search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Today National News"

    • பாஸ்போர்ட் விண்ணப்பதாரரை 30-45 வேலை நாட்களுக்குள் சென்றடையும்.
    • புதிய முன்பதிவு (Appointment) எதுவும் திட்டமிடப்பட முடியாது.

    புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நாடு முழுவதும் உள்ள மையங்களில் விண்ணப்பம் செய்ய பாஸ்போர்ட் சேவா போர்டல் பயன்படுத்தப்படுகிறது. முன்பதிவு (Appointment) செய்யப்பட்ட நாளில், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் மையங்களுக்குச் சென்று சரிபார்ப்புக்காக தங்கள் ஆவணங்களை வழங்க வேண்டும். இதைத்தொடர்ந்து, போலீஸ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

    பின்னர் விண்ணப்பதாரரின் முகவரிக்கு பாஸ்போர்ட் சென்றடைகிறது. விண்ணப்பதாரர்கள் வழக்கமான நடைமுறையைத் தேர்வு செய்யலாம். அதில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரரை 30-45 வேலை நாட்களுக்குள் சென்றடையும்.

    இந்த நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் போர்டல் பராமரிப்பு பணிக்காக அடுத்த ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இந்தக் காலக்கட்டத்தில் புதிய முன்பதிவு (Appointment) எதுவும் திட்டமிடப்பட முடியாது. மேலும் முன்பதிவு செய்யப்பட்டவை மாற்றியமைக்கப்படும். பாஸ்போர்ட் சேவா போர்டல் தொழில்நுட்ப பராமரிப்புக்காக இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை செயல்படாது. இது வழக்கமான நடைமுறை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவருடன் குற்றவாளியின் மனைவிக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    இதற்காக ஒரு பையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு பஸ்சில் விமான நிலையத்திற்கு சென்ற அவர், அந்த வாலிபர் வெளியே வரும்வரை காத்திருந்தார். கொலையானவர் விமான நிலையத்தில் ட்ரோலி ஆபரேட்டர் வேலை பார்த்து வந்தார். அவர் வேலை முடிந்து வெளியே வந்ததும் குற்றவாளி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.
    • சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பெண் மற்றும் அவரது பாட்டியை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு ரெயில்வே காவல்துறையைச் (GRP) சேர்ந்தவர்கள் பாட்டி மற்றும் அவரது பேரன் (15 வயது) ஆகியோரை திருட்டு வழக்கு குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த பெண்ணை தாக்கியவர்கள், பின்னர் அவரது பேரனை நோக்கி தாக்க திரும்பியதாக கூறப்படுகிறது.

    ''அப்பா எங்கே என்று போலீஸ் கேட்டது... எங்கே என்று தெரியவில்லை. போலீசார் என்னை டிராபிக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது என்னை அடித்தார்கள். அப்போது என் பாட்டியையும் அடித்தார்கள். என் அப்பா கூலித் தொழிலாளிதான்" என்று சிறுவன் கூறினான்.

    வீடியோவில், GRP போலீசார் அவரை பெல்ட்டால் அடிக்கும்போது அந்த அப்பெண் தரையில் கிடப்பதை காண முடிகிறது. சீருடை அணியாத மற்றொரு ஆண், அந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து, தலையை பக்கவாட்டில் ஆட்டுவதைக் காணலாம்.

    வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த வீடியோ குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று கட்னி எஸ்பி அபிஜீத் குமார் ரஞ்சன் தெரிவித்தார். மேலும், இது திருடப்பட்ட நகைகளை மீட்பது தொடர்பான பழைய சம்பவம் இது என தெரிவித்த போலீசார், வீடியோவில் காணப்படும் GRP ஆட்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, இந்த சம்பவம் மத்திய பிரதேசம் தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை குறித்து காட்டுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

    • தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது.
    • இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி ஆகும்.

    குஜராத்தில் மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதைக்கான (MAHSR) பாலம் கேடா மாவட்டத்தில் உள்ள வத்ராக் ஆற்றின் மீது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் "ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையங்களை இணைக்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக 280 மீட்டர் நீளமுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் தற்போது நிறைவடைந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளது.

    ரெயில்வே அமைச்சக திட்டத்தில் மொத்தம் 24 ஆற்றுப் பாலங்கள் உள்ளன. குஜராத்தில் 20 மற்றும் மகாராஷ்டிராவில் 4 உள்ளன. தற்போது குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் 10 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    "இந்நிலையில் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள வத்ராக் ஆற்றுப் பாலம் ஆனந்த் மற்றும் அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திற்கு இடையில் உள்ளது. இரண்டு நிலையங்களுக்கு இடையே முடிக்கப்பட்ட மற்றொரு ஆற்றுப் பாலம் மோஹர் நதி" ஆகும்.

    "இந்த நதி ராஜஸ்தானின் துங்கர்பூர் மலைப்பகுதியில் உருவாகி குஜராத்தில் மேகராஜ் தாலுகாவின் மொய்டி கிராமத்திற்கு அருகில் நுழைகிறது. வத்ராக் ஆறு ஆனந்த் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், அகமதாபாத் புல்லட் ரெயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார்.
    • தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.

    காதலியின் குடும்பத்தாரிடம் இருந்து தப்பிக்க ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் எல்லை தாண்டிய பாகிஸ்தானை சேர்ந்த 20 வயது வாலிபர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த ஜாக்சி கோலி என்ற வாலிபர் கடந்த 25-ந்தேதி எல்லை தாண்டியதாக பார்மரில் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று உள்ளூர் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார்.

    அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், ஜாக்சி கோலி தனது காதலியை ரகசியமாக சந்திக்க சென்றுள்ளார். அப்போது, காதலியின் குடும்பத்தாரிடம் சிக்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது எல்லை தாண்டியதாகவும் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவர் கூறியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகளின் கூட்டு விசாரணை தொடரும் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
    • விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம் என்று அதிகாரி கூறினார்.

    ரூ.15 ஆயிரம் பணத்தை திருடியதாக தனது வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது புகார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட பெண் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நகைக்கடைக்காரர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி நகைக்கடைக்காரர் அப்பெண்ணிடம் முதலில் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

    ஜூன் மாதத்திற்கு பிறகு நகைக்கடைக்காரரர் அப்பெண்ணிடம் விரும்புவதாகவும் கூறி அவரை பலமுறை கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார். நாளுக்குநாள் நகைக்கடைக்காரரின் தொல்லை அதிகரிக்கவே, இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவிக்க பணிப்பெண் முடிவு செய்துள்ளார். இருப்பினும் நகைக்கடைக்காரர் இதுகுறித்து வெளியே கூறினால் கணவரையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    கடந்த ஜூலை 18-ந்தேதி, நகைக்கடைக்காரர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை மூடிமறைக்க, நகைக்கடைக்காரர் அவளிடம் பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண் வாங்க மறுத்துவிட்டாள்.

    இதைதொடர்ந்து, நகைக்கடைக்காரர் அப்பெண் மீது பணத்தை திருடியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரித்தபோது, முதலில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்ட அப்பெண், பிறகு மனமுடைந்து அழுது நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் நகைக்கடைக்காரர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    நகைக்கடைக்காரர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளான கற்பழிப்பு, தாக்குதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    மேலும் "குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்" என்று அதிகாரி கூறினார்.

    • மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
    • சுதந்திரம் பெற்றதில் இருந்து அசாமில் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர்.

    அசாமில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக ஏஐயுடிஎஃப்-ஐ சேர்ந்த எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கூறியதாவது:-

    மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமது கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    அசாமில் உள்ள முஸ்லிம்கள் பின்தங்கிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர். முஸ்லிம்களுக்கு அரசு வேலைகள் மற்றும் இதர அரசு திட்டங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஆனால் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கொடுத்த எண்ணிக்கை இல்லை.

    சுதந்திரம் பெற்றதில் இருந்து அசாமில் சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் பின்னர் அந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சில புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமில் 34 சதவீத முஸ்லிம் மக்கள் தொகை இருந்தது. மேலும் 2-3 சதவீதம் அதிகரிக்கலாம். ஆனால், முதல்வர் கூறியுள்ள புள்ளிவிவரம் உண்மையல்ல என்றார்.

    சமீபத்திய திங் கும்பல் கற்பழிப்பு (அசாம் மைனர் கும்பல்) சம்பவம் மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் மாநிலத்தில் 23-24 கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசிய அனுமில் இஸ்லாம், சமீப காலங்களில் மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அசாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23-24 கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்று மட்டுமே முதல்வர் பேசி வருகிறார். அவர் மற்ற பலாத்கார சம்பவங்களை குறிப்பிடவில்லை என்று கூறினார்.

    மேலும், பாஜக தலைமையிலான அசாம் அரசாங்கத்தை தாக்கி பேசிய, அனுமில் இஸ்லாம், திங் கும்பல் கற்பழிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கொல்லப்பட்டதாகவும், அரசாங்கம் உண்மையான உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    • ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது.
    • சம்பவம் தொடர்பாக இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நொய்டாவின் செக்டார் 72-ல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கிடையே ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது. கிரிக்கெட் பேட் மற்றும், தடியுடன் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தகராறில் ஒரு வாகனம் சேதமானது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இச்சம்பவம் தொடர்பாக செக்டார் 113 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
    • ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ கோட்டத்தில் உள்ள 8 ரெயில் நிலையங்களின் பெயர்கள் துறவிகள் (Saints) மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களால் மறுபெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.

    அதன்படி, காசிம்பூர் ஹால்ட் ரெயில் நிலையம் இனி ஜெய்ஸ் சிட்டி ரெயில் நிலையம் என்றும், நிஹால்கர் ரெயில் நிலையத்தின் பெயர் மகாராஜா பிஜிலி பாசி ரெயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்து, ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு பதிலாக ரெயில் நிலையங்களின் நிலையை மேம்படுத்துவதிலும், ரெயில் விபத்துகளை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, அமேதியின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அமேதியின் முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இரானியின் கோரிக்கையை அடுத்து இந்த ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
    • சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் மொயீத் கான் மற்றும் அவரது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மொயீத் கானுக்கு பத்ராசாவில் உள்ள சொந்தமான பேக்கரியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. பேக்கரியில் வைத்து 12 வயது சிறுமியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொயீத் கானும், அங்கு ஊழியராக பணியாற்றி வரும் ராஜூ கான் என்பவரும் சேர்ந்து பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர், சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். பேக்கரி சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்ததை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையால் பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் புல்டோர் மூலம் பேக்கரியை இடித்தது.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தை சந்தித்த அமைச்சரும், நிஷாத் கட்சி தலைவருமான சஞ்சய் நிஷாத், செய்தியாளர்கள் முன் மனம் உடைந்து அழுதார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சி மொயீத் கானை கட்சியில் இருந்து நீக்கவோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எதுவும் கூறுவோ இல்லை. குற்றவாளியைப் பாதுகாக்கிறது என்று கூறினார்.

    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க ராகுல் காந்தி முடிவு செய்தார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.

    இதை தொடர்ந்து, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

    இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு சென்ற ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் மக்கள் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், (ராகுல்) காரில் இருந்து சேற்றில் இறங்குவதைப் பற்றி கவலைப்பட்டார் அவர் ஏன் இங்கு வந்தார்? அவர் பார்க்க என்ன இருக்கிறது என்று ஒருவர் கோபமாக கேள்வி கேட்பதைக் காண முடிகிறது.

    முன்னதாக, வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்தார்.

    • மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
    • மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் பருவமழை பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி பலியானோர் எண்ணிக்கை 365ஆக அதிகரித்து உள்ளது. மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    வயநாடு இயற்கை பேரிடர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஒரு கிராமம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 வீடு மட்டுமே எஞ்சியுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து சமேஜ் கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவர் கூறியதாவது:- புதன்கிழமை இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது பலத்த இடி இடித்தபோது வீடே உலுக்கியது. இதையடுத்து நாங்களே வெளியே வந்து பார்த்தபோது, கிராமம் முழுவதும் அடித்துச்செல்லப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் கிராமத்தில் உள்ள கோவிலில் போய் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். என் வீடு மட்டும் பேரழிவில் இருந்து தப்பியது, ஆனால் மற்ற அனைத்தும் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டன என்று கூறினார்.

    அதே கிராமத்தை சேர்ந்த வயதான பக்ஷி ராம் கூறியதாவது, "எனது குடும்பத்தினர், சுமார் 14 முதல் 15 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் பற்றிய செய்தி அதிகாலை 2 மணிக்கு எனக்கு கிடைத்தது. அப்போது ராம்பூரில் இருந்ததால் நான் உயிர் பிழைத்தேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். எல்லாம் அழிந்துவிட்டன. என் குடும்பத்தினரை தேடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

    இதனிடையே மேகவெடிப்பு காரணமாக சேதமான ராம்பூர் மற்றும் சமேஜ் பகுதிகளை இணைக்கும் சாலையை மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேகவெடிப்பில் சனிக்கிழமை வரை 53 பேர் மாயமாகி உள்ளதாகவும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கிராமத்தில் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கான நிதி உதவி விரைவில் அறிவிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×