செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-07-08 18:18 GMT   |   Update On 2018-07-08 18:18 GMT
மன்னார்குடியில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுந்தரக்கோட்டை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காளிகவுண்டன் தெருவில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News