செய்திகள்

முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டிரைவர் கைது

Published On 2018-07-23 17:56 GMT   |   Update On 2018-07-23 17:56 GMT
முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். #SandSmuggling
முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் தம்பிக்கோட்டை பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பேட்டையை சேர்ந்த வீரசேகரன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.மேலும், லாரியை பறிமுதல் செய்தனர்.  #SandSmuggling #tamilnews 
Tags:    

Similar News