உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில், குடும்ப தகராறில் மோதல் கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2023-03-15 09:45 GMT   |   Update On 2023-03-15 09:45 GMT
  • ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.
  • இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாமக்கல்:

நல்லிபாளையம் காவல் நிலையம் பாப்பநாயக்கன்பட்டி கருங்கல் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் மகன் பிரகாஷ். இவர்தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் ராசிபுரம் வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் கடந்த 1 1/2 மாதமாக கவிதா அவரது தாய் கஸ்தூரி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு கஸ்தூரியின் தந்தை சுந்தரம் உள்ளிட்ட 6 பேர், பிரகாஷ் வீட்டிற்கு சென்று கவிதாவுக்கு அரசு வழங்கும் உதவி தொகையை பெறுவதற்கு ஆதார் கார்டு வேண்டும் என்று கேட்டனர்.

அப்போது பிரகாஷின் தாய் பழனியம்மாள் தகராறு செய்துள்ளார். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுந்தரம் கீழே விழுந்து விட்டார். உடனே அவரை நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சுந்தரம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News