என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மரக்கன்று"
- வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
- பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.
இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புவி வெப்பத்தை குறைக்க மரம் நடுவது அவசியம்.
- தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா இருவார விழாவின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை வகித்து பேசும்போது, பொதுமக்களிடையே தூய்மை உறுதிமொழி ஏற்றல், திடக்கழிவு மேலாண்மை, இயற்கை முறையில் உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், நீர் மேலாண்மை,மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை குறைத்தல், நாப்கின்கள் பயன்ப டுத்துதல், கழிப்பறைகளின் பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. என்றார்.
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றினை நட்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசும்போது, தூய்மை பாரதம் இயக்கம் மூலம் நகரம் தூய்மையடைகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதனால் எதிர்காலத்தில் நாம் பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே மரங்களை நட்டு 33 சதவீத வனபரப்பை அதிகரித்து பூமியை குளிர்ச்சிபடுத்துவதால் மட்டுமே எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். ஒவ்வொருவரும் தன் கடமையாக கருதி மரக்கன்று நடுவதை இயக்கமாக கொண்டு செல்லவேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, அலுவலர்கள் சிற்றரசு, நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், செந்தில்குமார் மற்றும் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்கா, பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
- ஓவிய போட்டி நடந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஓவியப்போட்டி நடந்தது. அதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
- மரக்கன்று நடும் விழா நடந்தது.
- நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை அருகே உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் கல்லூரி மாணவிகளின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதற்கு ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை யங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியான் உறுப்பினர் சோபிதா முன்னிலை வகித்தனர். மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு வைத்து கிராம பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் பறை இசையுடன் அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை சுஜாதா, அனிதா செல்வராஜ், பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூரில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருக்கருகாவூர் யூனியன் வங்கி சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யூனியன் வங்கி திருச்சி மண்டல மேலாளர் லாவண்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சோழன் மழலையர் பள்ளி வளாகம், கிராம ஊராட்சி செயலக வளாகம் மற்றும் காவல் நிலைய வளாகம் உள்பட பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கருகாவூர் யூனியன் வங்கிகிளைமேலாளர் தீபக் சிங். உதவி மேலாளர் வெற்றிவேல், வங்கி ஊழியர் உமா, திருக்கருகாவூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் கருணானந்தம், சோழன் பள்ளி தாளாளர் சிவசண்முகம் மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள். வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
- கஜா புயலுக்கு பின் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
- சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மரங்கள், செடிகொடிகள் நிரைந்து காணப்பட்டது.
ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலுக்கு பின், முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை அடியோடு சாய்த்தன.
இதனை மீட்டெடுக்கும் வகையில், முத்துப்பேட்டை அடுத்த மேலத்தொண்டியக்காடு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 75 மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் மன்ற நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு லட்சம் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் வேம்பதேவன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனவதி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரயும் வரவேற்றார்.வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயந்தி, கிராம தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
- தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
காஞ்சிபுரம்:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா நடந்தது.
- தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டு அருகே புதிதாக 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.
இந்த விழாவில் தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஸ்நோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். திட்ட இயக்குநர் நாகராஜ், இணை மேலாளர் சுமித் தேவ்டா, சிறப்பு வட்டாட்சியர்கள் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகாரி களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் நவநீதன், வாணியங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
- பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சாம ந்தான் பேட்டை தனியார் பள்ளியில் வன மகோத்சவ விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக வனச்சரகர் க. ஆதிலிங்கம், கலந்து கொண்டு வனங்க ளின் அவசியம் குறித்து பேசினார்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நெகிழிப்பைகள் பயன்பா ட்டை குறைப்பது எப்படி என்று மாணவர்க ளுக்கு எடுத்துரை த்தார்.
ரமேஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முடிவில் பள்ளி வளாகத்தில் வன வார விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
- தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில், கோடங்கி பாளையம் ஊராட்சி மன்றம், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மகிழ்வனம் என்ற பூங்காவை அமைத்து சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சோமு என்கிற பாலசுப்ரமணியம், முன்னிலை வகித்தார்.
பொருளாளர் பூபதி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு இன்ஸ்பெரா நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், தாய்மண் அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் மகிழ்வன பூங்கா உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ராமகோவி ந்தன்காட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலா ளர் அணி கோவிந்தசாமி அனைவ ரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, தி.மு.க. கிளை செயலாளர் ராஜதுரை தி.மு.க. கொடியேற்றினார். இதில் அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், மாவட்ட செயலாளர் கவுதமன் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், புடவை, வேஷ்டிகள் வழங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்