டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை 103 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து 103 ரன்களை எடுத்தது.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு இணைந்த சைப்ரண்ட், வான் பீக் ஜோடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்தது. அந்த அணியில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.