search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித் ஷா"

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்போது யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது.
    • இதுவரை இரண்டு மாவட்டங்கள் இருந்தன. இனிமேல் ஏழு மாவட்டங்களாக அதிகரிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

    இந்த நிலையில் லடாக் மாவட்டங்களில் புதிதாக ஐந்து மாநிலங்கள் உருவாக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பரா, சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உருவாக்கப்படும்.

    வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    யூனியன் பிரதேசமாக இருப்பதால் லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    லடாக் யூனியன் பிரதேசம் தற்போ லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டும் உள்ளது. தற்போது ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதா இனிமேல் ஏழு மாவட்டங்களை கொண்டதாகும்.

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார்.
    • தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அடிக்கடி டெல்லி சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய அவர் இன்று காலையில் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட்ட விகாஷா விமானத்தில் டெல்லி சென்றுள்ள கவர்னர் தனிப்பட்ட முறையிலேயே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி அவர் விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.

    • திரிபுரா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழை, நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு.

    திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு திரிபுரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

    தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி திரிபுராவில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 17 லட்சம் பேர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65 ஆயிரத்து 500 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

     


    இந்நிலையில், திரிபுரா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ. 40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு ரூ.40 கோடியை முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது."



    "வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 11 குழுக்கள், ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்திய விமானப் படைக்கு சொந்தமான நான்கு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன."

    "திரிபுராவில் உள்ள நம் சகோதர, சகோதரிகள் இத்தகைய கடினமான காலக்கட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அவர்களுக்கு தோளோடு தோள் நின்று போராடுவதைக் காண்பீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார்.
    • மோடி ஜி அடுத்த வருடம் 75 வயதை எட்ட உள்ளார். எனவே அமித் ஷா பிரதமர் ஆவார்

    பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருபவர் ஆவார்.

    சமீபத்தில் பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல் மூழ்குவதைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மோடியின் தலைமையே சிறந்ததாகும் என்று கடுமையாக விமர்சனத்தை முனைத்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கட்சி விதிப்படி மோடி, 2025 செப்டம்பர் 17 அன்று தனது 75 வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவிட்டு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். 75 வயதில் ஓய்வு பெரும் விதி மோடிக்குப் பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில் சுப்ரமணிய சுவாமி இவ்வாறு பதிவிட்டுள்ளது பேசுபொருள்ளாகியுள்ளது.

    முன்னதாக மக்களவை தேர்தல் சமயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரச்சாரத்தின்போது பேசுகையில், இவர்கள் இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் பாஜக கூட்டணியின் பிரதமர் முகம் யார், 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று மோடி ஏற்படுத்திய விதியின்படி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரை ஓய்வு பெறச் செய்தனர். ஆனால் மோடி ஜி அடுத்த வருடம் 75 வயதை எட்ட உள்ளார். எனவே பிரதமர் நாற்காலியில் அமர உள்ள அமித் ஷாவுக்காக ஓட்டுக் கேட்கிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
    • ராணுவம் இடைக்கால அரசு அமைக்கும் என தளபதி அறிவிப்பு.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காளதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கும் அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப்படை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார்.

    அவர் பேஸ்புக் இணையதளத்தில் "உள்துறை மந்திரி அமித் ஷா உடன் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருகின்றன. இதன்காரணமாக வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள திரிபுரா, மேற்கு வங்காளம், மேகாலயா, அசாம் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. திரிபுரா 856 கிலோ மீட்டர் எல்லையை வங்காளதேச நாட்டு எல்லையுடன் பகிர்ந்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது.
    • மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் அதிகனமழை, நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால், மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாமே என்ற குரல்கள் கேட்கின்றன.

    இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 'கேரள அரசுக்கு கடந்த 23-ம் தேதி, முதல் வானிலை எச்சரிக்கை, மத்திய அரசால் அளிக்கப்பட்டது. அதே எச்சரிக்கை அடுத்தடுத்து 3 நாட்களுக்கு அளிக்கப்பட்டன. அங்கு 20 சென்டி மீட்டர்க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று கேரளா அரசுக்கு 26-ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, நிலச்சரிவும் ஏற்படலாம், அதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது' என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரி அமித்ஷா கூறியதை மறுத்த கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், 'இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.), இந்திய புவியியல் ஆய்வகம் (ஜி.எஸ்.ஐ.) மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகிய 3 முகமைகளுமே, வயநாட்டில் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவிற்கு முன்பு, ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கையை (மிகஅதிக அளவிலான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை) அளிக்கவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது. மேலும், 30 மற்றும் 31-ம் தேதிகளுக்கு ஜி.எஸ்.ஐ. கொடுத்தது பச்சை நிற எச்சரிக்கையைத்தான் (மிகக்குறைவான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை). அதில், சிறிய அளவில் நிலச்சரிவோ அல்லது பாறை வெடிப்போ ஏற்படலாம் என்றுதான் கூறப்பட்டு இருந்தது. மத்திய மந்திரி அமித்ஷா கூறும் கருத்து, உண்மைக்கு முரணாக உள்ளது'' என்று கூறினார்.

    உண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த செய்திக் குறிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    அதன்படி இந்திய வானியை ஆய்வு மைய ஜூலை 18-ம் தேதி செய்திக்குறிப்பில், 19-ம் தேதி கேரளாவின் வடபகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் 25-ம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்; சில இடங்களில் 27-ம் தேதிவரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், ஜூலை 25-ம் தேதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் (அதிக மழைக்கான எச்சரிக்கை), 23, 24, 26, 27-ம் தேதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (சற்று கூடுதல் மழை பாதிப்பு எச்சரிக்கை) அளிக்கப்பட்டது. மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    ஜூலை 25-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் இடி, மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை அடுத்த 5 நாட்களுக்கு பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஜூலை 29-ம் தேதி செய்திக்குறிப்பில், அதிக மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் 30-ம் தேதியன்று அதிகாலையில் நிலச்சரிவு பேரிடர் நேரிட்டது. அதன் பிறகுதான் 30-ம் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டது. 

    • தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள்.
    • கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமும் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக பட்டேலும், கருணாநிதியும், பிரதமராக இருந்த தேவேகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

    பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.

    தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

    கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள், செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

    வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொன்னார் என்பதை பினராயி விஜயன் படிக்கிறார். 'வரலாம் வெள்ளம் என சொல்லி உள்ளனர், அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை'. இதில் பினராயி விஜயன் சொல்வதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
    • மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.

    இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.

    • நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன்.
    • நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வருகிறது.

    முன்னதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தன.

    பின்னர் உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்த பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து பறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

    பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக- ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கூட்டணியில் இணைந்தார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பறித்துக் கொண்டார்.

    தற்போது பாஜக மூத்த தலைவரான அமித் ஷாவை அஜித் பவார் மாறுவேடமிட்டு டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி அமைப்பது குறித்து பேசினார் என்ற செய்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் இந்த செய்தி மீதான நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-

    நான் மாஸ்க் அணிந்து தொப்பியுடன் விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்ததாகவும், என்னுடைய பெயரை மாற்றி பயணம் செய்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    நான் ஜனநாயகத்தில் பணியாற்றி வருபவன். எதையும் மறைத்து அரசியல் செய்கின்ற பழக்கம் எனக்கு இல்லை. இருப்பினும், போலியான கதைகள் மற்றும் தவறான செய்திகள் மூலம் எதிரிகளால் அவதூறுக்கு ஆளாகிறோம்.

    மாறுவேடத்தில் நான் டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் செய்தி தவறானது. நான் எங்கே செல்ல வேண்டுமென்றாலும் வெளிப்படையாக செல்வேன். யாரையும் பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எனக்கு இல்லை. நான் மாறுவேடத்தில் சென்றதாக கூறப்படும் செய்தி நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன்.

    அதேவேளையில் இந்த செய்தி தவறானது என கண்டுபிடிக்கப்பட்டால் எந்தவித ஆதாரம் அல்லது உண்மையில்லாமல் குற்றச்சாட்டு உருவாக்கினார்களோ?, அவர்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும்.

    இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுவது நான் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், எனவே, அத்தகைய சம்பவம் சாத்தியமற்றது. தற்போது நடப்பது அனைத்தும் தவறு. இந்த அறிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

    தற்போது, மாநிலத்தில் எனக்கு எதிராக அவதூறு பரப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது. பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    • பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.
    • ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுல்தான்பூர்:

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே இன்று (ஜூலை 26-ந்தேதி) விசாரணைக்கு வரும்போது ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் ஆஜரானார்.

    விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.
    • தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

    நேற்று பிரதமரை கவர்னர் சந்தித்த நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கவர்னர் ஆர்.என். ரவி சந்தித்து பேசி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறுகையில், தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து அக்கறை கொண்டவர் மத்திய அமைச்சர் அமித் ஷா. தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று கூறினார்.

    • 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது.
    • 1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார்.

    அரியானா மாநிலத்தில் இந்த வருடத்தின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.

    1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.

    அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

    வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    ×