என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி."
- ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி.
- நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.
அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது.
நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு" என்றார்.
- ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகும்- கார்கே.
- வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள்- ரவி சங்கர் பிரசாத்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-
இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.
(மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.
கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன
- நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஜூலை 19 அன்று தொடங்கிய 4-வது ஜி-20 EWG மற்றும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சர்களின் சந்திப்பு இன்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உலகளாவிய பணியாளர்களின் நலத்திற்கான செய்தியாக இந்த சந்திப்பு அமைந்திருப்பதாக நான் நம்புகிறேன். அதிக அறிவுத்திறன் மற்றும் செயல்திறன் வாய்ந்த பணியாளர்களை உலகிற்கே வழங்கும் நாடாக திகழ இந்தியாவிற்கு தகுதி உள்ளது.
நான்காவது தொழில் புரட்சி காலமான தற்போது தொழில்நுட்பமே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சக்தியாக திகழ போகிறது. கடந்த தொழில்நுட்ப புரட்சியின்போது அதிகளவில் வேலைவாய்ப்புகளை இந்தியாதான் உருவாக்கியது. அதனாலேயே இந்த சந்திப்பு இங்கு நடைபெறுவது சிறப்பானது. பல "ஸ்டார்ட் அப்" (start-up) நிறுவனங்கள் இந்தூரில் தொடங்கப்பட்டு வருகிறது.
ஓரிடத்திலேயே தங்கி பணியாற்றாமல், வீட்டிலும் அலுவலகத்திலும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தங்கள் திறமைகளை வெளிப்டுத்தும் ஒரு பணியமைப்பு உருவாகி விட்டது. இதனை வளர்ப்பதறற்கு ஜி-20 தலைமை தாங்க வேண்டும்.
வேலைவாய்ப்புகளுக்காக கல்வித்தகுதி மற்றும் பணித்திறனின் அடிப்படையில் ஒரு உலகளாவிய பட்டியலிடுதலுக்கான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
வேலைவாய்ப்பு துறையில் பல்வேறு உலகளாவிய மாற்றங்கள் வரப்போகின்றன. இத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
திறன் வளர்த்தல், திறன் மறுசீராய்தல் மற்றும் திறன் மேம்படுத்துதல் ஆகியவையே நமது மந்திரமாக கொள்ள வேண்டும். இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் இதற்காகவே கொண்டு வரப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம், ஐஓடி மற்றும் டிரோன் தொழில்நுட்பம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்
- 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளம் வருகிறார் பிரதமர். அங்கிருந்து தொடக்க விழா நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்