த பாலத்தின் வழியாக தான் கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ராட்சத குழாய்களும், பாதாள சாக்கடை குழாய்களும் செல்கின்றன. தற்போது புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ராட்சத குடிநீர் குழாய்களையும், பாதாள சாக்கடை குழாய்களையும் வேறு வழியாக மாற்றி அமைக்கும் வகையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பில் ஆற்றின் குறுக்கே மண் பாதை அமைக்கப்பட்டு, அதன் மூலம் பணியாளர்கள் சென்று குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் கனமழையால் கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக குழாய் அமைப்பதற்காக அமைக்கப்பட்ட பாதை அந்த நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பாதையை விரைந்து சீரமைத்து, குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×