செய்திகள் (Tamil News)

மதுரை அருகே கல்லூரி மாணவி கடத்தல்- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2018-05-18 12:39 GMT   |   Update On 2018-05-18 12:39 GMT
மதுரை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம், கருமாத்தூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கற்பகம் (வயது 19). செக்கானூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கற்பகம் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அந்த கல்லூரி அருகே டெய்லரிங் கடை நடத்தி வந்தவர் மான்சிங். உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த இவர், மாணவி கற்பகத்தை காதலித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திருமண ஆசை காட்டி கற்பகத்தை மான்சிங் கடத்திச் சென்று விட்டார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.

செக்கானூரணி போலீ சில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவியையும், கடத்திய வாலிபரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News