உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் ரூ. 1 லட்சம் மோசடி

Published On 2023-07-28 08:28 GMT   |   Update On 2023-07-28 08:28 GMT
  • வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரிகிறது.
  • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ராஜபாளையம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 35). இவர் ராஜபாளையத்தில் வாகன கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த கருத்த பாண்டியன் என்பவர் வாகன கட்டுமான பணிக்காக ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து காளிஸ்வரனிடம் கொடுத்ததாக தெரி கிறது. ஆனால் காளீஸ்வரன் அந்த பணியை முடித்து தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக கேட்ட போது அவர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்த பாண்டி ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி மோசடி தொடர்பாக காளீஸ்வரன் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழ க்கு பதிவு செ ய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News