search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.
    • தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    மகாபாரதத்தில் துரியோதனன் செய்த செயல்களே அவரை பெரிய வில்லனாக கூறுகின்றன. உண்மைதான். ஆனால் துரியோதனனிடமும் பல நல்ல குணங்கள் இருந்தன.

    * அவனது நாட்டினைப் பொறுத்த வரையில் குடிமக்களின் மீது மிகுந்த அக்கறை கொடுத்தான்.

    * தன் உடன் பிறந்த சகோதரர்களை சிறப்பாக பாதுகாத்தான்.

    * யுத்தத்தில் கடைசி வரை சிறந்த வீரனாக இருந்து மடிந்தான்.

    * தன் மனைவியினை அன்போடும், மரியாதையோடும் நடத்தியவன்.

    * தன் நண்பன் கர்ணனுக்காக தயங்காமல் சமுதாயத்தில் கவுரவ நிலையினை ஏற்படுத்தியவன். ஆனால் பல அழிவுப் பூர்வமான சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டான்.

    * மகா பாரத யுத்தம் நாட்டு நன்மைக்காக நடத்தப்பட்டது அல்ல. துரியோதனின் தீய எண்ணத்தினால் நடத்தப்பட்டது. பாண்டவர்களுக்கு 5 வீடு கூட தர மறுத்து தன்னை மிகவும் தீயவன் ஆக்கிக் கொண்டான் துரியோதனன்.

    * பாண்டவர்கள் உலகில் எங்கு வாழ்வதை யும் துரியோதனன் வெறுத்தான். இந்த அளவு அதிகமான வெறுப்புணர்ச்சியே துரியோதன னுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் தீமையை ஏற்படுத்தியது.

    * அதிகம் தீய யோசனைகளைச் சொன்ன 'சகுனி'யைச் சார்ந்து இருந்தான். அவன் சொல்படியே நடந்தான்.

    * தன் நலனுக்காகவே எதனையும் செய்தான்.

    * திரவுபதி பெண்தானே. பல வீனமானவள் என தப்பு கணக்கு போட்டு மிக கீழ்தரமாய் நடந்தான். திரவுபதியின் பிறப்பு, பலம் இதனை கணிக்கத் தவறி விட்டான்.

    இந்த தீய குணங்களினால் துரியோதனன் இழந்தது ஏராளம், ஏராளம். பேராசையும், மூர்க்கத்த னமும் ஒரு சாம்ராஜ்யத்தினையே சீரழித்தது. துணிச்சல் உடைய வனாக இருந்தும் தலைமைப் பதவிக்கான தகுதிகள் இருந்தும், அனைத்து பிரச்சினைகளையும் (அவனே உருவாக்கியது ஆனா லும்) எதிர் கொண்டாலும் அவன் அழிவினை தீய குணங்களே ஏற்படுத்தின என்பதே உண்மை.

    * என்னால் முடியாது என்று சொல்வதற்கு முன் நீங்கள் அதனை முடியும் என்று சொல்ல ஏதாவது முயற்சி செய்தீர்களா?

    * காலை முதல் இரவு வரை தன் பிரச்சினை ஒன்றினைப் பற்றியே பேசுவது, நினைப்பது, புலம்புவது, பின் மறுநாளும் அதனையே தொடருவது என்ற வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா?

    * இப்படி இதனையே நீங்கள் பேசுவதால் அதுவே உங்களிடம் வந்து விடுமாம். தேவையா இது? ஆக நல்லவற்றினை மட்டுமே நினைத்து பழகுவோமே!

    * அப்படி நினைத்தால் நீங்கள் விரும்பியதே உங்களுக்கு வரும்.

    * பயம், தயக்கம் என்று வந்து விட்டால் போதும் தோல்வி ஓடி வந்து பசை போல் ஒட்டிக் கொள்ளும்.

    *ஆக அழிவுப்பூர்வமான எண் ணங்கள் பக்கமே கூட போகா தீர்கள்.

    * எனக்கு கடவுள் எதுவுமே கொடுக்க வில்லை என்று எண்ணாதீர்கள். '10 கோடி' ரூபாய் தருகி றேன். உன் இரண்டு கால்களை யும் கொஞ்சம் வெட்டிக் கொள் என்றால் நீங்கள் சம்ம திப்பீர்க ளா? ஆக விலை மதிப் பற்ற பல பொக்கிஷங் களை இறைவன் நமக்குத் தந்துள்ளார் என்பதே உண்மை.

    * அவரவரின் முதல் எதிரி அவரது சோம்பல்தான். இருப்பதைக் கொண்டு நிறைவு காணாவிடில் வாழ்வு துக்கம் நிறைந்தது ஆகி விடுகின்றது.

    பற்றற்ற வாழ்க்கை போன்ற ஒரு சவுகரியமான வாழ்க்கை கிடையாது. ஆனால் அவ்வாறு அநேகராலும் வாழ முடிவதில்லை. தெரிந்து எந்த குற்றங்களும், அதாவது சொல், சிந்தனை, செயல் இவற்றினால் செய்யாமல் இருந்தாலே மனம் தெளிவாக இருக்கும்.

    இறைவனைத் தவிர யாரிடமும் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம். கேட்கவும் வேண்டாம். அப்படி இருந்தால் உங்கள் மீது மரியாதையினையும், கவுரவத்தினையும் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

    இறைவனுக்கு நம்மிடம் இருப்பதைக் கொண்டு செய்தாலே போதும். மற்றவர்களை கொள்ளையடித்து நான் இறைவனுக்கு செய்கிறேன் என்பதனை இறைவன் ஒரு போதும் ஏற்பதில்லை.

    நீலஸ் என்பவர் இளம் வயதிலேயே போர் திறமையை நன்கு அறிந்த காரணத்தினால் சோழ மன்னர் முத்தரையா என்பவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார். மிகத் திறமையாக பணியாற்றியதால் முத்தரையர் நீலனை ஆல என்ற நாட்டிற்கு அரசனாகவே ஆக்கினார். இந்நாட்டின் தலைநகரம் திருமங்கை என்பதால் திருமங்கை அரசன் என்றே குறிப்பிடப்பட்டார்.

    எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து அவர்களை அழித்ததால் 'பாகாலன்' என்ற பெயர் பெற்றார்.

    திருமங்கை மன்னர் குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார். அவரது மனைவியின் வேண்டுகோள்படி 1008 வைணவர்களுக்கு தினமும் விருந்து அளித்தார். இப்படி தொடர்ந்து செய்ததால் இவரது செல்வம் வெகுவாய் குறைந்தது. இருப்பினும் இவர் மனைவிக்கு அளித்த வாக்குறுதியினை விடவில்லை.

    ஆகவே கொள்ளையடித்து அதில் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளித்தார். இதனை இறைவன் விரும்புவாரா? இல்லை ஏற்றுதான் கொள்வாரா? ஓருநாள் இறைவனும், இறைவியும் மணக்கோலத்தில் அதிக நகைகளை அணிந்து கொண்டு அவ்வழி வந்தனர். மன்னரும் அவர்களது நகைகளை கொள்ளையடித்து மூட்டைகளாகக் கட்டினார்.

    ஆனால் என்ன ஆச்சரியம்? அந்த மூட்டைகளை அவரது ஆட்களால் நகர்த்தக் கூட முடியவில்லை. கோபம் அடைந்த திரு மங்கை மன்னர் மணமகனாக இருந்த திரு மாலைப் பார்த்து 'நீ ஏதோ மந்திரம் செய்துள் ளாய்? அந்த மந்திரத்தினை உடனடியாக சொல். நான் இந்த மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மன்னர்.

    திருமால் மன்னரை அருகே வருமாறு அழைத்தார். மன்னன் காதில் ரகசியமாக "நாராயணா" என்றார். அதனை உச்சரித்த வுடன் மன்னன் தெளிவு பெற்றான். தன் தவறுகளை உணர்ந்து திருந்தினான்.

    திருமாலும், மகாலட்சுமியும் மன்னனுக்கு காட்சி அளித்தனர். மன்னன் அனைத்தினையும் துறந்தான். திருமாலை பாடி துதித்து திருமங்கை ஆழ்வார் என்றும் ஆனார்.

    இந்த கதை உணர்த்துவது என்ன? இறைவனுக்கே என்றா லும் இறைவன் திருட்டினை ஏற்ப தில்லை. அப்படியிருக்க சுய நலத்திற்காக திருடி விட்டு சாமிக்கும் நான் ரூ.100 பூ வாங்கி னேன் என்று கூறுவது பாவமே. இறைவன் அதனை ஏற்பதில்லை என்பதே உண்மை.

    பெரிய தவறு செய்பவர்க ளுக்கும் திருந்த இறைவன் வாய்ப்பு தருகின்றார்.

    ராவணனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அதிகம். "இன்று போய் நாளை வா" என்று கூட வாய்ப்பு கிடைத்தது. ராவணனால் தன்னை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

    கர்ணனுக்கும் கிருஷ்ணன் அனைத்தையும் விளக்கினார். 'செஞ்சோற்று கடன்' என்பதற்காக கர்ணன் தவறு எனத் தெரிந்தும் துரியோதனன் பாதையில் சென்றான்.

    பெற்ற மகனான பிரகலாதனை வெகு காலம் ஹிரண்யன் கொடுமை செய்தான். இறுதியில் இறைவன் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழித்தார்.

    துரியோதனனுக்கு கிருஷ்ணன் 'ஸ்ரீமன் நாராயணனே' என்று நன்கு தெரிந்தும் தன்னை திருத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் அர்ஜுனனோ சரணாகதி வழியில் கிருஷ்ண னிடம் வந்தான்.

    முதலில் நம் பெற்றோர் சொல்வதை பெரியோர் சொல்வதை, ஏற்க, செயல்பட கற்க வேண்டும். பல கர்மாக்கள் நம்மை சேராமல் அவர்கள் அறிவுரையே நம்மை காப்பதற்கு அரணாக நிற்கும்.

    எத்தனை முறை எழுதினாலும், எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் ஞாப கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய சில வரிகளை நாம் பார்ப்போம். இவை களை நடை முறைப்படுத்தா விட்டால் இன்றி ஒரு வர் தன்னுள் ஒளி யினைத் தேட முடியாது.

    * அதிக அழி வுப்பூர்வமான சிந்தனை, செயலில் இருப்பவர்கள் உட னடியாக அதனை விட்டு வெளிவர வேண் டும். இது ஒரு சுழல். ஒருவரை அழித்து விடும்.

    * காலை முதல் மாலை வரை புளி மூட்டை போல் அசையாது அமர்ந்தே இருப்பது கொடுமையான தற்கொலைக்குச் சமம்.

    * அதிக மது அருந்துதல். இதன் தீங்கினை சொல்லாதவர்கள் இல்லை.

    * உடற்பயிற்சி அன்றாடம் 20 நிமிடமாவது அவசியம். * சூரிய ஒளியினை உங்கள் உடலும், ஆத்மாவும் பெற வேண்டும்.

    * அதிக சர்க்கரை, அதிக உப்பு இவை ஒருவர் அவரே அவரது ஆயுளை குறைத்துக் கொள்ளும் பாதை.

    * உணவில் ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லையெனில் ஒருவர் வரும் புலன்களை கட்டுப்படுத்துவது கடினம்.

    * செல்போனிலேயே வாழ்க்கையை செலவிடுபவர் தன் வாழ்வினை வீணடிக் கின்றார்.

    * கோபம், எரிச்சல், முரட்டுத்தனம் இவை ஒருவரை அழிக்கும் ஆயுதங்கள்.

    * சற்று ஓய்வு, பொழுது போக்கு அவசியமே.

    * சுத்தமான ஆடை அணிவது அவசியம்.

    * எப்போதும் சோர்ந்த, பலவீனமான முகம் வெற்றி தராது.

    * ஒருவரை நேருக்கு நேர் பார்த்து பேச வேண்டும். உங்களது கம்பீரம் உயரும்.

    * நிதானமாய், தெளிவாய், கூச்சலின்றி பேச வேண்டும்.

    * பசியோடு அதிக நேரம் இருப்பது கடினம்தான். சேமிப்பு என்பதும் கடினம்தான்.

    நல்ல புத்தகங்களை படிப்பது கடினம்தான். இந்த கடினத்தினை நாம் பின்பற்றினால் வெற்றி நமக்குதான்.

    • எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    அம்மனாக உங்கள் அழகு மீனா...

    கொஞ்சம் யோசித்து பாருங்கள்... துள்ளித்திரியும் இளம் வயதில் மாடல் உடைகளில் கலக்கிய காலம். காதல், டூயட், ஆட்டம், பாட்டம் என்று திரை களத்தில் கலக்கி கொண்டு இருந்த நேரம். திடீரென்று அம்மன் வேடத்தில் என்னை கொண்டு நிறுத்தினால் எப்படி இருக்கும்....?

    உண்மையிலேயே அப்படி நிறுத்தியும் விட்டார் டைரக்டர் ராமநாராயணன் சார். அந்த காலக்கட்டத்தில் பக்தி படங்களை எடுப்பதில் அவர் வல்லவர் மட்டுமல்ல, அந்த படங்கள் மூலம் மக்களை கவர்ந்தவர். 'பாளையத்தம்மன்' என்ற படத்தில் பாளையத்து அம்மனாக என்னை நடிக்க கேட்டார்கள்.

    அந்த படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர். விஸ்வநாதன் சார். அவரிடம் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே பல படங்களில் நடித்திருக்கிறேன். அதனால் என் மீது அதிக அக்கறை கொண்டவர். அந்த படத்திற்கு என்னை தேர்வு செய்வதாக பேச்சு எழுந்த போதே மீனா நம்ம பொண்ணாச்சே. சூப்பரா இருக்கும் என்று அவரும் சொல்லியிருக்கிறார்.

    ஆக, படத்தில் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால் எனக் குத்தான் என்னையும் அறியாமல் ஒரு விதமான பயம் மனதில் எழுந்தது. குடும்ப பாங்கான கதைகள், காதல் கதைகள், நகைச்சுவை, சோகம் என்று பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடிக்க தெரியும். கடவுள் வேடத்தை போட்டுக்கொண்டு எப்படி நடிப்பது என்ற தயக்கம் மனதிற்குள் இருந்தது.

    எப்படி இருந்தாலும் ஒத்துக்கொண்டாயிற்று. இனி நடித்து தானே ஆக வேண்டும்...? அதற்கா கவே அந்த காலங்களில் பக்தி படங்களில் அம்மன் வேடங்களில் எல்லோரையும் கவர்ந்த கே.ஆர்.விஜயா அம்மா, நவராத்திரியில் சாவித்திரி அம்மா ஆகியோர் நடித்த படங்களை பார்த்தேன். அந்த படங்களில் தலையில் அம்மன் கிரீடத்தையும் சுமந்த படி கையில் திரிசூலம் போன்ற ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு எப்படி நடித்திருக்கிறார்கள்? அவர்கள் உடல் அசைவுகள், முக பாவனைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்கு தயாரானேன்.

    இருந்தாலும் சாமி படமாச்சே ஏனோ தானோ என்று இருந்து விடக்கூடாது என மனதிற்குள் முடிவெடுத்து அந்த படத்தில் அம்ம னாக நடிப்ப தற்காக விர தமும் மேற் கொண்டு இருந்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு தான் படப்பிடிப்புக்கு செல்வேன்.

    சிக்கன், மட்டன் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் போது அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன். சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். படப்பி டிப்புக்கான நாளும் வந்தது. மதுரையில் படப்பிடிப்பு.

    மேக்-அப் போட தயாரா னார்கள். முற்றிலும் மாறுபட்ட மேக்-அப். அம்மன் வேடத்துக்கான பட்டு சேலையை பரத நாட்டிய உடைபோல் அணிந்து இடுப்பில் பெரிய ஒட்டி யாணம் அணி வித்தார்கள். முகம், கைகள், காலில் பச்சை வர்ணம் பூசி னார்கள். தலையில் பெரிய கிரீட த்தை அணி வித்தா ர்கள். அதை அணி விப்பதற்கு முன்பு சரியாக பொருந்துவதற்காக தலையில் இன்னொரு கவசமும் உண்டு.

    தலையில் அணிவித்த கிரீடத்தை ஷூட்டிங் முடியும் வரை சுமார் 4 மணி நேரம் அகற்ற முடியாது. படப்பிடிப்பு தொடங்கியது. வெயில் காலம் வேறு. லேசாக வியர்த்ததும் முழங்கைகள், கழுத்து சுருக்கங்களில் பச்சை கலர் அழிந்து வெள்ளையாக சரும கலர் தெரியும். உடனே அதை 'டச்சப்' செய்வார்கள். இதுவே பலமுறை நடக்கும். நான் நடித்த முதல் பக்தி படம் 'பாளையத்து அம்மன்' தான். இந்த படம் மறக்க முடியாத பல அனுபவங்க ளையும் கொடுத்தது.

    அம்மனாக நடித்ததால் பேசுவது, பார்ப்பது, நடப்பது, உடல் அசைவுகள் எல்லாமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

    அதற்காக கடுமையான முயற்சி யும், பயிற்சியும் தேவைப்பட்டது.

    ஸ்கூலுக்கு போகும் போது தேர்வு நாளில் கடவுளே, கேள்விகள் எளி தாக இருக்க ணும். பரீட்சை நல்லா எழுதனும் என்று வேண்டிக் கொள்வது போலவே நானும் தினமும் வேண்டு கோள் வைக்க தவறியதில்லை.

    எந்த தப்பும் நடந்து விடக் கூடாது. எல்லா காட்சியும் நன்றாக வர வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொண்டு தான் செல்வேன். பொதுவாக ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்து முடிக்க குறைந்தது 3 நாட்கள் ஆகும். ஆனால் இந்த படத்தில் ராமநாராயணன் சார் திட்டமிட்டு ஒரு மணி நேரம் கூட வீணாகாதபடி ஷூட்டிங்கை நடத்தினார்.

    தினமும் காலையில் மேக்-அப் போட்டுக் கொண்டு செட்டுக்கு வந்ததில் இருந்து 3 முதல் 4 மணி நேரம் தான் படப்பிடிப்பு நடக்கும். அப்படி 3 நாட்களிவ் ஒரு பாடலை படமாக்கி விட்டார்.

    மூன்று விதமான கெட்-அப்பில் நடித்தேன். பாளை யத்து அம்மன் முகம் பச்சை வண்ணத்தில் இருக்கும். கருமாரி அம்மன் முகம் கருப்பு வண்ணத்தில் இருக்கும்.

    முக்கியமாக அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அட்சயாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரொம்ப க்யூட்டான குழந்தை. பேச வேண்டிய டய லாக்குகளை கூட படித்து அழகாக பேசுவாள். நான் சின்ன குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அதே போல் அவளும் இருநததால் எனக்கு அவளை ரொம்பவே பிடித்து போய் விட்டது.

    இதனால் அவளுடன் நடிக்கும் போதும், பேசும் போதும் உற்சாகமாக இருக்கும். அதே போல் 'வேப்பஞ் சேலை' நேர்த்திக்கடன் பற்றியும் கேள்விப் பட்டிருந்தேன். இந்த படத்தில் தான் அது எவ்வாறு நிறை வேற்றப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டேன்.

    அப்படியே அம்மனாக நடந்து செல்லும் போதெல்லாம் பின்னணி யில் அதிரும் இசையோடு

    திரிபுரசுந்தரி நீ

    பவ தாரணி நீ

    திரிசூலினி நீ

    அசுரசம்ஹாரினி நீ... என்று வரும் பாடல் வரிகள் அப்ப டியே திரையில் அதிர வைக்கும்... நிஜ மாகவே அதிர வைத்த சம்பவங்க ளுடன் அடுத்த வாரம் வருகிறேன்....

    தொடரும்...

    • வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே.
    • வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி!

    துன்பத்தைத் துணையாகக் கொண்டு இன்பத்தை அடைய முடியுமா? என்பதைத் தெரிந்துகொள்ளக் காத்திருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

    "மேடு பள்ளங்களும் வளைவு நெளிவுகளும் இல்லாத பாதை உலகத்தில் இல்லை; அதேபோல இன்ப துன்பங்களும் கஷ்ட நஷ்டங்களும் இல்லாத வாழ்க்கை மனிதர்க்கு இல்லை!". இந்த வாசகத்தை நாம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும் உண்மையில் இன்பம் பாதி! துன்பம் பாதி! எனக் கலந்ததாக வாழ்க்கை அமைந்திருக்கிறது?. இல்லையே! துன்பம் பெரும்பகுதி! இன்பம் அதில் சிறுபகுதி! எனவல்லவா கலவை விகிதாசாரமற்றவையாக இருக்கிறது! என்று நம்மில் பெரும்பாலோர் புலம்புவதும் காதில் ஒருபக்கம் விழத்தான் செய்கிறது.

    'இன்னாது அம்ம இவ்வுலகம்!' என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே நமது சங்கச் சான்றோன் தெளிவாகவே குறித்துவிட்டான்; இந்த உலகம் துன்பமயமானது தான். இருளும் ஒளியும் மாறிவரும் உலகில் இருட்டு நிரந்தரமா? ஒளி நிரந்தரமா? என்ற கேள்வியை அறிவியல் பூர்வமாகக் கேட்டுப் பார்த்தால், இந்த உலகில் இருட்டே நிரந்தரமானது என்பது விளங்க வரும். பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் வந்து, இயன்ற அளவுக்கு பூமியின் பக்கங்களில் ஒளியைப் பாய்ச்சி வெளிச்சப்படுத்தப் பார்க்கின்றன. நாமும் முடிந்த அளவுக்குப் பல்வகையான விளக்குகளை உருவாக்கி இருளை விரட்ட முயற்சிக்கிறோம்.

    ஆனாலும் இருளே வலிமையானது. 'விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல்' என்று குறளாசான் குறிப்பிடுவதைப் போல, வானத்தில் வலம்வரும் இயற்கை விளக்குகளாயினும் மனிதர் ஏற்றிவைக்கும் பல்வகைச் செயற்கை விளக்குகளாயினும் அவை எப்போது அணைந்து மறையும்? எனத் தக்க நேரம் பார்த்துப் பரவுவதற்காக இருள் எப்போதும் காத்திருக்குமாம். அவ்வகையில் இருளைப் போன்றவை மனிதர்க்கு வரும் துன்பங்கள்; அதே போல வெளிச்சத்தைப் போன்றவை அவர் அனுபவிக்கும் இன்பங்கள்!.

    அப்படியானால் உலகில் இருள் நிரந்தரமானது என்பதைப் போல மனித வாழ்க்கையில் துன்பமும் நிரந்தரமானது என்று முடிவுக்கு வந்துவிடலாமா?. அப்படி வந்துவிட்டால் துன்பத்தை வைத்துக் கொண்டு இன்பம் உருவாக்குவது எப்படி?. பள்ளத் தாக்குகளுக்குள் நின்றுகொண்டு சிகரங்களை எட்டிப் பிடிப்பது எப்படி? வேப்பிலைச் சாற்றினைத் தேன்சுவைச் சாரலாக்குவது எப்படி?. சுவையான சவால் தான்.

    ஒரு பெரிய காட்டை ஓர் இளைஞன் நடந்து கடந்து கொண்டிருந்தான். நண்பகல் நேரம்; பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது; நடுக்காட்டில் பசியமர்த்த என்ன உணவு கிடைக்கப் போகிறது?. கடும் பசியோடு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தான். பாதையோரத்தில் ஒரு பெரிய மாமரம் தென்பட்டது; அருகில் சென்று பார்த்தால், மரத்திலேயே பழுத்துப், பெரும்பெரும் மாம்பழங்கள் சடைச் சடையாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

    விறுவிறுவென மரத்தில் ஏறினான்; பழங்களைப் பறித்து மரக்கிளையில் அமர்ந்தவாறே சாப்பிடத் தொடங்கினான். பசி தணிந்தபாடில்லை; உயரே உயரேயுள்ள கிளைகளில் நல்ல சுவையான மாம்பழங்கள் இருந்ததால், கிளைவிட்டுக் கிளைதாவி, மேலே மேலே ஏறி , உச்சியிலுள்ள நுனிக் கிளைக்குச் சென்றுவிட்டான். அங்குள்ள பழங்களைப் பறிக்க முற்படும்போது, இவனது எடை தாங்கமுடியாமல் நுனிக்கிளை முறிந்து கீழே விழத் தொடங்கினான். மரம் பெரிய மரமாக இருந்தபடியால் கீழே இடையில் இருந்த மரக்கிளையில் சிக்கினான்.

    அந்த மரக்கிளையைக் கெட்டியாப் பிடித்துத் தொங்கிக் கொண்டே கீழே பார்த்தான்; தரை ரொம்ப தூரத்தில் இருந்தது. அங்கிருந்து கீழே குதித்தால் பெரிய அடியாக விழுந்து காயங்கள் ஏற்படும்; நுனிக்கிளையிலிருந்து மேலே உள்ள கிளைக்கு ஏறிச் செல்லவும் முடியாது; .யாராவது கீழே செல்பவர்கள் பார்த்து மரத்தில் ஏறிவந்து காப்பாற்றினால்தான் உண்டு. "யாராவது காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! மரக்கிளை யில் மாட்டித் தொங்கிக் கொண்டிருக்கிறேன்!" என்று பலம்கொண்ட மட்டும் குரலெடுத்துக் கத்திப் பார்த்தான். அப்படியே மயங்கிப் போனான்; மயக்கத்தில் இருந்தாலும் மரக்கிளைப் பிடிமானத்தை மட்டும் விடவேயில்லை.

    அப்போது அந்த வழியாகச் சென்ற பெரியவர் ஒருவர், மரத்தில் மயங்கித் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார்; வயதானவர் என்பதால், அவரால் மரத்தில் ஏறமுடியாது. யோசனை செய்தார். கீழேகிடந்த ஒரு கல்லை எடுத்து தொங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞனைக் குறிபார்த்து எறிந்தார். படக்கென்று விழித்துக்கொண்ட இளைஞன் கீழே பார்த்தான்.

    அந்தப் பெரியவர் மற்றொரு கல்லை எடுத்து, மீண்டும் இவன்மீது எறியக் குறிபார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கல் தன்மீது படுவதற்குள் தப்பித்துவிட வேண்டும் என நினைத்த இளைஞன், தொங்கிக் கொண்டிருந்த கிளைக்கு மேலிருந்த கிளையை முயன்று பற்றினான்; அதற்குள் அவரது இரண்டாவது கல்லும் அவன்மீது சுரீரெனப் பட்டது. பிடிபட்ட கிளையைப் பற்றி வசதியாகக் கீழே இறங்குவதற்கு வழிபார்த்தான் இளைஞன். அப்போது பெரியவர் மூன்றாவது கல்லையும் இளைஞனை நோக்கி எறிந்தார்; எறி வாங்கிக்கொண்டே விறுவிறு எனக் கீழிறங்கி வந்துவிட்டான் இளைஞன்.

    கீழே வந்தவுடன் பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்டான்,''ஐயா! மரத்தில் தொங்கி ஆபத்தில் இருந்த என்னை மரமேறி வந்து காப்பாற்றுவீர்கள் என்று பார்த்தால், நீங்கள் என்ன என்மீது கற்களை எறிந்து காயப்படுத்தப் பார்க்கிறீர்கள்?".

    "தம்பி! நான் வயதானவன். என்னால் மரத்தில் ஏறிவந்து உங்களை மீட்டெடுக்க முடியாது. நான் கற்களைக்கொண்டு உங்கள் மீது வீசியதுகூட உங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான். அப்படி உங்கள்மீது நான் கற்களை வீசவில்லையென்றால் நீங்கள் விழித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்!; இப்படி முயற்சியெடுத்து மேற்கிளையைப் பற்றிக் கீழே இறங்கி வந்திருக்கவும் மாட்டீர்கள்!" என்றார் பெரியவர்.

    கல்லால் எறிவது ஒருவிதமான துன்புறுத்தல் தான் என்றாலும், இளைஞன் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்தத் துன்புறுத்தலும் அவனை விடுவிப்பதற்கான ஒருவிதமான இன்ப வைத்தியம் போலத்தான் அமைந்துவிட்டது.

    அந்த இளைஞன் மரக்கிளையைப் பற்றிக்கொண்டு மயங்கிக் கிடந்தபோது அவனது மூளை உறைந்து விட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையற்ற வனாகிவிட்டான். அவன் மீது பட்ட முதல் கல்எறி அவனை விழிப்படையச் செய்தது. இரண்டாவதாகப் பட்ட கல்எறி அவனிடமிருந்த அச்சத்தைப் போக்கித் துணிச்சலை உண்டாக்கியது. மூன்றாவது பட்ட கல் எறி அவன் மனத்தில் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை உருவாக்கித் தப்பிக்கச் செய்துவிட்டது.

    பாசிபடர்ந்த குளத்தில் தொடர்ந்து கற்களை எறிய எறியப், பாசம் அகல்வதுபோல நம்மீது தொடர்ந்து நடத்தப்படும் துன்பக் கல்வீச்சுக்களும் நம்மை மேம்படுத்துவதற்காகவும் இருக்கலாம். தாங்கிக் கொள்வதும், அதற்கேற்பச் செயல்முறைகளைத் தகவமைத்துக் கொள்வதும் நம்மை மேலும் சிறப்பாக்கலாம்.

    துன்பங்கள் தொடர்ந்து வந்து எழமுடியாத அளவுக்குத் துன்புறுத்தினாலும், சிலர் அதிலேயே சுகம்கண்டு போய்ச் சுருண்டு கிடப்பார்கள். துன்பங்களை எதிர்க்க முதலில் நமக்குப் பதற்றமில்லாத பொறுமை தேவை; வலிதாங்கு வதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். அப்போதுதான் துன்பம் நாடி, துன்பத்திற்கான மூலத்தை நாடி, அதைத் தணிக்கும் வழியைக் கண்டு பிடித்து, வாய்ப்பாகச் செய்து வெல்ல முடியும்.

    பொறுமைக்கு அடுத்து நமக்குத் தேவைப்படுவது தீர்மானமாக முடிவெடுத்துச் செயல்படுத்தும் திறமை. மூன்றாவதாக முத்தாய்ப்பாகத் தேவைப்படுவது எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் நியாயத்தின் பக்கமே நின்று போரிடும் நேர்முறைத் தன்மை. பொறுமை, தீர்மானமாக இயங்கும் வைராக்கியம், நேர்முறைத் தன்மை ஆகிய இவை மூன்றுபோதும் எவ்வகைத் துன்பத்தையும் வல்லமையோடு எதிர்த்து நின்று வெல்வதற்கு.

    வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் வருவதில்லை; வந்தவருக்குக்கும் ஒரேமாதிரி துன்பங்கள் திரும்பத் திரும்ப வருவதில்லை. வந்த துன்பமே திரும்பத் திரும்ப வந்தால் துன்பமும் சலித்துப்போகும்; வாழ்க்கையும் புளித்துப்போகும். புதிதுபுதிதாகத் துன்பங்கள் வருவதைச் சிலர் ஆர்வத்தோடு வரவேற்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போது தான் அவற்றைத் தீர்ப்பதற்குப் புதிதுபுதிதாக வழிமுறைகள் காணமுடியும் என்றும், அறிவுக்கு அது சவாலாக இருப்பதாகவும் கூறி மகிழ்கின்றனர்.

    'காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!' என்று மகாகவி பாரதி, எமனையும் வரவேற்று வெல்லத் துடிக்கிற கவிதை துன்பத்தில் உழல்கிற எல்லாருக்கும் உத்வேகம் தருகிற கவிதை. மரணத்தை விடவா பெருந்துன்பம் இருந்துவிடப் போகிறது?.

    வருகிற துன்பம் பெரியதோ சிறியதோ அதனை ஏற்கமறுத்துப் புறக்கணிக்கக் கூடாது; அதற்காக அதற்குள்ளேயே வாழவும் பழகிவிடக்கூடாது. துன்பம் வாழ்வின் ஓர் அங்கம் என இயல்பாய் ஏற்றுக்கொண்டு, அதனை வெல்வதற்கான தீர்வுகளைக் காண்பதிலேயே மனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். துன்பம் தொடராகவோ அல்லது பெரியதாகவோ தோன்றினால், அவற்றைச் சிறுசிறு பகுதிகளாகப் பகுத்துப், பகுதி பகுதியாக வெல்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி வெற்றி காணலாம்.

    துன்பம் யாருக்கும் தனித்து வருவதில்லை: ஒருவர் மூலமாகவும் வருவதில்லை; பலர் வழியாகப், பலரூபங்களில் துணைகளோடு துன்பங்கள் துரத்திக்கொண்டு வரலாம். அதனால் அவற்றைத் தனியராக நின்று வென்றுவிடுவோம் என்று யாரும் எண்ணிவிடவும் கூடாது. குடும்பத்தினர், நண்பர்கள், அலுவல்புரியும் இடத்தின் சக பணியாளர்கள், அரசாங்கத்தினர் எனப் பலருடைய துணை களையும் கூட்டிக்கொண்டு, துன்பம் அகற்றப் பாடுபடவேண்டும். சிலவேளைகளில் நமது துன்பங்களை அகற்றுவதற்கு நமது எதிரிகள்கூட நமக்கு உதவிசெய்திட நேரிடலாம்.

    அனுபவங்கள் என்பவை பெரும்பாலும் துன்பத்தை அனுபவித்து அதிலிருந்து வெளியேறிய தருணங்களாகவே இருக்கும். அந்த வகையில் புதிதாக வரும் துன்பத்தினை விரட்டுவதற்குப், பழைய அனுபவங்கள் கூட நல்ல ஆசிரியனாக அமையலாம்.

    துன்பங்கள் நம்மைப் புடம்போடுகின்றன. வாழ்க்கையில் ஒரே மாதிரியான பயணத்தைத் தவிர்த்துப் புதியதான புத்துணர்வு வழிகளை ஏற்படுத்திக்கொள்ள இக்கட்டுக்களே நம்மை திசைதிருப்பி விடுகின்றன.

    திருக்கோயில் தேரை நேர்வழியில் நகர்த்துவதுவதற்கும், விரும்பிய திசைகளில் திருப்புவதற்கும் அவ்வப்போது அடிப்பகுதியில் ஒரு கட்டையைப் போட்டு மாற்றிவிடுவர். அந்த கட்டைக்குப் பெயர் 'முட்டுக் கட்டை'. வாழ்க்கையில் வரும் துன்பங்களும் முட்டுக்கட்டைகளே!. அவற்றைப் பொறுமை யோடும், நேர்முறைச் சிந்தையோடும், வெற்றிகாண்டுவிடலாம் என்கிற தீர்மானச் சிந்தையோடும் எதிர்கொண்டால் வாழ்க்கையில் எப்போதும் வளமே!.

    துன்பங்களையே துணையாகக் கற்றவர்க்கு எந்நாளும் இன்பமே.

    தொடர்புக்கு 9443190098

    • உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர்.
    • பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்தியல் நெறி:

    மருந்தியல் நெறி என்பது மருந்தின் குணம், மருந்து மற்றும் நோய்க்கு ஏற்ற துணை மருந்து, மருந்தினை உண்ண தகுந்த காலம், இடம், அளவு, உணவு முறை, வாழ்வியல் முறை, எதிர் விளைவு, அதனை முறிக்கும் முறை என விரிவாக அமைந்துள்ளது. (தேரையர் யமக வெண்பா, மருத்துவாங்கச் சுருக்கம் போன்ற நூல்களில் இவை பற்றிய விளக்கங்களை சான்றுடன் அறியலாம்).

    சித்த மருந்தியல்:

    நோய் தீர்க்கும் மருந்து உடலில் எவ்வகை மாற்றங்களை உண்டாக்க வல்லவை என்பதை உணர்த்தும் மருந்தியல் திறன்களை சித்தர்கள் மிக நுட்பமாக அறிந்திருந்தனர்.

    நஞ்சு நூல் எனும் தொகுப்பில் காணப்படும் பலவகை தாவர, சங்கம(கடல்), தாது, உலோக நஞ்சுகள் பற்றிய விளக்கங்கள் தமிழர்களின் மருந்தியல் புலமையை புலப்படுத்தும்.

    நஞ்சுத் தன்மை மட்டுமின்றி மருந்து செய்முறைகளையும் சித்தர்கள் அறிந்திருந்தனர்.

    தட்ப வெப்பநிலை, துணை மருந்துகள் எனப்படும் அனுபான முறை மூலம் மருந்துகளை நெறிப்படுத்தி பயன்படுத்தினர்.எடுத்துக்காட்டு பற்பம், செந்தூரங்களை நேரடியாக கொடுக்காமல் தேன், பால், நெய், மூலிகை குடிநீர் போன்ற அனுபான மருந்துகள் மூலம் கொடுத்தனர்.

    மருந்துகளின் அளவும் , மருந்தினை உட்கொள்ளும் கால அளவு , மருந்து உட்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய உணவு, வாழ்வியல் முறைகளையும் கூறியுள்ளனர். இச்சா பத்தியம், குடும்ப பத்தியம், கடும் பத்தியம் எனும் பத்திய முறைகள் மருந்தின் குணத்திற்கு ஏற்ப அமைந்தவை. அனைத்துக்கும் மேலாக மருந்தின் தீய விளைவினை முறிக்கக் கூடிய முறிப்பு மருந்துகளையும் அறிந்து வைத்திருந்தனர்.

    சித்தர்களின் மருந்து செய்முறைகளில் உள்ள அறிவியல் திறன்:

    சித்தர்கள் மருந்தினை உள் மருந்து 32, வெளி மருந்து 32 ஆக பிரித்து பிரித்து 64 வகையான மருந்து செய்முறைகளை கூறியுள்ளனர்

    உள் மருந்து செய்முறைகளில் சித்தர்கள் அறிவியல் திறனோடு நெறிப்படுத்தினர். எந்த மருந்து தன்னளவில் கெடாமல் இருக்கின்றதோ, அந்த மருந்துதான் நோயை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து என கருதிய தமிழ் மருத்துவர்கள், அத்தகைய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு வேதியல் ஆய்வுகளை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.

    சித்த மருந்துகளின் காலக்கெடு (Excpiry Date) அவற்றின் நீண்ட நாள் கெடாமல் இருக்கும் பக்குவம் சித்தர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்துகிறது. எடுத்துகாட்டு தைல வகைகள் - 1 ஆண்டு, மெழுகு, குழம்பு - 5 ஆண்டுகள், ரசம் பதங்கம் - 10 ஆண்டுகள், செந்தூரம் - 75 ஆண்டுகள், பற்பம், கட்டு, களங்கு - 100 ஆண்டுகள், சுண்ணம்- 500 ஆண்டுகள், கற்பம், குரு, குளிகை - காலக்கெடு கடந்தவை.

    நவீன மருத்துவத்தில் சிக்கல் நிறைந்த அபாயம் என கருதப்படும் உலோக மருந்துகள் சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்தறிவியல் மூலம் அவற்றின் நச்சுத்தன்மையை சுத்தி செய்து கொடிய நோய்களில் இருந்து உயிரை காக்கும் உயரிய மருந்துகளாக பயன்படுத்துகின்றது.

    பாதரசம் மிகக் கடுமையான நஞ்சுள்ள உலோகமாகவும் அதனை மருந்தாக்கும் முறைகள் சித்த மருத்துவத்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

    வேதியல் சார்ந்த மருந்து முறைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சித்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு அகத்தியர், போகர், தேரையர் ஆகியோர் கூறியதாக கருதப்படும் பாடல்களில் காணலாம்.

    இவையின்றி பிணி வராமல் தடுக்க உதவும் கற்ப மருந்துகள், நீண்ட நாள் வாழ உதவும் குரு மருந்துகள் போன்றவை இக்கால மருத்துவர்கள் சிந்தித்து அவர்களின் ஆராய்ச்சியை புதிய பாதைக்கு உந்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளது.

    சுத்தி முறை முக்கியத்துவம்:

    உள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்பட்ட மூலப் பொருட்களை, அவற்றின் வாதம், பித்தம், ஐயம் எனும் உயிர் தாதுக்களின் நிலைகளை அறிந்தே மருந்து செய்ய பயன்படுத்தினர். அதனுடன் ஒவ்வொன்றுக்கும் இயல்பாய் இருக்கும் நஞ்சுத் தன்மையை மிக தெளிவாக அறிந்து அதனை போக்கும் நுட்பங்களையும் கூறியுள்ளனர்.

    மருந்து செய்முறையில் முதல் விதி மூலப்பொருட்களின் நஞ்சு தன்மையை அறிதல், அடுத்த விதி நஞ்சு தன்மையை நீக்குதல் அதாவது சுத்தி செய்தல் ஆகும். சுத்தி செய்யாமல் மருந்து செய்யக்கூடாது என்பதை சித்தர்கள் வகுத்த சித்த மருத்துவத்தின் முக்கிய விதியாக வைத்துள்ளனர்.

    மிளகு, சுக்கு, கடுக்காய் எனப்படும் சாதாரண தாவர பொருட்களில் இருந்து வீரம், பூரம், ரசம், தாளகம், லிங்கம் என விரியும் அத்தனை மூலப் பொருட்களையும் சுத்தி செய்த பின்னரே மருந்து செய்ய பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

    சித்த மருத்துவத்தில் அனுபானம் கூறுவது ஏன்?

    இந்த சூரணத்தினை ஏன் நெய்யில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இந்த மருந்தை ஏன் வெண்ணெயில் கலந்து சாப்பிட சொல்றீங்க? இதனை ஏன் தேனில் சாப்பிட சொல்றீங்க? என நவீன அறிவியல் ஆய்வாளர்கள் வியந்து பார்க்கும் படியாக நம் துணை மருந்தின் அனுபானக் கோட்பாடு உள்ளது.

    சித்த மருத்துவத்தில் அனுபானம், துணை மருந்து பங்கு அதிகம். எப்படியானால் செல்ல வேண்டிய இடத்திற்கு தனியாக செல்வதற்கும், ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து செல்வதற்கும் உள்ள வித்தியாசம் தான்.

    சில சித்தர் மருந்துகளை ஒரு சில மருந்துடன் சேர்த்து தரும்போது தான் பலன் நன்றாக கிடைக்கிறது. எல்லா மருந்துக்கும் பால், தேன், நெய் மட்டுமே அனுபானம் கிடையாது. உதாரணத்திற்கு நிலவேம்பினை தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம். ஏனெனில் நிலவேம்பின் பைடோகெமிக்கல், ஹைட்ரோபிலிக் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருட்கள் நீரில் காய்ச்சும் போது மருத்துவத் தன்மைகளை வெளிப்படுத்துவதால் கஷாயமாக காய்ச்சி குடிக்கிறோம்.

    கரிசலையை எண்ணையாக காய்ச்சி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது லிபோபிலிக் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.

    இது மாதிரி நெய் பற்றி கூறும் போது சிறுவர்களுக்கு கொடுக்கும் மருந்துகள் எல்லாம் பிரமி நெய், வல்லாரை நெய், தூதுவளை நெய் போன்றவற்றில் நெய்யினை சேர்ப்பதால் மூலிகை சாற்றை நெய் உள்வாங்கி பிளட் பிரைன் பேரியர் என்று சொல்லக்கூடிய மூளை உரையைத் தாண்டி செல்லக்கூடிய ஆற்றல் நெய்க்கு உண்டு. இதை தண்ணீரில் சாப்பிட்டால் பலன் கிடையாது. இதிலிருந்து எவ்வளவு கைதேர்ந்தவர்களாக சித்தர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நம்மால் அறிய முடிகிறது...

    ஒரு உலோகம் மூலம் கொண்டு செய்யப்படும் பற்பம், அணு அளவிற்கும் நுண்ணியமானவை என்பதையும், நெய்யின் துணையோடு மூளையை சென்றடைகிறது என்கிற அறிவியல் உண்மையையும் இக்கால அறிவியல் உலகமே வியந்து பார்க்கிறது.

    சித்த மருத்துவத்தில் பத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

    சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வருவோரில் பெரும்பாலானவர்கள் முதலிலே கேட்கும் கேள்வி பத்தியம் இருக்கனுமா ? ஆமாம் என்று சொன்னால் சிலர் என்னால் இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் பத்தியம் என்பது என்ன என்று சரியான புரிதல் இல்லாதது.

     பத்தியத்தை இரண்டு விதமாக பார்க்கலாம்:

    1. நோய்க்கு அல்லது மருந்துக்கு ஒத்துக்கொள்ளாததை நீக்குவது.

    2. நோய் உள்ளபோது சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்.

    இந்த இரண்டு முறையுமே விரைவில் நோய் குணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்ட உடல் தேறவும் அவசியமாகும்.

    ஜுரம் உள்ளபோது கஞ்சியும், வெந்நீரும் உட்கொள்வது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு, மாவுப் பொருட்களை நீக்குவது, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் உப்பினை உணவில் குறைத்துக் கொள்வது என்பதெல்லாம் நோய்க்கான பத்தியம்.

    உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவத்திலும் நவீன மருத்துவம் உள்பட நோயிற்கு ஏற்ற உணவு, வாழ்வியல் முறைகளை அவர்கள் மொழியில் கூறுகிறார்கள்.

    சற்று கடினமான நாட்பட்ட நோய்களுக்கு சற்றே பெரிய மருந்துகள் கொடுக்கும்போது கோழிக்கறி, பாகற்காய், அகத்திக்கீரை, நண்டு முதலியவற்றை நீக்குவது மருந்துகளுக்கான பத்தியம் ஆகும்.

    பால், மோர், நெய், பிஞ்சு காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நோயினால் மெலிந்த உடலை தேற்றவும், மருந்தினால் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்குமான பத்தியமாகும்.

    குறிப்பிட்ட ஒரு நோய்க்கு தகுந்த பத்தியத்துடன் மருந்து உட்கொண்டால் அந்த நோய் விரைவில் தீரும்.

    தகுந்த பத்தியம் இல்லாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு மருந்து உட்கொண்டால் நோய் குணமாக நீண்டகாலம் ஆகும். இத்துடன் பணமும் விரையம் ஆகும். மருத்துவர் மற்றும் சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்.

    இவ்வாறு பத்தியம் காக்காமல் மருந்து சாப்பிடுவது என்பது ஓட்டை பானையில் நீர் நிரப்புவதற்கு சமம்.

    சித்த மருத்துவத்தில் நோயாளியை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்தியம் கூறவில்லை. நோயினை நீக்குவதற்கு காரணமாகவே பத்தியம் கூறுகின்றனர். இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நோயை விட பத்தியும் ஒன்றும் அவ்வளவு கொடூரமானது அல்ல. நோயின் கொடூரத்தை உணரும்போது இது புரியும்.

    இக்காலத்தில் நவீன மருத்துவம் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து வகை மருத்துவத்திலும் நோயிற்கான உணவு,பழக்கவழக்க முறைகள் கூறி மருத்துவம் செய்கிறார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்த மருத்துவத்தில் பத்தியத்தின் முக்கியத்துவத்தை கூறி மருத்துவம் செய்ததை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. மனக்கட்டுப்பாட்டோடு பத்தியம் காத்துக்கொண்டால் நலம் உங்களை நாடி வரும்.

    • ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை.
    • சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    மனித வாழ்க்கையில், காதல், காமம், அன்பு, எதிர்பாலின ஈர்ப்பு, உறவுகள், உறவுகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புற அழகியல் சார்ந்த விஷயங்கள், உலகியல் இன்பங்கள், சொகுசான வாழ்விற்கு தேவையான விஷயங்கள், ஆடம்பரமான வீடு, வாகனங்கள், அணிகலன்கள், போன்றவற்றிற்கு காரக கிரகம் சுக்கிரன். ஒரு மனிதன் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க சுக்கிரனின் தயவு தேவை. அதனால் சுக போகத்தின் அதிபதி, சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் எல்லா நிலைகளிலும் கெடாமல் வலுப்பெற்று இருக்க வேண்டும்.

    அன்பான மனைவி, அழகான வீடு, ஆடம்பரமான கார், சொகுசான இன்பமயமான வாழ்க்கை இத்தனை யையும் ஒருவருக்கு குறைவின்றி கொடுக்கும் கிரகம் சுக்கிரன் பாவக, ஆதிபத்திய ரீதியாக வலுப்பெற்றால் பெரிய பொருளாதாரம் ஈட்டுதல், சுக்ரனின் காரகங்க ளான நவீனம், வாசனைப் பொருட்கள், உயர்ரக வாகனம், வீடு, இசை, கவிதை ஆர்வம், அலங்காரம், ஒப்பனை, நளினம் போன்றவற்றில் ஆர்வம் கூடும்.

    கோடிக்க ணக்கில் கொட்டி கொடுத்து பெரிய உயரமும் தொட வைக்கும். காரக, பாவக ஆதிபத்திய ரீதியாக சுக்ரன் பலம் குறைந்தால் வறுமை, தரித்திரம் போன்ற பாதிப்பு இருக்கும். சம்பாத்தியம், ஆடம்பரம் என்ற எண்ணமே வராமல் செய்யும். அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் இரு பாவகத்திற்கு உள்ள பலன்களை நடத்தியே தீரும்.இனி பனிரென்டு ராசிக்கும் சுக்ர தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு சுக்ரன் 2, 7-ம் அதிபதி. தன ஸ்தான அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை கிடைக்கும்.சுக்ரனின் தன்மை கொண்ட வாழ்க்கை துணை அமையும் அழகு ,காதல் உணர்வு , நல்ல புரிந்துணர்வு ,தாம்பத்யம் சுகம் போன்றவை கிடைக்கும். மனதிற்கினிய வாழ்க்கை துணையாக அழகு அந்தஸ்து உடையவராக இருப்பார்.

    திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் திருப்புமுனை உண்டாகும். இவர்களுக்கு சுக்ரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பான திருமண வாழ்க்கை உண்டு. சுக்ரன் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தில் தன்னிறைவு இருக்காது. வறுமை, கடன் போன்ற வற்றால் தம்பதிகளிடம் நெருக்கம் குறையும்.வாழ்க்கைத் துணையால் மன நிம்மதி போகும். சிலருக்கு திருமணமே நடக்காது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. இவர்களுக்கு சுக்ரன் வலுப்பெற்றால் ஆடம்பரத்திற்காக கடன் பெறுவார்கள். ஜாதகரின் கடன் பிரச்சினைக்கு ஜாதகரின் நடவடிக்கைகளே காரணமாக இருக்கும். ஜாத கரின் சகிப்புத் தன்மையற்ற நட வடிக்கைகள் எதிரியை அதிகப்படுத்தும். தீய பழக்க வழக்கங்களால் நோய் ஏற்படும்.

    நோய்க்கு வைத்தியம் செய்ய கடன் பெறுவார்கள். கடனுக்கு பயந்து நோய் கூடிக் கொண்டே போகும். அதே போல் சுக்ரன் பலம் குறைந்தாலும் தசா புத்தி காலங்களில் கடன், நோய் பாதிப்பு எதிரி தொல்லை இல்லா மல் போகாது. இவர்க ளுக்கு சுக்ர தசை, புத்தி காலங்களில் பாதிப்பு அதிகமா கவும் பிற நேரங்களில் பாதிப்பு குறைவாகவும் இருக்கும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. விரயாதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் குல கவுரவம் நிரம்பியவர்கள். பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள்.

    தலைமைப் பதவி தேடி வரும். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடி வரும். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர்களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர்களுக்கும் பயன் உண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப்படுவாள். தொட்டது துலங்கும். சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்றாலும் அசுப கிரக சம்பந்தம் இருந்தாலும் பூர்வீகத்தில் வாழ முடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குல தெய்வ அருள் கிடைக்காது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

    கடகம்

    கடக ராசிக்கு சுக்ரன் 4,11-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதி. கடக ராசிக்கு சுக்ரன் பாதகாதிபதி. துலாம் ராசியில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரனும் மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரனும் நிறைவான சொத்து சுகத்தையும் நிறைந்த லாபத்தையும் தாய் வழி உறவுகளின் அனுசரணையும், வழக்குகளில் வெற்றியையும் முன்னோர்களின் நல்லாசியையும் வழங்கும். நன்றாக படிப்பார்கள்.

    கற்ற கல்வியால் பயன் உண்டு.ஆசிரியர், ஜோதிடர், வங்கிப் பணிகளில் தனித்திறமையுடன் மிளிர்வார்கள்.அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமையுடன் பிரகாசிப்பார்கள். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப்பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். ரிஷபத்தில் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் பாதகத்தை மிகைப்படுத்துவார். சனி பலம் குறைந்தால் மறு திருமணத்தை நடத்துவார். அசுப வலிமை படைத்த சுக்ரன் காதல், காமத்தால் வம்பு, வழக்கைத் தருவார்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் சிவ சக்தியை வழிபடவும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு சுக்ரன் சகாய ஸ்தான அதிபதி தொழில் ஸ்தான அதிபதி. 3,10-ம் அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் பெற்றால் புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகும்.கவர்ச்சியான விளம்ப ரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள்.

    8ல் உச்சம் பெற்ற சுக்ரனால் சிலருக்கு தொழிலில் பெரும் இழப்பு, நட்டம், அவமானம், வம்பு, வழக்கு ஏற்படு கிறது. சுக்ரன் பலம் குறைந்தால் தகுதி, திறமைக்கு தகுந்த நிரந்தர, தொழில் உத்தி யோகம் அமையாது. சிலர் உடன் பிறப்பிற்காக, குடும் பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்ட பெயர் எடுப்பார்கள். பிழைக்க தெரியாத ஏமாளியாக இருப்பார்கள்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு சுக்ரன் தனாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. 2,9-ம் அதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் நிர்வாகத் திறமை உண்டு. தனது புத்தி சாதுர்ய பேச்சால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார் உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். பலவிதமான யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பேச்சை மூலதனமாக கொண்ட தொழிலில் வல்லவர்கள்.

    பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார். அரச பதவி, அரசு உத்தியோகம் அந்தஸ்து உண்டு. இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் அல்லது சுக்ரன் பலம் குறைந்தால் நிலையான பொருள் வரவு இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு குறையும். மீனத்தில் உச்சம் பெற்ற சுக்ரன் சிலருக்கு மாரகத்தை மிகைப்படுத்தும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு சுக்ரன் லக்னாதிபதி, அஷ்டமா திபதி. சுக்ரன் எந்த நிலையில் இருந்தாலும் தசை, புத்தி காலங்களில் அவமானம் / கடன், வம்பு, வழக்கு உண்டு. தசை ஆரம்பத்தில் சில யோகத்தைச் செய்தால் தசை முடியும் போது அவயோகம் உண்டு. துலாம் ராசிக்கு சுக்ர தசை வராமல் இருப்பது நல்லது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் லஷ்மி குபேர பூஜை நடத்த வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிகத்திற்கு சுக்ரன் 7, 12-ம் அதிபதி. களத்திர ஸ்தான அதிபதி விரயாதிபதி. 5,7-ல் பலம் பெற்ற சுக்ரன் காதல் திருமணத்தை தருகிறது. குலதெய்வ அருள் கிடைக்கும், அயன சயன போகம் சிறந்த நிலையில் இருக்கும்.

    ஜாதகர் அழகு, ஆடம்பரத்திற்கு அதிகம் செலவு செய்யக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 12-ல் ஆட்சி பலம் பெற்ற சுக்ரன் எளிதில் திருமண வாழ்க்கையை அமைத்து தராது. பலருக்கு தவறான உறவை மிகைப்படுத்துகிறது. வயோதிகத்தில் சுக்ர தசை மாரகத்தை தருகிறது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் கால பைரவரை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு சுக்ரன் 6,11-ம் அதிபதி. ருண, ரோக சத்ரு ஸ்தான அதிபதி. லாபாதிபதி. சுக்ரன் வலுத்த தனுசு லக்னத்தினர் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்தால் கடன்ப டுவார்கள். தாய்மாமன் வாழ்நாள் முழுவதும் மதி மந்திரியாக இருப்பார்.

    அனுபவ ரீதியாக கேது தசையில் கடன் பட்ட தனுசு லக்னத்தினர் சுக்ர தசையில் கடன் நிவர்த்தி பெறுகின்றனர். கேது தசையில் கடன் படாத தனுசு லக்னத்தினர் சுக்ர தசை முழுவதும் கடனால் அவதிப்படு கிறார்கள். கேது குறுகிய கால தசை. சுக்ரன் நீண்ட கால தசை. சுய ஜாதகத்தில் சுக்ரனும் கேதுவும் நின்ற நிலைக்கு ஏற்ப பலன் மாறுபடும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு சுக்ரன் ஐந்து, பத்தாம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி. சுய ஜாதகத்தில் சுக்ரன் வலுத்த மகர லக்னத்தினர் அதிர்ஷ்டசாலிகள். ஒரு கேந்தி ரத்திற்கும் திரிகோணத்திற்கும் அதிபதிகள்பெயர் சொல்லக் கூடிய குடும்பம். அரசு உத்தியோகம், கவுரவ பதவி உண்டு.

    சிலர் குலத்தொழில் செய்ப வர்கள். சமுதாய அங்கீகாரம் நிறைந்த வர்கள். நல்ல பண்பான, பணிவான புத்திரர்கள் பிறப்பார்கள். குலதெய்வ கோவிலில் அதிக தானம், தர்மம் செய்பவர்கள். சுக்ரன் வலு குறைந்தால் நிலையான பதவி, புகழ் இருக்காது. ஆன்மீக நாட்டம் குறையும். பிள்ளை களால் மனக் கஷ்டம் மிகும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை குல தெய்வத்திற்கு அபிசேக ஆராதனை செய்து வழிபடவும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு சுக்ரன் 4, 9-ம் அதிபதி. சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. கும்பத்திற்கு 9-ல் அமர்ந்த சுக்ரன் நிச்சயம் பாதகத்தை தசை புத்தி காலங்களில் செய்வார். சுக்ரனும், சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பாதகத்தை செய்ய மாட்டார் என பலர் கூறினாலும் வினையை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் வலியின் வேதனை புரியும்.

    சுக்ரன் சுய ஜாதகத்தில் சுப வலு பெற்றவர்கள் பூமியினாலும், பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார். கடமையே கண்ணாக உள்ளவர்கள். தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் மீது பற்றும் பாசமும் உண்டு சுய ஜாதகத்தில் சுக்ரன் பலம் குறைந்தால் தசை, புத்தி காலங்களில் பாதகம் குறையும்.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    மீனம்

    மீன ராசிக்கு சுக்ரன் முயற்சி ஸ்தான அதிபதி. அஷ்டமாதிபதி. 3, 8-ம் அதிபதி. உடன் பிறந்த சகோதரர்களால் இன்னல்கள் வம்பு வழக்கு,நஷ்டம் மிகுதியாகும். அவர்களுடன் ஒற்றுமையாக இருக்க முடியாது.முக்கிய சொத்துக்கள், பாகப் பிரிவினை போன்ற எதற்கும் முறையான ஆவணம் இருக்காது.

    சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். சிலருக்கு மதம் மாறும் சிந்தனை மேலோங்கும். தெய்வ நம்பிக்கை குறையும். சிலருக்கு அடிக்கடி தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அடிக்கடி வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும்.

    சொல் புத்தியும் இருக்காது. சுய புத்தியும் கிடையாது. பய உணர்வு மிகுதியாக இருக்கும். தைரியம், வீரியம் குறைவுபடும். கற்பனையில் வாழ்வார்கள். செவித்திறன் குறைவுபடலாம். கீழ்படியாத வேலை யாட்கள் கிடைப்பார்கள். திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் தோல்வியை சந்திப்பார்கள்.விலை உயர்ந்த ஆபரணங்களை அடிக்கடி கைமறதியாக வைப்பார்கள் அல்லது அடகு வைப்பார்கள். மீன லக்னத்திற்கு சுக்கிர தசை வரவே கூடாது.

    பரிகாரம்

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட வேண்டும். மேலே சொன்ன பலன்கள் அவரவர்கள் ஜாதகத்தில் சுக்ரனோடு இணைந்த பார்த்த மற்ற கிரகம் பொருத்து பலனில் சிறு மாற்றத்தை தரும்.


    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.
    • அந்த கால கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள்.

    "இசை!

    இசை எப்போது உருவாகியிருக்கும்?

    குகைகளில், மரக்கிளைகளில் மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகளிடம் இருந்தும், ஊர்வன விஷப்பூச்சிகளிம் இமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள, இரவின் இருள் பயத்தால் ஒருவருக்கொருவர் தங்கள் இருப்பை தெரிவித்துக் கொள்ள ஏதோ ஓசை, சத்தம், சீழ்க்கை ஒலி (விசில்) போன்ற ஒலிகளை எழுப்பியிருக்கக்கூடும்.

    தாங்கள் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோல்களை குளிருக்கும் வெயிலுக்கும் போர்த்திக் கொண்டு உடையாய் மாற்றியதைப் போல, தோலை மரக்கட்டைகளில் சேர்த்துக்கட்டி, குச்சிகளால் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டியிருப்பார்கள். இவையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேம்பட்டு, பக்குவப்பட்டு இசைக் கருவிகளாக தோன்றியிருக்கும்!

    வாங்க, கொஞ்சம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி போகலாம்.

    1918-ல் தென்னிந்தியாவின் முதல் அசையும் திரைப்படம், ஆனால் மவுன திரைப்படம் "கீசகவதம்". 14.3.1931-ல் இந்தியாவின் முதல் பேசும்படம் "ஆலம் ஆரா" திரையிடப்பட்டதாம். தமிழகத்தில் 1931ல் வெளிவந்த முதல் பேசும் படம் "காளிதாஸ்".

    அப்போதைய கட்டுப்பெட்டியான காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வீடுகளில் ஏகப்பட்ட கெடுபிடி, தடை. அதனால் பக்தி படங்கள், புராணக் கதைகளை சொல்லும் திரைப்படங்கள் மட்டுமே தயாரிக் கப்பட்டது. சுதந்திரம் அடையாத காலம். அதனால் ஆங்கிலேய அரசுக்கு எதிரான படங்கள் எதுவும் எடுத்துவிட முடியாது. அரசின் தணிக்கைக் கட்டுப்பாடும் இருந்தது.

    அதன் பிறகு அரசர்கள் கால கதைகளைக் கொண்ட திரைப் படங்கள் வந்தன. பெண்கள் யாரும் நடிக்க முன் வராத அந்த காலக்கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள். திரைப்படங்கள் பக்திப் படங்களாக இருக்கவே கொஞ்சமாக பெண்களும் திரைத்துறைக்கு வந்தனர்.

    இன்னொரு புறம், அப்போது பின்னணி பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் போதே காமிராவுக்கு தெரியாதவாறு கூடவே ஹார்மோனியம் போன்ற குறைந்த இசைக் கருவிகள் மட்டுமே வைத்துக் கொண்டு, பேசியும் பாடியும் நடிப்பதை படமாக்குவார்கள். அதனால், பாடத்தெரிந்த ஆண், பெண்கள் மட்டுமே நடிக்க முடியும்.

    இந்த காலக் கட்டத்தில் தான் எம்.கே. தியாகராஜ பாகவதர் 1934ல், எம்.கே.ராதா -1936ல், பி.யு.சின்னப்பா 1938ல், டி.ஆர்.மகாலிங்கம் 1937ல் நடிக்க வருகிறார்கள். இவர்களின் பாடல்களுக்காகவே ஓடியத் திரைப்படங்கள் உண்டு.

    நடிகைகளில் டி.பி.ராஜலட்சுமி 1931ம் ஆண்டில் முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் நடித்தவர். அந்த காலத்திலேயே அஷ்டாவதானி என புகழப்பட்டவர். முதல் பெண் இயக்குநர்! கண்ணாம்பா 1938ல் நடிக்க வருகிறார். கே.பி.சுந்தராம்பாள் 1935ல் பக்த நந்தனார் பேன்ற திரைப்படத்தில் நந்தனாராக நடித்தார். அந்த நாளிலேயே தனது பாடல்களுக்காகவே பிரபலமானவர்.

    திராவிட இயக்கத்தை சேர்ந்த பலர் நாடகங்கள் நடத்தி வந்தனர். நாடகங்களின் மூலம் சுதந்திரக்கால வரலாறு, மற்றும் தேசத் தலைவர்கள் போராடியக் கதைகள் எல்லாம் பொதுமக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நேரடியாக சேர்த்தது. திரையரங்குகளை விட நாடங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் மெல்ல மெல்ல சமூகக் கதைகளும் வர ஆரம்பித்தன.

    கால இயந்திரத்தை விட்டு இறங்கி விடுவோம். திரும்ப அடுத்த தொடரில் தொடரலாம்!

    "இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் உதவியாளராகயிருந்த எம்.எஸ்.வி.

    பாடலாசிரியர்களிடம் மெட்டுக் கேற்ற பாடல் எழுதி வாங்குவார் என்று பார்த்தோமில்லையா?

    "கன்னியின் காதலி" என்றொரு திரைப்படம் 1949ல் வந்தது. அப்படத்திற்கு பாடல் எழுத ஒரு புதிய இளைஞன் தேர்வானார். அவரிடம் "தத்தகாரம்" சொல்லி பாடலுக்கு காத்திருந்தார் எம்.எஸ்.வி.

    (இசை அமைக்க வேண்டிய மெட்டுக்கு தானா, தன்னன்னா, தையன்னா, தத்தத்னா" என்று சொற்கள் இல்லாத ஓசையை மட்டும் பாடிக்காட்டவேண்டும். அந்த ஓசைக்கு பொருத்தமான சொற்களை பாடலாசிரியர்கள் எழுதுவார்கள்.

    "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் "முத்து இருக்குது சிப்பி இருக்குது"? என்ற பாட்டில் வருமே, அதுபோல் தானே என்று கேட்கறீங்க? அதுதான்! அதுவேதான்!)

    புதுக் கவிஞரும் பாட்டு எழுதி தந்துவிட்டார். வாங்கிப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வி. "இதென்ன களி, கூத்து"ன்னு எழுதியி ருக்கீங்க? என்கிறார். அந்த இளைஞனோ, "ஏன் பாட்டு மெட்டில பொருந்துகிறதே" என்கிறார்.

    "மெட்டுக்கு சரியா பொருந்துது, ஆனா... இந்த களி,கூத்து இதெல்லாம் சரியில்லை. மாத்திடுங்க", என்கிறார் எம்.எஸ்வி.

    "அவைதான் சரியான சொற்கள், அதையேன் மாத்தணும்?"

    அப்போதெல்லாம் வடமொழி சொற்கள் கலந்தும் பாடல்கள் இருக்கும்! இவர்களின் முதல் சந்திப்பே வாக்குவாதம்! அப்போது ஜூபிடர் பிக்சர்சல் நிறுவன கவிஞராக இருந்த "உடுமலை நாராயண கவி" அந்த வழியாக வந்தார், புதுக்கவிஞரின் வரிகளை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'அட, சரியான தமிழ் வார்த்தைகள் தான் எழுதியிருக்கீங்க" என்று பாராட்டிவிட்டு, தம்பி இந்த களி, கூத்து இதெல்லாம் இவங்களுக்கு வித்தியாசமாக தெரியுது. அதற்கு பதில் "காரணம்தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே'ன்னு போட்டு பாருங்க" என்கிறார்.

    இது மெட்டுக்கு சரியாப் பொருந்துதுண்ணே என உற்சாகமாகிறார் எம்.எஸ்.வி. எல்லாருக்கும் புரிகிற மாதிரி இருக்கட்டுமேன்னு தான்... சொன்னேன்.

    திரைப்படங்களில் காட்டப்படும் எழுதப்படாத சட்டம் போல "மோதலில் உருவான இவர்களது அன்பு" இறுதிக் காலம் வரை, "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று இரட்டையர்களாகவே திரையுலகில் கொடிக் கட்டிப் பறந்தார்கள். அந்த புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.

    உடுமலை நாராயண கவிப் பற்றி பார்த்தோமில்லையா? அவரின் வரிகளுக்கு சி.ஆர்.சுப்பராமன் பாடி, இசையமைத்த ஒரு பாடல்! "மருமகள்"என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற "லாலி சுபலாலி, காதலர் ஜாலி வெகு ஜாலி".

    கல்லூரி மாணவர்களில் ஒருஜோடி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். மீதி தோழி, தோழர்கள் அவர்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். வழக்கமாக சம்பிரதாயமானப் பாடல்கள் என்றால் திருமணம் முடிந்தவுடன் வரும் நலுங்குப் பாடலை "ஆனந்த பைரவி" ராகத்தில் அமைப்பார்கள். இது கல்லூரி மாணவர்கள் பாடுவது இல்லையா? அதனால் ராக் அண்ட் ரோல், கைத்தட்டல் என்று ஜமாய்த்திருப்பார்கள்.

    இதில் இன்னொரு புதுமையாக பாடலின் ஆரம்பத்திலும், கடைசி யிலும் "லாலி", "காதலர் வெகு ஜாலி" என்றவரிகள் வரும் போது பாடகர்கள் ஒரு மெட்டிலும், குழுவினர் லல்லல்லல்ல லல்லல்ல லா என்று வேறு ஒரு மெட்டிலும் பாடியிருப்பார்கள்.

    இந்த பாடல் சி.ஆர்.சுப்பராமன் இசையமைத் திருந்தாலும், அவருக்கு உதவியாளராக எம்.எஸ்.வி. இருந்தார் என்பதும் பாட்டுப் புத்தகம் வழியே தெரிகிறது.

    மேலே சொன்ன இசை வகை, "கவுண்டர் பாயிண்ட்" என்கிற மேற்கத்திய இசை முறையாகும். ஒருவர், பாடலில் ஒரு மெட்டில் பாடும்போது, இன்னொருவர் அதே நேரத்தில் அதே பாடலில் வேறு மெட்டில் பாடுவது. அந்தக் காலக் கட்டத்தில் இந்த இசையமைப்பு புதிது.

    இந்த இசை முறை மிக மிக முன்னோடியாக சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் கையாளப் பட்டிருப்பது 1953-ல் வந்த 'மருமகள்' படத்தில் வந்த 'லாலி சுபலாலி' பாடலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், 1952ல் வெளிவந்த 'பணம்' என்றத் திரைப்படத்திலும் கூட 'ஏழை நின் கோவிலை நாடினேன், எழில் மின்னும் சிலை வண்ண தேவியே' என்றப் பாடலில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி தங்களின் முதல் படத்திலேயே இந்த நுட்பத்தை கையாண்டு இருக்கிறார்கள்.

    இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கிலேயும், கடைசியிலும் கவுண்டர் பாயிண்ட் பாடல் வகையை பயன்படுத்தியிருப்பது மட்டுமில்லை, இந்த பாடலில் Over lapping என்ற முறை அதாவது ஒருவர் பாடும்போதே அந்த குரலின் கூடவே இன்னொரு குரலையும் பாட வைப்பது.

    இரு குரலும் ஒரே மெட்டில் ஒரே நேரத்தில் பாடினால் அது ஓவர் லாப்பிங் இரு குரலும் வேறு வேறு மெட்டில் ஒன்றாக ஒரே நேரத்தில் பாடுவது கவுண்டர் பாயிண்ட். இந்த இரண்டு நுட்பமுமே தங்களது முதல் படத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, "ஏழை நின் கோவிலை" பாடல் வால்ட்ஸ் என்ற மேற்கத்திய வகைப்பாடல்.

    24 வயது இளம் முதல் பட இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போதைய மிகப் புகழ்பெற்ற, கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி (நடிகை ஸ்ரீவித்தியாவின் அம்மா) அவர்களை முற்றிலும் புதிய மேற்கத்தியம் பாடவைத்தது புதுமை, புரட்சி எனலாம்.

    'குலேபகாவலி' என்றவொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த போது அதைக் கேட்ட ஜே.பி.சந்திரபாபு "இந்த மாதிரி இசைக்கு எப்படி ஆடமுடியும்? என்னால் ஆட முடியாது" என்று சொன்னதற்கு "நான் ஆடிக்காட்டுகிறேன் பாருங்கள்" என்று சொல்லி ஆடியும் காட்டினாராம் எம்.எஸ்.வி. அவர் சிறு வயதில் முறையாக நடனம் கற்றவராம். நடனத்தால் சந்திரபாபு அசந்துவிட்டாராம்.

    முன்பு ஒரு முறை செண்ட்ரல் ஸ்டுடியோவில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவிடம் பாட வாய்ப்பு கேட்டு சந்திரபாபு போனபோது, "பாடவில்லை, முனகுகிறார்"என்று சந்திரபாபுவை மறுத்தவர் தான் உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. பின்னாட்களில் இருவரும் உயிருக்கு உயிரான நண்பராகி விட்டார்கள்.

    இரவில் பதினோரு மணிக்கு கூட எம்.எஸ்.வி.யின் தாயார் நாராயணிக்குட்டி அம்மாவை தோசை சுட்டுத் தர சொல்லி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமான சந்திரபாபுவின் கடைசி காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து கவனித்துக் கொண்டார்.

    எம்.எஸ்.வி. "நான் இறந்துவிட்டால் எனது உடலை கொஞ்ச நேரம் விஸ்வநாதனின் வீட்டில் கிடத்தி விட்டு பிறகு மயானத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று ஜே.பி.சந்திரபாபு சொல்லியிருந்தாராம். அப்படியே நடந்ததாம். மோதலில் பூத்த இன்னொரு அழகான நட்பு இது!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    கவிஞர்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com

    • பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
    • மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம்.

    மனித வாழ்வின் வெற்றிக்கு குரு பலம் மிக அவசியம். அதனால் தான் குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி என்ற பழமொழியை கூறினார்கள். குரு எந்த ஒரு ஜாதகதாரரையும் கெட்டு போக விடாது. அதே போல் இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது. இனி பனிரெண்டு லக்னத்திற்கும் குரு தோஷம் நீக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

    மேஷம்

    மேஷ ராசிக்கு குரு 9, 12-ம் அதிபதி, பாக்கிய அதிபதி மற்றும் விரய அதிபதி. சுய ஜாதகத்தில் குருவும் பலம் பெற்றால் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். தந்தை வழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தர்ம காரியங்கள் செய்து மகிழும் பாக்கியம் பெற்றவர்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.தாய், தந்தை வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள்.

    சுய ஜாதகத்தில் குரு பலம் குறைந்து பனிரெண்டாமிடமும் வலுத்தால் இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். இவர்களுடைய சொத்துக்கள் உறவுகளுக்கே பயன்படுகிறது. அல்லது குடும்ப சொத்துக்களை தந்தைக்காக அல்லது தந்தையால் இழக்க நேரும். அல்லது பாக்கியமும் தன யோகமும் குறைவுபடும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவும் இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    ரிஷப ராசிக்கு குரு 8, 11-ம் அதிபதி. அஷ்டமாதிபதி மற்றும் லாப அதிபதி. அஷ்டமாதிபதியாக குரு சுப வலுப்பெற்றால் சிலருக்கு அதிர்ஷ்ட பணம், லாட்டரி, உயில் சொத்து கிடைக்கும். அஷ்டமாதிபதியாக குரு அசுப வலுப்பெற்றால் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், தீராத கடன் ஏற்படும். பெண்களுக்கு கடுமையான மாங்கல்ய தோஷம் உண்டாக்கும். சிலருக்கு கால தாமத திருமணத்தை தரலாம் அல்லது திருமணத்திற்குப் பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.

    லாப அதியாக குரு சுப வலுப்பெற்றால் எந்த தவறு செய்தாலும் தண்டணையிலிருந்து தப்பி விடுவார்கள். தொட்டது துலங்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பங்கு வர்த்தகம், அதிர்ஷ்ட வருமானம் இருக்கும். நயா பைசா பாக்கி இல்லாமல் எல்லா கடனையும் பைசல் செய்து நாணயத்தை காப்பாற்றுவார்கள்.மத்திம வயதில் குரு தசை புத்தி வந்தால் ரகசிய இரண்டாம் திருமணம் நடக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    மிதுனம்

    மிதுன ராசிக்கு குரு 7,10ம் அதிபதி. களத்திர ஸ்தானம், மற்றும் தொழில் ஸ்தானம் என்ற இரு கேந்திரங்களுக்கு அதிபதி என்பதால் கேந்திரா திபத்திய தோஷம் உண்டு. உபய லக்னம் என்பதால் பாதகா திபத்திய தோஷமும் ஏற்படும்.7ம் அதிபதியாகிய குரு சுப பலம் பெற்றால் வாழ்க்கைத் துணை யால் நண்பர்களால், தொழில் கூட்டாளியால், வாடிக்யா ளர்களால் சகாயமான பலன் உண்டு.

    10-ம் அதிபதியாக குரு பலம் பெற்றால் தொழில் மூலம் ஒரு உயர்வு உண்டு. வருமானம் அதிகமாக இருக்கும். அசுப பலம் பெற்ற குரு தசை புத்தி காலங்களில் மாரகம், பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் விவாகரத்து பெறுவது, நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு உருவாகுவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை ஸ்ரீ ராமானுஜரை வழிபட நன்மைகள் நடக்கும்.

    கடகம்

    கடக ராசிக்கு குரு 6, 9-ம் அதிபதி. ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதி.லக்னத்தில் குரு உச்சம் பெற்றாலும் தனுசில் ஆட்சி பெற்றாலும் கடன் கதவை தட்டும். குருவிற்கு சனி, கேது சம்பந்தம் இருந்தால் கடன் தீராது. தனித்த குருவாக இருந்தல் கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    ஏதாவது ஒரு வழியில் ரொட்டேஷன் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். குருவிற்கு சனி,கேது சம்பந்தம் இருப்பவர்களின் கடன் ஜாதகரை உறுத் தெரியாமல் ஆக்கி விடும். குரு மற்றும் கேது தசை காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கிய அதிபதி என்பதால் முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர் கதையாக இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்க வேண்டும்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு குரு 5, 8-ம் அதிபதி. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. குருவும் 5,8-மிடமும் பலம் பெற்றால் பிள்ளைகளால் பெருமை, பாராட்டு உண்டு. மந்திர உபதேசம், குருவின் நல்லாசிகள் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும். பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. குருவும் 5,8மிடம் பலம் குறைந்தால் கற்ற வித்தை பலன் தராது.பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்க முடியாமல் தாலியை கழட்டி வீசுகிறார்கள் அல்லது தாலியை அடமானம் வைக்கிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு குரு 4,7-ம் அதிபதி. சுக ஸ்தானம், களத்திர ஸ்தான அதிபதி. பாதகாதிபதி, மாரகா திபதி. சுய ஜாதகத்தில் குருவும் 4,7-மிடமும் பலம் பெறும்போது அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும்.

    கணவன் மனைவிக்குள் அன்யோன்யமும், நல்லுறவும் நிறைந்தி ருக்கும். குருவும் 4,7-மிடமும் அசுப வலுப்பெற்றால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யத் தவறுவது இல்லை. பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதியாக வரும் கிரகங்கள் தசாபுத்தி காலங்களில் எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடும். உபயம லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவீரத்தை உணரும் முன்பு தண்டனையே கிடைத்துவிடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை புதன் ஓரையில் சக்ரத்தாழ்வாரை வழிபட வேண்டும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு குரு 3,6-ம் அதிபதி. சகாய ஸ்தானம் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி.

    சுய ஜாதகத்தில் 3ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். 6-ம்மிடமும் குருவும் பலம் பெற்றால் அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளி யாகிறார்கள். உடன் பிறந்த இளைய சகோதரத்தால் தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகி றார்கள். சிலர் ஜாமீன் பிரச்சினையில் மாட்டுகிறார்கள்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்கு குரு 2, 5-ம் அதிபதி தனா திபதி, பஞ்சமாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால். மாபெரும் புண்ணியம். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். குல தெய்வ அனுகிரகம் உண்டு. பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்க ளால் பிள்ளைகளுக்கும் பயன் உண்டு.

    உயர் கல்வி யோகம் உண்டு. வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை,ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்ப வர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.குரு பலம் குறைந்தால் நிலையான வருமானம் இருக்காது. பிள்ளைகளால் மனக் கஷ்டம் உண்டாகும். அதிர்ஷ்டம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை நவகிரக குருபகவானை வழிபட வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசிக்கு குரு 1, 4-ம் அதிபதி. லக்னா அதிபதி, கேந்திராதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் நிச்சயம் வீடு மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். பொன்னும் பொரு ளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். இவர்கள் பண்ணை யாளர்களாக, விவசாயிகளாக இருப்பார்கள். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்து வார்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த வர்களாக இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.

    குரு பலம் குறைந்தால் சொத்துக்களால் பயன் இருக்காது. பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உடல் நல பாதிப்பு இருக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் அனுசரனை இருக்காது. தாய் அடிக்கடி நோய் வாய்ப்படுவார். குரு கேந்திராதிபதி என்பதால் தசை புத்தி காலங்களில் தாய்வழி உறவுகளுடன் தேவையற்ற மனக் கசப்பு உண்டாகும். சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குரு ஓரையில் பஞ்சமுக கணப தியை வழிபட வேண்டும்.

    மகரம்

    மகர ராசிக்கு குரு 3,12-ம் அதிபதி. சகாய ஸ்தான அதிபதி விரய அதிபதி. மூன்றாம் அதிபதியாகி குரு பலம் பெறும் போது லட்சியங்கள் நிறைந்தவர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். 12ம்மிடம் வலுப்பெற்றால் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். செவித் திறன் குறையும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை இருக்கும். அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக ஏமாற்றத்தை சந்திபார்கள். வேலையாட்களால் இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசிக்கு 2,11-ம் அதிபதி. குரு தன, லாப அதிபதி. இவர்களுக்கு குரு அதிகப்படியான யோகத்தை வழங்குவார். சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் செல்வாக்கு, சொல்வாக்கு நிறைந்தவர்கள். தனது வாக்கு திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்று வதில் வல்லவர். லாபம் இல்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர்.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு உயர்வு உண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமும் உண்டு. குரு பலம் குறைந்தால் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை குறையும். புகழ், அந்தஸ்து, கவுரவம் மட்டுபடும். தனக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தவறிப் போகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

    மீனம்

    மீன ராசிக்கு குரு 1, 10-ம் அதிபதி. லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சுய ஜாதகத்தில் குரு பலம் பெற்றால் அற்புதமான உன்னத பலன்களை அனுபவிக்கிறார்கள் இவர்கள் ஆசிரியராகவோ, காலேஜ் புரபசராகவோ, அல்லது யாரேனும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கு பவராகவோ இருப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில், அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.

    குரு பலம் குறைந்தால் லக்னாதிபதி என்பதால் எளிதில் கண் திருஷ்டி தோஷம், அவமானம் போன்றவை தொடர்கதையாக இருக்கும். குரு கேந்திராதிபதி என்பதால் வருமான வரி துறையிடம் சிக்குவது, கொடுக்கல் வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசவுகரியங்கள் உண்டாகும்.

    பரிகாரம்

    வியாழக்கிழமை குபேர லட்சு பூஜை செய்ய வேண்டும். ஒரு ஜாதகத்தின் பலமே குரு பலம் தான். எனவே குரு பலத்தை அதிகரிக்க உரிய பரிகாரத்தை பயன்படுத்தி பயன் பெற நல் வாழ்த்துக்கள்.

    பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது.
    • உலகத்தை இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவல் குறித்த செய்திகளை இனிமையுடன் வாசிக்கக் காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.

    மனிதராகப் பிறந்துள்ள நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாழ்க்கை இரவலாக வழங்கப்பட்டுள்ளது எனத் தத்துவவாதிகள் கூறுகின்றனர். உருவமில்லாத உயிர் மட்டுமே நமக்குடையது. அதற்குத் தகுந்தாற்போல உடம்பையும், வாழ்விட வசதிகளாகிய உலகத்தையும் இரவலாக வழங்கி ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கிறான்.

    இரவலாகப் பெற்ற உடம்பை வைத்துக்கொண்டு, வாய்க்கின்ற வாழ்க்கை இன்பமோ? துன்பமோ? முடியும் வரை வாழ்ந்துவிட்டு, இரவலாகப் பெற்ற உடம்பை இறைவனிடமோ இயற்கையிடமோ திரும்ப வழங்கிவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர்.

    'இரவல் தந்தவன் கேட்கின்றான்! அதை இல்லையென்றால் அவன் விடுவானா?' எனும் அர்த்தப் பொதிவுள்ள கவியரசர் கண்ணதாசனின் பாட்டு இரவல் எனும் பொருண்மையின் ஆழத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. நம்முடைய பிறப்பு என்பது எந்த விதக் கட்டணமுமின்றி இயற்கையாகவே நிகழுகிறது. மருத்துவக் கட்டணம் மனிதர்க்கானது; ஆயினும் மனிதப் பிறப்பின் நிகழ்விற்காக எந்தக் கட்டணத்தையும் நாம் இயற்கையிடம் செலுத்துவதில்லை.

    உடல், கண், காது, மூக்கு, வாய் ஆகிய பொறிபுலன்கள், கை, கால்கள் முதலிய அங்கங்கள், மூளை, மனம் முதலிய அறிவின் செயலாக்கங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் முதலிய உள்ளுறுப்புகள், உதவிக்கென நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்கள் கொண்ட இயற்கையின் தொகுதி இவற்றையெல்லாம் இறைவன் நமக்கு இரவலாகவே வழங்கியிருக்கிறான்.

    அது என்ன இரவல்?

    ஒருவரிடமிருந்து ஒரு பொருளை அல்லது ஒரு சேவையைப் பெறுகிறோம் என்றால் அதனை நான்கு வகையில் பெறலாம்.

    பணம் கொடுத்துப் பெறுவது முதல் வகை. இவ்வகையில் பொருளுக்கான அல்லது சேவைக்கான பணமதிப்பைத் தருபவர் தீர்மானிப்பார்.

    பெறுபவர் அதனை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த விலை கொடுத்துப் பெற்றுக் கொள்வார்; அல்லது தனக்கு உகந்த குறைந்த ஒரு விலையைக் கூறி, விற்பவர் அந்த விலைக்கு ஒத்துவரும் பட்சத்தில் அதைக் கொடுத்துப் பெற்றுக் கொள்வார். பொருளை விலைகொடுத்து வாங்குவது முதல் வகை.

    ஒரு பொருளை இலவசமாகப் பெறுவது அல்லது பண்டமாற்று எதுவுமின்றி வாங்குவது இரண்டாவது வகை. இதில் கொடுப்பவர் முழுமனத்தோடு பொருளை அடுத்தவருக்குக் கொடுப்பார்; பெறுபவர் மனமகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக்கொள்வார். யாசகமாகப், பிச்சையாகப் பெறுவதையும் ஒருவகையில் இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இலவசமாகப் பொருளை வாங்குவது இரண்டாவது வகை.

    ஒரு பொருளை விலைக்கும் கொடுக்காமல். இலவசமாகவும் வழங்காமல் கடனுக்குக் கொடுப்பது மூன்றாவது வகை. இவ்வகையில் பெரும்பாலும் பணமே கடனாக வழங்கப்படும். வாங்குகிற பணத்தைத் திருப்பிக் கட்டவேண்டும் என்கிற கடப்பாடோடு இது பெறப்படுவதால் இதற்குக் 'கடன்' என்று பெயர். 'கடன்' என்றால் தமிழில் கடமை என்கிற பொருளும் உண்டு.

    பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையென்பதால் அப்பெயர். பெற்றவனுடைய பற்றாக்குறைத் தேவையை நிவர்த்தி செய்ய அக்கடன்தொகை உதவியதால் கடனைத் திருப்பியளிக்கும்போது வட்டியாகச் சிறிது கூடுதல் தொகையும் வழங்கியாக வேண்டும். நிதிமேலாண்மையில் பெறப்படுகிற கடனுக்கேற்ற வட்டிவிகிதங்களும் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளைக் கடனாக வாங்குவது மூன்றாவது வகை.

    விலைக்கும் வாங்காமல், இலவசமாகவும் பெறாமல், கடனாகவும் பெற்றுக்கொள்ளாமல், ஒரு பொருளை வாடகைக்கு வாங்குவது நான்காவது முறை. குறுகிய காலத் தேவைக்கு மட்டுமே பயன்படுகிற சிலபொருள்களை விலைகொடுத்து வாங்குவது பண விரயம் என்று எண்ணுபவர்கள் அவற்றைத் தேவைப்படும்போது மட்டும் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திவிட்டுத் திருப்பித் தந்துவிடுவது இவ்வகை.

    நிரந்தரமாக இல்லாமல் சில ஊர்களில் தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிப், பிறகு பணிமாறுதல் பெற்றவுடன் அடுத்த ஊரில் வாடகைக்கு வீடு தேடுவர். இவர்கள் ஊர்கள்தோறும் சொந்த வீடுகள் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு வசதிகள் அற்றவர்கள் அல்லது தேவையுமற்றவர்கள்.

    அந்தக் காலங்களில் சொந்தமாகச் சைக்கிள்கூட வைத்துக்கொள்ளும் வசதியற்றவர்களாய் மக்கள் இருந்தனர். அதனால் கிராமங்கள்தோறும் வாடகைக்குச் சைக்கிள்கள் விடும் கடைகள் இருந்தன. அன்றாடக் குறுகிய தூரப் பயணங்களுக்கு மக்கள் வாடகைச் சைக்கிள்களைப் பயன்படுத்தினர். சொற்ப வாடகைச் செலவில் குறிப்பிட்ட காலத்திற்குப் பொருளின் முழுப் பயனையும் இவர்கள் பெற்று விடுவர். ஒத்திக்கு வாங்குவது, குத்தகைக்கு எடுப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

    இரவல் என்பது இவை அத்தனையையும் தாண்டியது. இரவலாக வாங்கப் படும் பொருள் எந்தப் பணப்பலனையும் சாராதது; அதே நேரத்தில் இலவசமானதும் கிடையாது. இரவலாக ஒரு பொருளை ஒருவரிடமிருந்து ஒருவர் பெறுகிறார் என்றால், அதற்கு விலையாகவோ, கடனாகவோ, வாடகையாகவோ அல்லது பிணையாகவோ எந்தப் பொருளையும், பணத்தையும் தரவேண்டியது இல்லை.

    எனவே இரவலாகப் பெறப்படும் பொருள் முழுக்க முழுக்கத் தருபவருக்கு உரிமையான சொந்தப் பொருளாகவே இருக்கும். வாங்கியவர் பொருளின் பயனை அனுபவித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் இரவல் வாங்கிய பொருளைத் தந்தவருக்கு உரிய நன்றியுடன் திருப்பித் தந்துவிட வேண்டும்.

    அந்தக் காலங்களில் தங்கநகை முதலிய அணிகலன்கள் வசதிபடைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருக்கும். திருமணம் மற்றும் மங்கல விழாக்கள் வரும்போது வசதியற்ற உறவினர்கள், வசதியுள்ளோரிடம் இரவலாக அணிக்கலன்களை வாங்கி அணிந்துகொள்வது வழக்கம். விசேஷம் முடிந்ததும் திருப்பிக்கொடுத்து விடுவர். இன்று எல்லார் வீடுகளிலும் தங்க ஆபரணங்கள் இருந்தாலும், திருட்டுபயத்திற்கு அஞ்சி, நகைகளை வங்கி லாக்கரில் தான் வைத்துவிடுகிறோம்; விசேஷங்களுக்குத் தேவையென்றால் வங்கிக்குச் சென்று இரவல்நகை பெற்று வருவதுபோலப் பத்திரமாக எடுத்து, விழா முடிந்ததும் பத்திரமாகத் திருப்பி வைத்து விடுகிறோம்.

    அதுபோல ஆடைகளையும் இரவல்வாங்கி அணிந்துகொண்ட காலம் ஒன்று இருந்தது." மாப்ள அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!" என்பதுபோன்ற திரைப்படக் காமெடிகள் இதை விளக்கும்." பட்டுப் புடவைய இரவல் குடுத்துட்டுப் பின்னாடியே பாயை எடுத்திட்டுப்போய் அவ உட்கார்ற இடமெல்லாம் விரித்துப் பட்டுப் புடவையை அழுக்காகாமல் பார்த்துக்கொண்ட பெண்மணி" கதைகளும் பழமொழிகளில் உண்டு.

    சைக்கிள், இருசக்கர வாகனங்கள், கார் முதலான வாகனங்களையும் இரவல் வாங்கிப் பயன்படுத்துகிற பழக்கம் இன்றும் இருக்கிறது. சில பொருள்கள் இரவல் வாங்குவதற்கென்றே படைக்கப்பட்டவை போல இருக்கும். வீடுகளில் பால், சீனி, காபிப் பொடி போன்றவை அடிக்கடி இரவலாகப் பெறப்படுபவை. அதே போல ஆணி அடிக்கப் பயன்படும் சுத்தியல், திருப்புளி, மின்சார டெஸ்டர், ஏணி,அயர்ன்பாக்ஸ், குடை போன்றவையும் இரவல் பட்டியலில் இடம்பெறுபவை.

    வங்கிகளுக்குச் சென்றால், அங்கே படிவங்களை நிரப்பப், பேனாவிற்காக, வந்திருப்பவர்களின் சட்டைப் பைகளையும் கைகளையும் நோட்டமிடுபவர்களைப் பரவலாகப் பார்க்கலாம். சிலர், படிவம் நிரப்பிக் கொண்டிருப்பவரின் அருகில் வந்து நின்றுகொண்டு, கொஞ்சம் எழுதி முடிச்சிட்டுப் பேனாவை எனக்குத் தருவீர்களா? எனச் சொந்தப் பேனாவைக் கேட்பதைப்போலக் கேட்பர்.

    இதற்கும் மேலே சிலர், சார் உங்களோடதை நிரப்பிட்டு எனக்கும் கொஞ்சம் நிரப்பித் தருவீங்களா? என்று படுத்துவார்கள். பெருவாரியான மக்கள் பேனாவை இரவல் கேட்கும் இடம் வங்கிதான். அதிலும் பலர் இரவல் வாங்கிய பேனாவைத் திருப்பித் தராமலேயே சென்றுவிடுவதும் உண்டு.

    இரவல் கொடுக்கிற பொருள்களிலேயே பெரும்பாலும் திரும்பி வராத பொருள் புத்தகம் தான். நிறையப் புத்தகங்களைத் தன் வீட்டில் வைத்திருக்கும் ஒரு எழுத்தாளர் சொன்னார்," கேட்பது யாராக இருந்தாலும் புத்தகங்களை மட்டும் இரவலாகக் கொடுக்காதீர்கள்; அவை எக்காலத்திலும் திரும்ப வரப்போவதேயில்லை. என்னிடம் இருக்கிற பல புத்தகங்கள் நான் இரவலாகப் பெற்றுத் திரும்பக் கொடுக்காதவைதாம்".

    மார்க் ட்வைன் பிரபலமான மேனாட்டு எழுத்தாளர். அவர் எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் கையில் ஒரு குடையோடு செல்வது வழக்கம். அந்த நகரில் மார்க் ட்வைன் என்றாலே கையில் குடையோடு இருப்பவர் என்பதே அடையாளமாகிப் போனது.

    அவர் ஒருநாள் தனது கையிலிருந்த குடை மிகவும் பழையதாகவும் பழுதாகவும் போய்விட்டதால் அதைக் குப்பையில் எறிந்து விட்டுப் புதிதாகஒரு குடை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார். தனது பழைய குடையை அன்று மாலை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். மறுநாள் காலை விடிந்ததும் வீட்டு வாசலில் அழைப்புமணி ஒலித்தது. தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்து பார்த்தார் மார்க் ட்வைன்.

    அந்தப் பகுதியைத் துப்புரவு செய்யும் தொழிலாளி, மார்க் ட்வைன் குப்பைத் தொட்டியில் போட்ட குடையுடன் நின்றிருந்தார். " இது உங்கள் குடை தானே!; இந்தக் குடையோடு அடிக்கடி உங்களை இந்தத் தெருவில் பார்த்திருக்கிறேன்; குப்பைத் தொட்டிக்குள் யாரோ தெரியாமல் போட்டிருக்கிறார்கள்! இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

    அடுத்து என்ன செய்வது? என யோசித்த மார்க் ட்வைன் அந்தக் குடையோடு அந்தப் பகுதியிலிருந்த குளக்கரைக்குச் சென்று குளத்திற்குள் குடையை வீசியெறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அந்தோ பரிதாபம்! அன்று மாலையே இவருடைய நண்பரொருவர், குடையை குளக்கரையில் கண்டெடுத்ததாகச் சொல்லி, மார்க் ட்வைனிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

    நிரந்தரமாக அந்தக் குடையிடமிருந்து பிரிவது எப்படி?. மார்க் ட்வைன் பக்கத்து வீட்டு நண்பரின் கதவைத் தட்டினார்; குடையை இரவலாகத் தருகிறேன்; வைத்திரு; நான் கேட்கும்போது திருப்பித்தா! எனத் தந்துவிட்டு வந்தார். அந்தக் குடை திரும்ப வரவேயில்லை. இரவலுக்கு அவ்வளவு சக்தி.

    இரவல் என்பது அவசர ஆத்திரத்திற்குக் கருணையோடு கிடைக்கிற உதவி; அதுவும் நூல்களாக இருந்தால் பேரறிவு. பெற்றதைத் திரும்ப அளிக்கும் குணம் இரவல் பெறுவதில் இனிமையோடு இருக்க வேண்டும்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்! தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் பரோபகாரம் இரவல் தருவதில் உண்டு. நாம் தொடக்கத்தில் கண்டதைப்போல இந்த வாழ்வே நமக்கு இரவல் வாழ்க்கைதான். நன்றாக வாழ்ந்துவிட்டு எதிர்காலச் சமூகத்திற்காக இந்த பூமியின் செல்வ வளத்தை, அறிவு வளத்தை மேலும் செழுமையாக்கித் திருப்பித் தந்துவிட்டுச் செல்வதே இரவல் வாழ்வியலின் லட்சியமாக இருக்கட்டும்.

    தொடர்புக்கு 9443190098

    • இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது?
    • திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? "இசை" என்றாலே கேட்கும் அல்லது எழுப்பப்படும் ஒலி நயமாக இருந்தால் நம்மையறியாமல் நாம் அந்த ஒலியுடன் ஒன்றிவிடுகிறோம்! இசைந்து விடுகிறோம். அதனுடன் நல்லிணக்கத்துடன் ஒன்றிப்போக செய்வதால் தான் அப்படி வாசிக்கப்படும் காற்று இசைக் கருவியை "ஹார்மோனியம்" என்கிறோம்.

    மகாகவி பாரதியார் தான் பாடும் பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு விடுவாராம். 1890 முதல் 1973 வரை வாழ்ந்த இசை அறிஞர் பாபநாசம் சிவன் தான் இயற்றும் பாடல்கள் எந்த ராகங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு விடும் பழக்கம் இவருக்குமுண்டு.

    இவர் திரைப்பட பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். "மன்மத லீலையை வென்றார் உண்ேடா" என்ற புகழ்ப்பெற்றப் பாடலை எழுதியவர் இவர்தான். இப்படி பாரம்பரியமாக பாடல்கள் இசையமைக்கப்பட்ட காலங்கள் அவை!

    அந்த காலத்தில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்த "ஜீபிடர் பிக்சர்ஸ்" ஒரே சமயத்தில் நான்கு படங்கள் தயாரித்தார்கள். அப்படங்களுக்கு இசையமைக்க, கோயம்புத்தூ ருக்கு சென்னையில் இருந்து சி.ஆர்.சுப்பாராமன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா, சி.எஸ்.ெஜயராமன் ஆகியோர் போவார்கள்.

    இசையமைத்துவிட்டு சென்னை திரும்பும் வரையில் அவர்களுக்கு சுரங்கள் எழுதித்தருவது, அரங்கம் ஏற்பாடு செய்வது, பாடல் ஒத்திகைக்கு உதவுவது என்று எல்லாப் பொறுப்புகளையும் நிர்வாகித்து வந்தவர் எம்.எஸ்.வி.

    இதனால் அவர் பெற்ற இசை ஞானம், திறமை, அனுபவம் இசையமைக்கத் தேவையான எல்லா மேலாண்மையும் கைகூடி வந்தது என்றே சொல்லவேண்டும்.

    இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமனிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி. விரைவில் தனது நேர்மையான உழைப்பால், தலைமை உதவியாளரானார். இதற்கிடையே 'ெஜனோவா' என்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்திற்கு ஏற்கனவே ஞானமணி என்ற இசையமைப்பாளர் இருந்தாலும் எம்.எஸ்.வி. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.

    பகலில் சி.ஆர்.சுப்பாராமன் படத்திற்கு இசையமைப்புக்கான உதவிகள் செய்வதும், அவரிடம் ஆசிப் பெற்று, இரவுகளில் "ஜெனோவா" படத்திற்கு இசையமைப்பதுமான அவரது உைழப்பு எல்லோரையும் வியப்புடன் எம்.எஸ்.வி. யை திரும்பி பார்க்க வைத்தது. தனது உதவியாளர், படத்திற்கு இசையமைப்பாளராக முன்னேறியதில் சுப்பாராமனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

    தனது குருவிற்கு தான் இசையமைத்த படத்தின் பாடல்களை நேரில் போட்டுக்காட்டி ஆசி பெறவேண்டும் என நினைத்து அதற்கென ஒரு நாளும் குறித்து அரங்கமும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டார்... அப்போதுதான், சுப்பாராமன் இறந்துவிட்ட செய்தி வருகிறது. நொந்து அழுதேவிட்டார் எம்.எஸ்.வி. ஏற்கனவே, சுப்பாராமனிடம் இசையமைப்பில் எல்லா பொறுப்பிலும் இருந்து வந்த எம்.எஸ்.வி.யிடம், சுப்பாராமன் பாதியில் இசையமைத்து நின்றுவிட்ட படங்களுக்கு இசையமைத்து முடித்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டார்கள் தயாரிப்பாளர்கள். எம்.எஸ்.வி. அவற்றை முடித்துக் கொடுத்தார்.

    சுப்பாராமன் குழுவிலிருந்த டி.கே.ராமமூர்த்தி என்பவருக்கும் வாய்ப்புகள் வந்தன. டி.கே.ராமமூர்த்தி சிறந்த வயலின் மேதை. இவர் 72 மேளகர்த்த ராகங்களையும் வாசிக்கத்தெரிந்தவராம். அதுமட்டுமல்ல, இசையமைப்பில் வயலின்கள் வாசிக்கும் போது எந்த வரிசையில் இருக்கும் என்பதையும் கலைஞர் தவறாக வாசிக்கிறார் என்பதையும் துல்லியமாக சொல்லும் அளவிற்கு நுட்பம் ெதரிந்தவர். இவருடைய இந்த திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

    "அபூர்வ ராகங்கள்" - என்றொரு திரைப்படம் 1975ல் வந்தது. இயக்குநர் சிகரம், கே. பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்த திரைக்கதையே ஒரு அபூர்வம். தன்னைவிட மூத்தவரான நடிகை ஸ்ரீவித்யாைவ நடிகர் கமல்ஹாசன் விரும்புவார். கமல்ஹாசன் தந்தையான மேஜர் சுந்தர ராஜனை, ஸ்ரீவித்யா மகளான நடிகை ஜெயசுதா விரும்புவார். ஒரு சிக்கலான கதை.

    இயக்குநர் கே. பாலசந்தர், கதையை சொல்லும் போது, எனக்கு ஒரு அபூர்வமான பாடல் வேண்டும். வித்தியாசமான ராகத்தில் இருக்கணும் என்றார். இதுவரை யாரும் மெட்டு போடாததாக இருந்தால் சிறப்பு என்றார்.

    எம்.எஸ்.வி. சரி என்று சொல்லிவிட்டு, சங்கீத வித்தகர் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணவிடம் சென்று, செய்தியை சொல்லி, "அண்ணே ஒரு அபூர்வமான ராகத்தை சொல்லுங்கள் " என்று கேட்டார்.

    அவர், "மஹதி" என்றொரு ராகம், இருக்கிறது. அது நான்கே சுரங்கள் கொண்டது. அதில் மெட்டமைத்துப் பாருங்கள்" என்று சொல்லி விட்டார்.

    'மஹதி ராகம்' - ச,க,ப,நி, என்ற நான்கே சுரங்கள் கொண்டது. நான்கு சுரங்களுக்குள் இசை அமைப்பது கடினம்.

    கமல்ஹாசன் விரும்பும் ஸ்ரீவித்யாவின் பெயர் "பைரவி" .அது ஒரு ராகத்தின் பெயர்! இதனால் ஸ்ரீவித்யாவின் பெயரை பாடலில் நடுவில் வைத்து "அவளொரு பைரவி" - என்று எழுதியிருப்பார் கவியரசர்.

    ஆனால், பாடல் கே.பி.சார். கேட்டபடி மஹதியில் தரவேண்டும். அவ்வாறே செய்து நடுவில் அவள் பெயரை பைரவி என்று குறிப்பிடும் இடத்தில் 'பைரவி' ராகத்தையும் காட்டியிருப்பார்.

    திரைப்படங்களில் காட்சிகளை சொல்ல ஒரு சில உவமைகளை காட்டி குறிப்பால் உணர்த்துவார்கள். அதைப் போல அந்தப் பாடலின் சுட்டிக்காட்டும் வகையில் சிம்பாலிக் சுரம் கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. ஒரு புதிய உத்தி அது! இந்த இரண்டு ராகங்களை இணைத்திருப்பது என்பது எம்.எஸ்.வி. யின் படைப்புத்திறனுக்கு ஒரு மைல் கல்!

    "நீ காதலிக்கும் பெண் யார்" என்று கமலிடம் ஸ்ரீவித்யா கேட்கிறார். கமல்ஹாசன் இசையிலே புதிர் போடுகிறார். தான் காதலிக்கும் பெண்ணின் சிறப்புகளை அதிசய ராகமான மஹதியில் வர்ணித்துக் கொண்டே வருகிறார்.

    அதிசய ராகம்....

    ஆனந்த ராகம்....

    அழகிய ராகம்ம்ம்...

    அபூர்வ ராகம்.... என்று பல்லவி பாடுகிறார்.

    பல்லவி என்றால் பாடலின் முதல் 2 அல்லது 4 வரிகள். அனுபல்லவி என்றால் பல்லவி அடுத்து வரும் 2 வரிகள். அதற்கு பின் வரும் பத்திகளுக்கு சங்கீதத்தில் சரணம் என்று பெயர்.

    அடுத்து வரும் சரணத்திலும் காதலியைப் பற்றிய புகழ்ச்சி தான். இரண்டாம் சரணம் முடிந்தவுடன் வரும் இசையிலே ஒரு மாற்றம் தருகிறார். இங்குதான் மெட்டும் மாறுகிறது.

    "ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி!

    மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"

    இந்த இருவரிகளையும் "பைரவி" ராகத்தில் அமைத்திருப்பார். எம்.எஸ்.வி.

    கமல்ஹாசன், "நான் காதலிக்கும் பெண் 'பைரவி' யாகிய நீ தான் என்பதை புரிந்துக் கொள்ளேன் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக இசை ரீதியான துப்பு ஒன்று கொடுக்கிறார்.

    ஸ்ரீவித்யாவிற்கு, திடீரென ஏன் பைரவி ராகத்தில் பாடுகிறார்? 'பைரவி' என்ற பெயரில் தன் மாணவிகளில் யாருமில்லையே என்ற சிந்தனையிலேயே இருப்பார், யோசிக்கையில் புருவம் சுருக்குவதை கூட காட்டுவார் கே.பி.

    "இன்னுமா புரியலை" என்ற வசனம் பாடலின் நடுவில் கமல்ஹாசன் சொல்லிவிட்டு மறுபடியும் பாடுவார்.

    "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி:

    முழுவதும் பார்த்தால், அவளொரு பைரவி,

    அவளொரு பைரவி, அவளொரு பைரவி"என்று பைரவி ராகத்தில் பாடுவது மட்டுமில்லாமல் பெயரையும் அழுத்தந்திருத்தமாக மூன்று முறை சொல்வார்!

    ஸ்ரீவித்யா விக்கித்து நிற்கிறார். தன்னைவிட இளையவரான கமல்ஹாசன் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் கூட அதுவரை அவருக்கு வந்ததில்லை.

    காதலிப்பதாக இவ்வளவு நேரம் பாடியது, இசை மூலமாக சொன்னது தன்னைத்தான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    இப்போது கமல்ஹாசன் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார் (மஹதி). "அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்..."

    இந்த வரிகளைப் பாடும்போது முடிவில் சரசரமாக வாசிக்கப்படும் வயலின்களில் அதிகமாகிக் கொண்டே போகும், ஒரு பரபரப்பு தொனிப்பதை உணரலாம்.

    இந்தப் பாடலில் நான்கு சுரங்களுக்கு ஏற்றபடி முதல் நான்கு வரிகளில் நான்கு எழுத்து சொற்கள் ' அதிசய, ஆனந்த, அழகிய, அபூர்வ" என்றும்,

    'இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்' என்ற வரியில் 72 ராகங்களில் அவள் பெயரும் ஒரு பாகம் என்பதையும்,

    இணையில்லாமல் இருக்கும் நாயகிக்கு ஏற்றவாறு 'சக்கரவாகம்' என்ற சொல்லாடல் பயன்படுத்தியிருப்பதுவும் (சக்கரவாகம் பறவை இணை இழந்தால் சோகமாக பாடும்) என்று கவிதையில் சிலம்பம் ஆடியிருப்பார், கவியரசர் கண்ணதாசன்.

    பாடலுக்கு சாஸ்திரிய சங்கீதமாக மட்டுமே மஹதியிலும், பைரவியிலும் அமைத்து, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களை பாடவைத்ததில், கேட்கிற, நாம் மெய்மறக்கிறோம்!

    பெண்களுக்குத் தெரியும் பார்ட்டி சேரிஸ் என்று ஒரு டிசைன் புடவை, புடவையின் துவக்கத்தில் ஒரு டிசைன், நடுவில் வேறு டிசைன், மீண்டும் முதலில் வந்த டிசைன் கலந்து முந்தாணை முடியும். அதுபோன்ற ஒரு டிசைன் பாடல் தான் இது! என்று சொன்னால் மிகையில்லை. 50 வருடங்களாக கோலோச்சி கொண்டிருக்கும் பாடல் இது!!!

    கே.பாலசந்தரின் திரைப்படம் இயக்கும் திறன் எல்லோருக்கும் தெரிந்தது தானே? இப்படி சவாலாக திருப்பங்கள் அமைந்த தினால் தான் இந்தப் பாட்டில் இருவேறு ராகங்கள் எம்.எஸ்.வி. இசையமைத்தாரா என்றால்... அதுதானில்லை, இருவேறு ராகங்கள் மட்டுமல்ல. இருவேறு எதிரான இசை வகைகளையும் உள்ளடக்கியப் பாடல்களையும் நிறைய தந்திருக்கிறார்!!

    "பதிபக்தி" என்று ஒரு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, நடித்தது. அதில் ஒரு பாடல் காட்சியில் நாட்டியக் கலைஞராக ஜே.பி.சந்திரபாபு, தனது குழுவினரோடு "ராக் ராக் ராக்" என்று ராக் அண்ட் ரோல் பாணி நடனத்தை ஆடுவார். அதற்கு போட்டியாக இரு பெண்கள் பரத நாட்டியம் ஆடுவார்கள். இந்த பாடலை மேற்கத்திய இசையிலும் 'அடாணா' ராகத்தில் கர்நாடக இசையிலும் ஜமாய்த்திருப்பார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும்.

    ஒரே பாடலில் இரு வகை இசை வந்தால் அதை இணைவு இசை என்பார்கள். 1958 லேயே இந்த உத்தியை மெல்லிசை மன்னர்கள் கையாண்டது புதுமை!!

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com

    • ஒப்பிட்டுப் பார்த்து வாழத்தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.
    • வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்

    ஒப்பீடு செய்வதால் உன்னதம் காணமுடியாது என்பதை நம்பும் இனிய வாசகர்களே! வணக்கம்.!.

    நம் எல்லாருக்கும் வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையை வாழ்வது என்பது பள்ளிக்கூடப் பாடங்களில் பரீட்சை எழுதுவதுபோலப் பல நேரங்களில் கடினமானதாகத்தான் இருக்கிறது.

    வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தேர்வு என்றால், அது ஒரே மாதிரியான தேர்வு அல்ல!; வழங்கப்பட்டிருக்கிற கேள்வித்தாளும் ஒரே மாதிரி கேள்வித்தாள் கிடையாது!; ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

    எனவே நமக்கான தேர்வை நாம் மட்டுமே எழுதியாக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதவோ, அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ முடியவே முடியாத வினோதமானது நமது வாழ்க்கை.

    அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொள்கிறார்கள்!. நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட்டுப் போவோமே!. அவரைப் போல வாழ்!;

    இவரைப் போல வாழ்! என்று சிலரை முன்மாதிரிகளாகவோ, எடுத்துக் காட்டுகளாகவோ வைத்துக் கொள்ளலாமேயொழிய, அவரோடு நாம்!, இவரோடு நாம்! என்று ஒப்பிட்டுப் பார்த்து வாழத் தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.

    ஒப்பீடு செய்வதன்மூலம் சிறந்தவற்றைக் கண்டறிய முடியும்! என்று சிலர் கூறலாம். ஆனால் எந்த வகையிலும் சமமாகவோ பொருத்தமாகவோ இல்லாதவரோடு ஒப்பீடுகள் நிகழ்த்தி நிகழ்த்தியே உருப்படாமல் போன கதைதான் இங்கு அதிகம்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒப்பிடும் குணத்தை அவனது குழந்தைப் பருவத்திலேயே, பெற்றோர்கள் உசுப்பிவிட்டு விடுகிறார்கள்." அண்ணனைப் பார்! தம்பியைப் பார்! அக்காவைப் பார்! தங்கையைப் பார்!" என்று உடன்பிறந்தோரில் தொடங்கி, அண்டை வீடு, அயல் வீடு, உடன் படிப்போர், ஊடகங்களில் வரும் சாதனைகள் புரிவோர் … என எந்த அளவீடுகளும் இல்லாமல் எல்லாருடனும் ஒப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

    உயரமாக,குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, வெள்ளையாக, கறுப்பாக, முடி அடர்த்தியாக, நீளமாக, என உருவத்தில் தொடங்கி, உண்ணுகிற உணவு, படிக்கிற படிப்பு, எடுக்கிற மதிப்பெண், விளையாடுகிற விளையாட்டு, சாதிக்கிற சாதனைகள் வரை எல்லாவற்றிலும் ஒப்பீடுகள்.

    ஒப்பீடுகள் பெரும்பாலும் திட்டல்களில் தொடங்கி, 'நீ எங்கே உருப்படப் போறே!' என்று சாபங்களிலேயே நிறைவு செய்வார்கள்!. குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமிருந்து பற்றிக்கொள்ளும் ஒப்பிடும் குணம் கடைசிவரை மாற மறுக்கிறது.

    பெரும்பாலும் நமது ஒப்பிடும் குணம் நம்மில் இருந்தே தொடங்குகிறது; அடுத்தவர்கள் நம்மைவிட எவ்வளவு தூரம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்? என்று சிந்திக்கத் தொடங்கும் அடிப்படையிலேயே ஒருவிதப் பொறாமைகுணம் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விடுகிறது.

    பொறாமை எனும் தீக்குணம் நம்மிடம் வந்துவிட்டால், வஞ்சனை, கோபம், சூழ்ச்சி,பொய், களவு என அத்தனை பேய்க்குணங்களும் மனித மனத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிடுகின்றன.

    அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுநோக்கிப் பார்ப்பதன்மூலம், 'அவரைப்போல நாமும் உழைக்க வேண்டும்!, அவரைப்போலப் படித்து முன்னேற வேண்டும்!, அவரைப்போல நல்ல வேலையில் அமர வேண்டும்!,

    அவரைப்போல செல்வந்தர் ஆகவேண்டும், அவரைப்போல நல்ல மனிதராக வலம் வர வேண்டும்!,அவரைப்போலச் சாதனைகள் புரிய வேண்டும்!' என நமக்கு நாமே ஊக்கம் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சிலர் கருதலாம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஒப்பீடுகள் நேர்முறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கி விடுகின்றன.

    ஒப்பிட்டுப் பார்ப்பதில் அடிப்படையில் தவறு இல்லை; ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதே ஒருவகை எதிர்மறைகுணம் நமக்குள் வந்து அமர்ந்து கொள்வதால், எதிர்மறைச் சிந்தனையோடு, அடுத்தவர்களைப் பற்றிய தவறான கணிப்புகளையும் நாக்கூசாமல் பேசவும், விரல்கூசாமல் எழுதவும் தொடங்கி விடுகிறோம். இதுவே நம்மைத் தீயவர்களாக மாற்றி விடுகிறது.

    ஜப்பானிய சாமுராய் வீரர்கள் பெரும்பலம் பொருந்திய மகா வீரர்கள். நாட்டிற்காக உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுபவர்கள். அப்படிப்பட்ட சாமுராய் வீரர்களில் ஒருவன், அந்த ஊரில் இருந்த புகழ்மிக்க ஜென் மத குருவைக் காணச் சென்றிருந்தான். அதிகாலை நேரத்திலேயே மடத்திற்குச் சென்றுவிட்டான்.

    குரு ஆசுவாசமாக எழுந்து காலைப் பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை வரிசைக் கிரமமாகச் செய்துவிட்டு சாமுராய் வீரனை மெல்லிய புன்னகையோடு வரவேற்று வந்த காரியத்தை வினவினார்.

    கொஞ்சம் படபடப்போடு காணப்பட்ட வீரன் பேசத் தொடங்கினான், " குருவே நான் ஒரு சாமுராய் வீரன். நீங்கள் எப்படி இங்கிருந்துகொண்டு ஆன்மீக அடிப்படையில் நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபடுகிறீர்களோ, அதைப்போல நான் போர்முனையில் இருந்து கொண்டு நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபட்டு வருகிறேன்!.

    நாலைந்துமுறை சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன். கோழைகளாய் இருந்து சாவைச் சந்திக்க இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை எனது வாள்முனையில் காப்பாற்றி இருக்கிறேன்."

    சாமுராய் வீரன் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறான்? என்ன கூற வருகிறான்? என்பதை முன்கூட்டியே ஊகித்தறியும் அவசரமில்லாமல் ஜென் குரு அமைதியான புன்னகையோடு செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

    சாமுராய் மேலும் தொடர்ந்தான்." இவற்றை யெல்லாம் நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், அடிப்படையில் நீங்களும் நானும் ஒரே நோக்கத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! என்பதை விளங்க வைப்பதற்குத்தான். நாடும் மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதே நம் இருவரின் நோக்கமாகவும் இருக்கிறது!"

    "இதில் இங்கு நான் வந்ததற்கான காரணம் என்ன வென்றால், என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற அடிப்படையான ஒரு வினாவை உங்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான். "

    "துறவியாகிய நீங்களும் போர்வீரனாகிய நானும் ஒரே நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்றாலும், நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுகிறீர்கள், எந்த வேலையும் செய்யாமல் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்தே அனுபவிக்கிறீர்கள்;

    காலத்தைக் கழிக்கிறீர்கள், காலைமுதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து உங்களுக்கு வணக்கம் சொல்கிறார்கள்; உங்களிடம் கடவுளைப்போல ஆலோசனை கேட்டுப் போகிறார்கள்;

    நீங்களும் எந்த சிரமமும்படாமல் சிரித்த முகத்தோடு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறீர்கள்!. நானோ அன்றாடம் வேகாத வெயிலில் போர்ப் பயிற்சியிலும், போர்முனைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!. இது எந்த வகையில் நியாயம்?" என்று கேட்டான் சாமுராய்.

    "இப்போது என்னைச் சந்தித்து ஆலோசனையும் ஆசீர்வாதங்களும் பெறுவதற்காக நிறைய அன்பர்கள் வந்து மடத்தில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வந்து உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்;

    மாலைவரை காத்திரு!" என்று கூறிவிட்டு ஜென்குரு அன்பர்களைக் காணச் சென்றுவிட்டார். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புன்னகை மாறாத முகத்தோடு ஆசி வழங்கினார் துறவி.

    மாலைநேரம் கடந்து இருட்டத் தொடங்கிவிட்டது. துறவியைக் காணவந்திருந்த அனைவரும் சென்று விட்டனர். இப்போது துறவி, சாமுராயை உள்ளே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அமைதியான இருள்; வானத்தில் நிலவு வந்து தன் வெளிச்சக் கிரணங்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

    துறவி பேசினார்," வீரனே வா!. இந்த வானத்தை பார்! மெல்லிய வெளிச்சத்தை பூமி முழுவதும் பரப்புவதற்காக அமைதியாக வந்துகொண்டிருக்கும் நிலவைப் பார். இனி விடியும் வரை வானத்திலும் பூமியிலும் இந்த நிலவின் ஆட்சிதான். நாளை விடிந்தவுடன் சூரியன் வந்து விடும்;

    அதன் ஒளியாட்சி தொடங்கிவிடும். பகலின் சூரிய ஒளியில் இப்போது மங்கலாகத் தெரிபவை எல்லாம் துல்லியமாகக் காட்சியளிக்கும். மலை, அருவி, கடல், வயல் என அனைத்தும் இரவின் நிலவொளியில் தெரிந்ததைவிடப் பன்மடங்குத் தெளிவாகச் சூரிய ஒளியில் தெரியும்."

    `நாம் இப்போதைய இரவிலும் நிலவைப் பயன்கொள்கிறோம்; நாளைய பகலில் சூரியனையும் பயன்கொள்கிறோம். என்னுடைய பயன் குறைவு என்று நிலவோ என்னுடைய பயன் கூடுதல் என்று சூரியனோ எந்த நேரத்திலும் குறைப்பட்டுக் கொண்டதாகவோ, மார்தட்டிக் கொண்டதாகவோ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் அவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை!" என்றார் துறவி.

    படைப்புகள் அனைத்தும் அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வியல் குறிக்கோள்களோடு வாழத் தொடங்கினாலே போதும். அவற்றின் பிறவிப்பயன் அடுத்தவர்க்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டையோ, வாங்கியிருக்கும் பொருள்களையோ, வாழுகின்ற வசதியான வாழ்க்கையையோ நம்முடையவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் தேவையற்ற பொருள் விரயத்தையும் அதனால் பெரும்பான்மை நேர விரயத்தையும் நாம் சந்திக்க நேரிடும்.

    பொறாமையில் பொசுங்கிடும் மனம் என்றுமே வளமாகச் சிந்திக்கும் திராணியற்றுப் போய்விடும். முடிவற்ற மகிழ்ச்சியின்மையைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நம்மை அடுத்தவரோடு ஒப்பிடத்தொடங்கி விட்டால், நமக்கு நாமே பின்னோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.

    வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கு நமக்கு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கிறது. ஓடுகிற குதிரையின் பார்வை முன்னோக்கியதாக இல்லாமல் பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டே ஓடுவதாக இருந்தால், அக்குதிரை நிச்சயம் ஊர்போய்ச் சேராது. அதுபோன்றதுதான் நமது வாழ்வியல் இலக்குநோக்கிய பயணங்களும்; பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டு ஓடாமல் தேங்கிவிடுவதுதான் ஒப்பிடுகிற வாழ்க்கை.

    அவர் வாழ்க்கையின் வடிவம் அப்படி; நம் வாழ்க்கையின் வடிவம் இப்படி என்று நமதைப் பற்றிய எண்ணங்களோடு வாழ்க்கையில் பயணப்பட்டால் நமக்குள் தாழ்வுமனப்பான்மை ஏற்படாது.

    தம்மைப் பற்றிய கழிவிரக்கம்!, அடுத்தவர் பற்றிய உயர்வு நவிற்சி! இவை இரண்டையும் கை விட்டாலே போதும்; எல்லா ஒப்பீடுகளும் தூள் தூளாகிப் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கணியன் பூங்குன்றன் சொன்னான்,' மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

    பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமை வரும்!; நமக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லையே என மகிழ்ச்சி வரும். இந்த இரண்டு உணர்ச்சிகளில் பொறாமையைப் போட்டியாக மாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், போதுமென்கிற மகிழ்ச்சியை மூலதனமாக்கி வெற்றி காணாலாம்.

    அவரவர் பாதையில் அவரவர் பயணம் என்கிறபோது, இதில் போட்டி எதற்கு? பொறாமை எதற்கு?

    வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்!

    போட்டிகள், ஒப்பீடுகள் விளையாட்டில் இருக்கலாம்!

    வாழ்க்கையில் எதற்கு?

    தொடர்புக்கு 943190098

    • வைராக்கியம் என்றால் என்ன?
    • ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், வைராக்கியம் என்றால் என்ன? நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது என்று பார்த்தோம். நம்முடைய வேதாந்தம் சொல்வது என்னவென்றால் "கோப வைராக்கியா, துக்க வைராக்கியா, சிந்தனை வைராக்கியா, ஞான வைராக்கியா" என்கிறது.

    கோப வைராக்கியம்: என்பது நாம் ஒருவர் மீது கோபம் வந்து விட்டால், வாக்கு வாதத்தில் இனி என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்கிறோம்.

    ஆனால் அந்த உணர்ச்சி நிலையில் இருந்து நாம் உணர்வு நிலைக்கு திரும்பியவுடன் அந்த வைராக்கியம் நம்மை விட்டு விலகுகிறது, ஆனால் வார்த்தைகள் மட்டும் விலகுவது இல்லை. எனவே கோப வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    துக்க வைராக்கியம்: என்பது நம் வாழ்வில் ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டால் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. இனி நான் எப்படி வாழ்வேன் என்று புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறோம்.

    உதாரணத்திற்கு நமக்கு நெருங்கிய உறவுகள் யாராவது மரணம் அடைந்து விட்டால், நம் வாழ்வே பறிபோனது போல் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு சில நாட்கள் செல்ல செல்ல, நாம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறோம். அன்று ஏற்பட்ட துக்கம் இன்று எங்கே போனது என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

    வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்தை ஏற்று கொள்ளும் நாம் துன்பத்தை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்? எனவே துக்க வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

    சிந்தனை வைராக்கியம்: என்பது மனம் பற்றியது. மனம் அமைதி நிலையில் இருக்கும் போது சில முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு இந்த புத்தாண்டில் இருந்து நான் இந்த இந்த விஷயங்களில் சில விதிமுறைகளை கடைபிடிப்பேன். சில பழக்கங்களை விட்டு விடுவேன் என்று சபதம் எடுக்கிறோம்.

    ஆனால் அந்த வைராக்கியம் நிறைய மனிதர்களுக்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. வாழ்க்கை சக்கரத்தில், சுழற்சியில் மாட்டி கொண்டு, துன்பம் வரும் போது, மனம் துவண்டு விடும்போது நம் சபதம் எல்லாம் மறைந்து விடுகிறது.

    எனவே சிந்தனையில் தெளிவு வேண்டும். இல்லை என்றால் சிந்தனை வைராக்கியத்தில் வெற்றி பெற முடியாது. மனம் எப்போதும் அமைதி நிலையில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

    ஞான வைராக்கியம்: என்பது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் என்ன துன்பங்கள் வந்தாலும் தான் எடுத்த கொள்கையில் மாறாது இருக்க வேண்டும். முதலில் சொன்னது எல்லாம் உடல், மற்றும் மனம் சார்ந்து வருவது ஆகும். ஆனால் ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

    ஆத்மா என்பது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. மற்றது அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடியது. எனவே வாழும் காலத்திலேயே பிறவி பயனை அடைவதற்கு உடல், மனம், உயிர், குணம், ஆத்மா சார்ந்து, இயற்கையோடு சேர்ந்து கொண்டு வாழ்ந்தால், ஞான வைராக்கியம் கிடைக்கும்.

    வாழ்வில் எது நடந்தாலும் மனதை சமநிலையில் வைத்து பழகி கொள்ள வேண்டும். அதனால், புலன்கள் நம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நாம் ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க வேண்டும்.

    விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்தால் உலகம் அைமதியாகும். ஏனெனில் விஞ்ஞானம் என்பது விண்பற்றிய அறிவியல். மெய் ஞானம் என்பது இறைவன் மற்றும் நம்மை பற்றிய அறிவாகும். இதை உணராமல் இருப்பதால் தான் கர்ம வினை பதிவுகளில் சிக்கி, நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம்.

    ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அது என்னவென்றால், விஞ்ஞானம் என்றால் ஆராய்சி என்று பொருள். எனவே விஞ்ஞானத்திற்கு, ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு பொருள் தேவை.

    பொருள் என்கின்ற ஒன்று இருந்தால் தான் விஞ்ஞானத்தால் ஆராய்ச்சியை தொடரமுடியும். பொருள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாது. விஞ்ஞானத்தின் ஆரம்பம் ஆனது பொருளில் தொடங்கி அதன் முடிவு இருளில் முடியும். இருள் என்பது இறைவன். அந்த இடத்திலே ஒன்றும் இல்லை.

    அதனை தான் மகான்கள் பாழ், இருள், சூனியம், ஆதி, சுத்தவெளி, கடவுள், இறைவன், என்று நாம் சொல்கிறோம்.

    ஆனால் மெய்ஞானம் என்பது, விஞ்ஞானம் எதில் முடிந்ததோ (இருள்) அதில் தான் தொடங்கும். இருளில் தொடங்கும் மெய்ஞானம் நமக்கு உள்ளே முடியும். முடிவு என்பது நானாக இருக்கும் போது,அண்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் இந்த பிண்டத்தில் உள்ளது என்கின்ற உண்மை விளங்கும். இது தான் ஞான வைராக்கிய நிலையாகும்.

    இந்த நிலை வந்து விட்டால் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மூச்சின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மனம் அமைதி நிலை பெறும்.

    இந்த நிலையில், நம் மனதிலே உதிக்கின்ற எண்ணங்களின் வெளிப்பாடு, சொல்லாக மாறி, நல்ல செயலிலே முடியும். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமது மனம் ஆனது விரிந்த நிலையில், நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையில் தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.

    மனம் விரியும் போது, நமது எண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத எண்ணங்களாக மலர்கிறது. இது கர்ம வினை பதிவுகளில் இருந்து, நம்மை விடுவித்து கொள்ளும் வழியாகும்.

    குறுகும் மனம் ஆசை, துன்பத்தை தரக்கூடிய எண்ணங்களாக மலரும் போது, நமக்கும் பிறருக்கும், தீமையை உருவாக்குகிறது. இதனால் நமக்கு தீமை தரக்கூடிய பதிவுகள் சேருகிறது.

    எனவே எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் இறைவன் என்றால் அது முடியும் இடம் நம்முடைய மனம் ஆகும். அசையாமல் இருந்தால் சிவம். அது அசைந்தால் மனம். எனவே ஞான வைராக்கியத்திலே நமக்குள்ளாக அடிக்கடி நான் சிவமா? அல்லது மனமா என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அக ஆராய்ச்சி என்கிறோம்.

    உதாரணத்திற்கு நாம் உடலை அசைத்து நடந்து செல்லும் போது, நம்மோடு எந்த அசைவும் இல்லாமல், நமக்குள்ளாக ஒன்று வந்து கொண்டு இருக்கிறதே அது யார்? எனக்கு தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று சொல்கிறோமே, அது உடலுக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா?

    எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்கி–றோமே எனக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா? -இப்படி என்றாவது நாம், நம் சுகத்தை நோக்கி ஆராய்ச்சி செய்து இருக்கிறோமா?

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேலே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், எந்த வித தொடர்பும் இல்லாமல், எந்த கர்ம வினை பதிவுகளோடும் தொடர்பு இல்லாமல், எந்த பொருள் மற்றும் உறவுகளோடு பற்றும் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறதே அது யார்?

    இதை அடிக்கடி நாம் நமக்குள்ளாக கேள்வியாக எழுப்பும் போது, அதுவே சர்வ வல்லமை பொருந்திய ஆத்மா என்பது தெரிய வரும்.

    ஒரு கட்டத்தில் இந்த ஞான வைராக்கியம் மலரும் போது, இந்த உடல், மனம், உயிர், பொருள் அல்ல நான், ஏகமாக எங்கும் உள்ள இறைவனின் சொரூபமான ஆத்மாமே நான் என்பது விளங்கும். அப்படி தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களை தான் 'ஆத்மஸ்வருபி' என்று அழைக்கிறோம்.

    அந்த நிலையில், நாம் காணும் காட்சிகள், பொருட்கள், நபர்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்களாகவே தெரியும். இதை தான் 'சர்வம் பிரம்ம மயம்' என்று கூறுகிறோம்.

    அப்படி ஞான வைராக்கியத்திலே எல்லாம் இறை காட்சிகளாக தெரிந்தால், நம்மோடு தினமும் நம்முைடய குடும்பத்திலே உறவாடி கொண்டு இருக்கின்ற உறவுகளான கணவர், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் இவர்கள் எல்லாம் யார்? அனைவரும் இறைவனின் பிம்பங்களே!

    இந்த நிலை வந்து விட்டால் நமக்குள்ளே எந்த பகையும், வெறுப்பும் வராது. குடும்பத்திலே சச்சரவுகள் எதுவும் வராது. இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைதி என்பது தனி மனிதரில் ஆரம்பித்து, குடும்ப அமைதியாக மாறி, அது சுற்றத்தை மாற்றி, சுற்றம் ஆனது ஊரையே மாற்றி, ஊர் ஆனது உலகத்தை மாற்றி உலகம் முழுவதும் அமைதியை கொடுக்கும் வல்லமை படைத்தது தான் இந்த ஞான வைராக்கியம்.

    இதை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். தொடக்கம் என்னில் இருந்து என்றால், நான் எப்பேற்பட்டவன், எனக்குள் உள்ள பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமக்குள் உள்ள தெய்வீகத்தை முறையாக வெளிபடுத்த வேண்டும். அப்படி செய்தால் நான் வாழும் காலத்திலேயே ஞானம் அடைந்தவராக மாறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

    இறைவன் நம்மை பல பிறவிகள் கடக்க வைத்து, இறுதி பிறவியான மனிதனாக ஒரு தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கி, அதனோடு நமக்கான கர்மாவையும் கொடுத்து இருக்கிறார் என்றால், நாம் எவ்வளவு புண்ணி யம் செய்தவர்கள்.

    எனவே நான் ஏன் பிறந்தேனோ என்று சலிப்பு அடையாமல், இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கை முழுமையடையும். அந்த முழுமை பேறு பற்றி ஆராய்ச்சி தொடரும்.

    மனவளக்கலை பேராசிரியர்கள்

    கி. சௌமித்ரன்,

    பொன்னி சௌமித்ரன்

    போன்: 9444234348

    • நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்.
    • வேட்பாளர்களின் கருத்துகளை தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு.

    உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் மதன் லாகூர், ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் சமீபத்தில் ஒரு அழைப்பு விடுத்தனர். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டின் பிரச்சினைகள் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இத்தகைய விவாதங்கள் எப்போதும் நடந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர்கள் பல்வேறு நேருக்கு நேர் விவாதங்களில் கலந்து கொள்வார்கள்.

    நாட்டின் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய வேட்பாளர்களின் கருத்துகளை வாக்காளர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்ள இது ஒரு அருமையான ஏற்பாடு. விவாதங்களின் சிறப்பு மற்றும் வேட்பாளர்களின் அணுகுமுறைத் தெளிவு ஆகியவற்றை வைத்து வாக்காளர்கள் முடிவுக்கு வருவார்கள்.

    சில நேரங்களில் நாடு முழுமைக்குமான ஒரே ஒரு பிரச்சினை குறித்த விவாதமும் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. "கிரேட் டிபேட்" என்று இன்றும் அழைக்கப்படும் விவாதம் கூட்டாட்சித் தத்துவத்தின் ஆதரவாளர்கள் மற்றும் எதிரானவர்கள் சார்பாக நடந்தது.

    அதன் பின்னர் தான் குடிமக்களின் உரிமைகள் குறித்த ஷரத்து அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்றது. கூட்டாட்சித் தத்துவம் வலிமை பெற்றது.

    அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. எனவே டிபேட்டுகள் களை கட்டத் துவங்கி விடும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்றைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆகிய இருவருக்கும் இடையிலான விவாதம் 2020-ல் நடந்தது.

    முன்னதாக "எப்போது வேண்டுமானாலும்- எங்கு வேண்டுமானாலும்- எந்த நேரம் வேண்டுமானாலும்" விவாதத்திற்கு தயார் என்று மார்தட்டினார் டிரம்ப். ஆனால் பல டிபேட்களுக்கு அவர் டிமிக்கி கொடுத்தார். இறுதியாக பைடன் விவாதம் வாக்காளர்கள் மனங்களைக் கவர்ந்தது.

    ஜனாதிபதி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்ச்சி 1960 முதல் நடைபெற்று வருகிறது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களால் அவை நடத்தப்பட்டன. ஆனால் 1987-க்குப் பிறகு டிவிக்கள் இத்தகைய விவாதம் நடத்த அனுமதி இல்லை.

    ஜனாதிபதி வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு இன்று சிபிடி என்று அழைக்கப்படும் தனியான அரசு அமைப்பு அமெரிக்காவில் உள்ளது. டிபேட் மற்றும் அவற்றின் விதிமுறைகளை அது வகுக்கிறது. உதவி ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதங்களும் நடப்பது உண்டு.

    வாட்டர் கேட் ஊழல் காரணமாக நிக்சன் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஜெரால்ட் போர்ட் எதிரணி வேட்பாளரான கார்ட்டரை விவாதத்திற்கு அழைத்தார். அந்த டிபேட்டில் போர்ட் ஜொலிக்கவில்லை. பரபரப்பாக இருந்த அந்த விவாதத்தை நான் அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாகக் கண்டேன்.

    நேருக்கு நேர் லைவ் விவாதங்களில் உடல் மொழி மிகவும் முக்கியம். அடிக்கடி வாட்சைப் பார்த்தார் என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் அமெரிக்காவில் உண்டு.

    விவாதத்திற்குப் பயிற்சி கொடுப்பதற்காகவே நிபுணர்கள் இருக்கிறார்கள். வேட்பாளர்களின் அங்க அசைவுகள் மற்றும் பார்வை மூலம் நம்பகத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. நடுவர் உண்டு. எதிர்த்தரப்பு வைக்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வேட்பாளர் எப்படி பதில் சொல்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.

    லைவ் டிபேட்டுகளுக்குப் பின் அவை பற்றிய விமர்சனங்கள் டிவிக்களில் எழுப்பப்படும். மதிப்பெண்கள் போடப்பட்டு வெற்றி-தோல்வி அலசப்படும். எனவே உலகெங்கிலும் இது பேசுபொருள்.

    ஆனால் அமெரிக்கக் கான்செப்ட் இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அங்கு இரண்டு கட்சி முறை. அதிபர் தேர்தல் என்பதால் நேரடி விவாதம் சாத்தியப்படுகிறது.

    மேலும் ஆங்கிலம் என்கிற ஒற்றை மொழி. இங்கு இந்தி பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகிறது. என்றாலும் பல்வேறு பழமையான மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

    இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக யாரும் கிடையாது. நாம் எம்.பி.க்களைத் தேர்ந்தெடுக்கிறோம். எனவே மோடி- ராகுல் நேரடி நேருக்கு நேர் சாத்தியமில்லை.

    ஆனால் தலைவர்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கிற "லீடர்ஸ் டிபேட்" சாத்தியம். நியூசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய விவாதம் நடக்கிறது.

    நேருக்கு நேர் விவாதத்தின் மூலமாக நாட்டின் பொதுப் பிரச்சினை பற்றிய தலைவர்களின் கருத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு எடுக்க அது உதவி செய்யும்.

    தலைவர்களும் கொள்கை மற்றும் செயல்திட்டத்தைப் பற்றி மட்டும் பேசுவார்கள். வெறுப்புப் பேச்சு, மதம் மற்றும் ஜாதி ரீதியிலான பிளவுக்கு இடம் கிடைக்காது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.

    இந்தியத் தேர்தல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆரம்பத்தில் தலைவர்கள் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

    தேர்தல் பரப்புரைகளின் போது பிரதமர் மோடி இந்து, முஸ்லீம் என்று பேசினார். வெறுப்புப் பேச்சு என்று கண்டனங்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் சென்றன. ஆனால் இப்போது அவரே தான் அப்படிப் பேசவில்லை என்று கூறுகிறார்.

    இறுதியில் யார் எண்ண பேசினார்கள் என்று வாக்காளர்களுக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. எனவே தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி மாதிரியான அமைப்புகள் நேருக்கு நேர் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    ஆனால் உச்சகட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகம் முன்பெல்லாம் கட்சி பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் பொது மேடை அமைத்து தந்து வந்தது தூர்தர்ஷன். அவற்றில் பெரிய தலைவர்கள் பேசி வந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ரேடியோவில் அண்ணா, கலைஞர் பேசியதைக் கேட்ட நினைவு இருக்கிறது.

    மொத்தத்தில் பொது மேடைகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் பெரும்பாலும் செய்தித் தொடர்பாளர்கள் தான் கலந்து கொள்கிறார்கள்.

    பொது மேடைகளுக்குப் பதிலாக டிவிக்களில் தினமும் இரவு விவாத அரங்கம் நடத்தப்படுகிறது. அன்றாடப் பிரச்சினைகள் குறித்த கருத்துகள் அலசப்படுகின்றன.

    அவற்றில் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் மூத்த பத்திரிகையாளர்களும் தங்கள் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

    தலைவர்கள் கலந்து கொள்ளும் நேரடி விவாதம் அல்ல. என்றாலும் சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் டி.வி. விவாத மேடைகளில் தலைவர்களும் தோன்றுகிறார்கள்.

    இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சில தலைவர்கள் விவாதப் பேச்சில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் வேறு சிலருக்கு செயல் திறன் மட்டுமே!

    எடுத்துக்காட்டாக 2009 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் என்று பரவலாக வர்ணிக்கப்பட்ட அத்வானியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் சரிப்பட்டிருக்குமா?

    தலைவர்கள் அனைவருக்கும் "கம்யூனிகேஷன் ஸ்கில்" ஒரே மாதிரி இருக்க வழியில்லை. செய்தித் தொடர்பாளர்கள் தான் அந்தப் பணி செய்கிறார்கள். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே முன்னாள் செய்தி தொடர்பாளர் தான். அப் பணியை அவர் நேர்த்தியாகக் கையாண்ட விதமே அவருக்கு மோடியின் குட் புக்சில் இடம் பெற்றுத் தந்தது.

    பொது விவாதத்தின் தேவை பற்றி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளும் மூத்த பத்திரிகையாளரும் பின்வருமாறு விளக்கி உள்ளார்கள்.

    1. நடப்பு தேர்தலில் வெறும் குற்றச்சாட்டுகளும், பரஸ்பர சவால்களும் மட்டுமே மலிந்துள்ளன.

    2. மக்களுக்குப் பயன் தரக்கூடிய பொருள் பொதிந்த தீர்வுகள் முன் வைக்கப்படவே இல்லை.

    3. ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா மற்றும் அதை அடுத்து அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் பொது விவாதத்தில் கலந்து கொள்வது இந்திய ஜனநாயகத்தை முதிர்ச்சி அடையச் செய்யும் .

    4. எனவே பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    ராகுல்காந்தி தரப்பில் உடனடிச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. இணங்கவில்லை. ராகுல் காந்தி வெறும் எம்பி என்றும் அதே நேரத்தில் மோடி பிரதமர் என்றும் அது கூறி விட்டது. இருவருக்கும் ஒரே அரசியல் அந்தஸ்து இல்லை என்றும் மறுத்து விட்டது.

    ஆனால் தேசிய அரசியல் பற்றிய பரப்புரைகளின்போது ராகுல்காந்தியை மட்டுமே "இளவரசர்" என்று மையப்படுத்தினார் பிரதமர். தனக்கு ராகுல் சரியான களப் போட்டியாளர் இல்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதாவது களத்தை "மோடி vs ராகுல்" என்று கட்டமைத்தது அவர் தான்.

    தராசு காலகட்டத்தில் மக்கள் மேடை என்ற பதாகையின் கீழ் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களை வைத்து இத்தகைய "நேருக்கு நேர்" நிகழ்ச்சிகளை துவக்கத்தில் நடத்தினோம். ஆனால் நாளாவட்டத்தில் வேட்பாளர்கள் தயக்கம் காட்டினார்கள். எனவே அது கை விடப்பட்டது. மறைந்த எம்.எஸ்.உதயமூர்த்தி இது போன்ற விவாதங்களை நடத்தியதாக ஒரு நினைவு.

    தலைவர்கள் நேரடி விவாதங்களுக்குச் சம்மதித்தால் நமது மக்களாட்சி மேலும் கூர்மைப்படும்.

    ×