search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிணம்"

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.

    தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆரணியில் மயான பாதையின்றி விவசாய நிலத்தில் பிணத்தை தூக்கி செல்வதால் பெரியளவில் விவசாயம் பாதிக்கபடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களை செய்யாற்றை ஆற்று படுக்கை அருகில் உள்ள மயானத்தில் புதைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மேலும் கடந்த 30ஆண்டுக்கு மேலாக மயானத்திற்கு செல்லும் வழியில் தனியார் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாகவும் இதனை தடுக்க ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த ஓரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இறந்தவர்களின் சடலத்தை விவசாய நிலத்தில் கொண்டு செல்வதால் விவசாயம் பெரியளவில் பாதிக்கபடுகின்றன.

    நேற்று முன்தினம் இறந்த ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(75) என்பவரின் சடலத்தை கொண்டு செல்லும் போது விவசாய நிலத்தை சேதபடுத்தி செல்ல நேரிட்டது.

    பிணத்தை சுமந்து சென்ற சில பேர் விவசாய நிலத்தில் விழுந்ததால் விவசாய நிலமும் சேதமடைந்து பொதுமக்களும் காயமடைந்தனர்.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி சாலை விரிவுபடுத்த வேண்டும் என்று கிராம பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    ஓசூர் அருகே தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சர்ஜாபுரம் சாலையில் தனியாருக்கு சொந்தமான லே-அவுட் உள்ளது. இந்த லே-அவுட்டில் தைல தோப்பும் உள்ளது. நேற்று மாலை அந்த தைல தோப்பில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரித்துகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். 

    அவரது உடல் அழுகியும் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு வீசப்பட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பாகலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது வாலிபர் காணாமல் போனாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக பகுதியில் கொலை செய்யப்பட்டு வாலிபர்கள் பிணம் ஓசூர் பகுதியில் வீசப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தைல தோப்பில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் கரூப்பூர் ரெயில் நிலையம் - தின்னப்பட்டிக்கு இடையே நாலுக்கால்பாலம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபரின் சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது. அதை பார்த்த போது அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரன் மகன் சுஜீஸ் என இடம் பெற்றிருந்தது.இதனால் இறந்தது சுஜீஸ்தானா? என்பது குறித்தும், அவர் எப்படி இறந்தார்? ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் எண்ணூர் கடற்கரையில் பிணமாக கிடந்தான். நண்பர்களுடன் குளிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வம் என்கிற சாமுவேல்(19). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி, பள்ளியில் நடைபெறும் தனி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற செல்வம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

    அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித பலனும் இல்லை. மாணவர் செல்வம் மாயமானது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எண்ணூர் கடற்பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவர் செல்வம் என்பது தெரியவந்தது.

    கடந்த 13-ந்தேதி நண்பர்களுடன் சென்னை விம்கோ நகரையொட்டி உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று செல்வம் குளித்து உள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி மூழ்கி இருக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மனைவி விஜி (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    இவர் தான் குடியிருக்கும் மாடி வீட்டின் கீழ் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் முருகேசனுக்கும், அவரது மனைவி விஜிக்கும் இடை யே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக  கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த விஜி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் விரைந்து சென்று விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் விஜியின் தம்பி சரவணன் தனது அக்காவை அடித்து கொலை செய்து தூக்கி போட்டு விட்டதாக கீரமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

    இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமாக  என விசாரித்து வருகிறார்கள்.
    கரூர் அமராவதி ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை பிணமாக மிதந்தார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு அருகே அமராவதி ஆற்றின் அருகே பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது ஆற்றின் நடுபகுதியில் முட்புதரில் சிக்கிய நிலையில் பிணம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனே இது குறித்து கரூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாணை மேற்கொண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் 45 வயது மதிக்க திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை மர்ம நபர்களை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனே தெரியவில்லை. கரூர் பகுதியில் உள்ள திருநங்கைகள் சங்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த ஊர் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் உடலில் எந்த காயமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மர்ம மரணமாக குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    வாணியம்பாடி அருகே பூட்டிய வீட்டுக்குள் தாய், மகன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெல்லக்குட்டை பூவாங்கா மரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (60), விவசாயி. இவர், 80 வயதை கடந்த தாய் காத்தாயி அம்மாளுடன் தனியாக வசித்து வந்தார்.

    பிரகாசத்திற்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். இந்நிலையில் பிரகாசத்தின் வீட்டிற்குள் இருந்து இன்று காலை திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

    அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, வீட்டருகே சென்று பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுப்பற்றி ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாயில் காத்தாயி அம்மாள் பிணமாக கிடந்தார்.

    பிரகாசத்தின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தது. உடல்களும் அழுகி துர்நாற்றம் வீசியது. இதை வைத்து பார்க்கும் போது, அவர்கள் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் தாயை கொன்று விட்டு பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது .

    இந்த நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடுபட வேண்டும் என்ற கவலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி குடிமக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர் அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலமானது விவசாயிகளும் , விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. பிணத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என்பதால் இறந்த அய்யனாருக்காக வருந்துவதா? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் தங்கள் காலிலேயே மிதிபடு வதைக் கண்டு வருந்துவதா? என்று வேதனைப்பட்டு கொண்டே விளைநிலங்களில் இறங்கி மயானத்துக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் . உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என்பது உயிரோடு உள்ள எங்களின் கோரிக்கை மாத்திரமல்ல , இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கை என்கின்றனர், ஆப்பரக்குடி பொதுமக்கள்.

    நாமக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் கார் டிரைவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், கா.வேட்டிப் பட்டி, சிட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் கிருஷ்ணமூர்த்தி (வயது29), ரஞ்சித்.

    இதில் கிருஷ்ணமூர்த்தி கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ரஞ்சித் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ண மூர்த்திக்கும், நாமக்கல்லை சேர்ந்த கார்த்திகா (25) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 3 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    கிருஷ்ணமூர்த்தி நேற்று காலையில் நாமக்கல் அருகே உள்ள இலத்துவாடி பகுதியில் வசித்தும் வரும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக இலத்துவாடி பகுதி வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்தார். இன்று காலை பொதுமக்கள் பார்த்து, இது பற்றி நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ண மூர்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மனைவி கார்த்திகா அங்கு வந்து கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.

    நாமக்கல் ரெயில்வே தண்டவாள பகுதி சேலம் ரெயில்வே போலீசார் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே, யாரேனும் ரெயிலில் அடிப்பட்டு இறந்தால் உடலை மீட்டு சேலம் ரெயில்வே போலீசார் தான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால், நாமக்கல் போலீசார், கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அவரது தம்பி ரஞ்சித் மற்றும் குடும்பத்தினர் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கிருஷ்ணமூர்த்தி இறப்பு குறித்து முழுவிசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆர்.எஸ்.புரம் அருகே குளத்தில் 35 வயது ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கிருஷ்ணாம்பதி குளத்தில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு குளத்தின் தென் மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தனியாக வசித்து வந்த இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. இவரது சைக்கிள் குளத்தின் கரையில் நின்றது. எனவே இவர் குளத்துக்குள் கால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதே குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள செல்வாம்பதி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது கூட இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. அடுத்தடுத்து குளத்துக்குள் இருந்து உடல்கள் மீட்கப்படும் சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பத்தை அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். இவரும், அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த கவிப் பிரியா (24) என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுதியன் என்ற மகன் உள்ளான்.

    நேற்று சவாரிக்காக காரில் வீரக்குமார் வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டில் தனிமையில் இருந்த கவிப்பிரியா திடீரென்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனே கவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொங்கரையானூர் வந்தனர். அங்கு தூக்கில் பிணமாக தொங்கிய கவிப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று கவிப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து கவிப்பிரியாவின் பெற்றோர் போலீசில் அளித்துள்ள புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×