search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 236395"

    • பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
    • உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவன் திருவேங்கடபுரம் மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பள்ளி ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க தெரிவித்தார்.

    அதன்பேரில் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் ஊழியர்கள் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

    இதனால் கடும் வேதனைக்குள்ளான மாணவனின் பெற்றோர் தனியார் எக்ஸ்ரே சென்டரில் சென்று பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்தனர். அப்போது நாணயம் வயிற்றினுள் சென்றதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    பொன்னேரியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவசர மருத்துவ தேவைக்கு வரும்போது போதிய மருத்துவர்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி இருந்தும் நோயாளிகள் வெளியில் சென்று எடுத்து வருகிறார்கள். முழு உடல் பரிசோதனை ஸ்கேன் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ரத்தவங்கி செயல்படாமல் மூடியே இருக்கிறது. உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.

    இதனால் போகும் வழியிலே உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார்.
    • மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமாரனந்தபுரம் அருள்ஜோதி புரம் முதல் வீதியைச் சேர்ந்தவர் கனிமொழி (48). இவரது ஒரே மகன் அபிராம் (16). அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பக்கத்து வீட்டில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு சென்றுள்ளார். விழாவை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

    அப்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் சாக்கடை கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் பலகையால் மூடி வைத்துள்ளனர்.

    இதனை கவனிக்காத அபிராம் பலகையில் கால் வைத்த போது தவறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அப்போது திடீரென அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்ட் சுவரும் பள்ளி மாணவன் மீது விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பள்ளி மாணவனின் தாயார் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் குழியில் விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்த மனோஜ்பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மனோஜ்பாண்டி (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவன் பலி

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (16). இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை நண்பர்கள் இருவரும் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தபடும் டிராக்டரில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த மனோஜ்பாண்டி தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டவேட்டர் எந்திரத்தில் சிக்கினார். இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு புளியங்குடி இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் மனோஜ்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாளை தியாகராஜநகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் அரிராமகிருஷ்ணன் (வயது 15). பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • அரிராமகிருஷ்ணன் சரியாக படிக்காமல், எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    பாளை தியாகராஜநகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி.

    பள்ளி மாணவன்

    இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் அரிராமகிருஷ்ணன் (வயது 15). பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்நிலையில் அரிராமகிருஷ்ணன் சரியாக படிக்காமல், எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அவனது பெற்றோர் கண்டித் துள்ளனர். இதனால் மனமுடைந்த அரிராம கிருஷ்ணன் நேற்று விஷத்தை குடித்து விட்டான். அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அரிராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திலீபன் மற்றும் அவனது தம்பி வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
    • ஒழுங்காக படிக்க வேண்டும் எனகண்டித்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தை அருகே உள்ள சுக்கம்பாளையம் காலனி பகுதியை சேர்தவர்கள் சேகர் - சத்யா தம்பதியர்.இவர்களுக்கு திலீபன்(வயது13) மற்றும் அகரன்(8) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திலீபன் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல திலீபனது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், திலீபன் மற்றும் அவனது தம்பி வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனிடையே திலீபன் வீட்டில் இருந்த அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவனது தம்பி அகரன் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அறைக்குள் சென்று பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த திலீபனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவனது தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வரும் திங்கட்கிழமை அன்று பள்ளியில் அவனுக்கு தேர்வு நடைபெற உள்ளதால், அவனது தாயார் நீ எங்கும் விளையாட போகக்கூடாது, ஒழுங்காக படிக்க வேண்டும் எனகண்டித்ததாக கூறப்படுகிறது. உடன் படிக்கும் நண்பர்கள் விளையாடும் போது தான் மட்டும் படிப்பதா என வேதனையில் இருந்த அவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.
    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    வெள்ளகோவில்:

    முத்தூா் சின்னமுத்தூா் பழனியப்பபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நூற்பாலையில் அரிச்சந்திரன் என்பவா் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் மதீஷ் (வயது 13) சின்ன முத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாா்.

    இவா் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வர தாமதமாகியுள்ளது. இதனால் அவரது தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றவா் வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இது குறித்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.
    • படுகாயமடைந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்த அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாணவனின் நலம் விசாரித்தார். சிகிக்சைக்கான செலவை முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அறிவித்தார்.

    • தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
    • மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.

    நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பெருமாநல்லூர் நியூகாளிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகன் சுதர்சன் (வயது 14). பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுதர்சனின் கண் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்தால் சத்தம் போடுவார்கள் என்று பயந்த சுதர்சன், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • பள்ளி மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

    களியக்காவிளை: 

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் 25ஆம் தேதி முதல் மாணவன் அஸ்வினுக்கு காய்ச்சல் அடித்துள்ளது. அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிட் திரவம் உட்கொண்டதால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி  மாணவன் அஸ்வின் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
    • ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

    அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×