search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.மேலும் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    • சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை செய்தனர்.
    • 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் புரோக்கர்களான 3 பேரை கைது செய்தனர்.
    • வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் அட்கோ போலீசார் சோதனை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அஞ்சலகிரியை சேர்ந்த சின்னபிட்டப்பா மகன் சீனிவாஸ் (வயது25), கிருஷ்ணகிரி பாரதிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திருப்பதி (32), பெங்களூரு பண்டே பாளையா சின்னசாமி லேஅவுட்டை சேர்ந்த முனுசாமி என்கிற முனி (48) என்பதும், வீட்டை வாடகைக்கு எடுத்து வடமாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும் தெரிந்தது. உடனே போலீசார் புரோக்கர்களான 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஓசூர் அட்கோ போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியில் வெங்கட்ராமன் என்பவரது வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விபசாரத்தில் ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணையும், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் (வயது24), வீட்டின் உரிமையாளர் வெங்கட்ராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த உப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 20). இவர் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் தினமும் சதீஸ்குமார் மதுக்குடித்துவிட்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்களை கையால் அடித்து மிரட்டுவதும், பாட்டிலில் பெட்ரோல் வைத்து ஊற்றி தீவைத்து விடுவதாக மிரட்டுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது போதை பாக்கு தயாரித்து விற்றது தெரியவந்தது.
    • மாவா பொருட்கள், 2 கிரைண்டர், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை:

    கோடம்பாக்கம், காமராஜர் காலனி பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது போதை பாக்கு தயாரித்து விற்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் தந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 கிலோ மாவா பொருட்கள், 2 கிரைண்டர், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ராஜ்குமார் கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை மர்ம நபர் திருடி சென்றார்.
    • போலீசார் 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    காரமடை அருகே உள்ள சேரன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவர் அந்த பகுதியில் லான்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த இஸ்திரி பெட்டியை யாரோ மர்ம நபர் திருடி சென்றனர்.

    இது குறித்து அவர் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இஸ்திரி பெட்டியை திருடிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் (24), சந்துரு (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது.
    • ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளிய சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர், அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யபட்டார்
    • நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் மங்களமேடு அடுத்துள்ள எறையூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

    ஜெயங்கொண்டம்,

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (வயது 23). கட்டிட தொழிலாளியான இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டம் கரடி குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமியை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி புறப்பட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன ச்செல்வன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
    • திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேஷன்சாவடி ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வீட்டில், கடந்த மார்ச் 27-ந் தேதி பட்டப்பகலில், 9 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

    இதேபோல், வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சின்னசாமி என்பவர், குடும்பத்தோடு வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மகும்பல், 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

    மேலும் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சிசில்தேவன் என்பவரது வீட்டிலும், அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பவர் வீட்டிலும் இந்த மர்ம கும்பல் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

    இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் தொடர் கைவரிசை காட்டி வந்த இந்த திருட்டு கும்பலை பிடிக்க, வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரி சங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், இந்த மர்ம கும்பல் குறித்து துப்பறிந்தனர்.

    அதன்படி, வேறொரு திருட்டு வழக்கில் சிக்கி, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இந்த கும்பலைச் சேர்ந்த கருமந்துறை தாழ்வீதி தேவா (வயது 49). மற்றும் இவரது சிறை நண்பரான தூத்துக்குடி லாசர் (47) ஆகிய இருவரையும், 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, வாழப்பாடிக்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில், இந்த கும்பல் வாழப்பாடி மற்றும் கருமந்துறை பகுதியில் 4 வீடுகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இவர்களிடமிருந்த திருட்டு நகைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து மீண்டும் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

    மேலும் இந்த திருட்டு கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவர் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை பிடித்து நகைகளை கைப்பற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் நேற்று மாலை வெள்ளகோவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது முத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×