search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop"

    • கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.
    • கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி இயங்கி வந்தது இதனை அடுத்து ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் ஒரு சிலர் அந்த இடத்தில் கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது இதனை அடுத்து பொதுமக்கள் சார்பாக ஊராட்சி எந்த இடத்தில் அனுமதி வழங்கி மூலப்பொருள் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்திலேயே கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார்.

    வேதாரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரங்கநாதன் வரவேற்றார். இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி தந்த இடத்தில் கிராம கூட்டுறவு அங்காடி கட்ட வேண்டும் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்பு வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின் பேச்சுவார்த்தை நடத்தியதில் உண்ணாவிரம் மாலைமுடித்து கொள்ளபட்டது.

    • 4 ரோடு அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
    • புதிய கடை வருவதற்கு அனுமதி அளிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரு கின்றது. அதில் 2 கடைகள் பார் வசதியுடன் உள்ளது. தற்போது பொத்தனூர் தண்ணீர் பந்தலில் இயங்கி வரும் கடையை அங்கிருந்து அகற்றி பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கடை தற்போது பரமத்தி வேலூர் மாற்றப்படுகிறது. ஏற்கனவே இதே பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து மாற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்திற்கு வேறொரு டாஸ்மார்க் கடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    ஏற்கனவே உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் சிவா தியேட்டர் அருகில் உள்ள கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதியதாக ஒரு கடை வருவதால் குடிமகன்களின் நகரமாக பரமத்தி வேலூர் திகழும். ஏற்கனவே உள்ள சிவா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் அரு கில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்தி ற்கு உள்ளாகி வருகின்றனர்.

    தினசரி இப்பகுதியில் மது குடித்துவிட்டு வருவோரின் அட்டகாசம் அதிகரித்தே வருகின்றது. தினசரி மாலை வேளையில் 4 ரோடு அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று

    வருகின்றனர். இந்நிலையில் நான்கு ரோடு அருகே மீண்டும் ஒரு டாஸ்மார்க் கடை வருவதை பொதுமக்கள் விரும்பவில்லை.

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மேலும் புதிய டாஸ்மார்க் கடை வருவதை தடுக்க வேண்டும். இருக்கின்ற 3கடைகளில் சிவா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் டாஸ்மாக் நிர்வாகம் புதிய கடை அமைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் புதிய கடை வருவதற்கு அனுமதி அளிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ராஜூவ்நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). இவர் சிவந்தாகுளம் பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    பிரைன்ட்நகரை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (55). இவர் பிரைன்ட்நகர் 7-வது தெருவில் மளிகைகடை நடத்தி வருகிறார்.

    இவர்கள் இருவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று பணம் மற்றும் செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிவந்தாகுளம் பெருமாள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. மேலும் இதே வாலிபர்கள் பரமேஷ்வரன் கடையிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    அதன்பேரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் (20), ராம்குமார் (22) மற்றும் செல்வராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது திருச்செந்தூர், தூத்துக்குடி வடக்கு, மத்திய, தென்பாக காவல் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    • பெருந்துறையில் மின் கசிவு காரணமாக ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வர் வசந்தகுமார் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வசந்த குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் கடையின் முன் பகுதியில் இருந்த துணிகள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

    • டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டரின் வினீத் உத்தரவு.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குழந்தைகளுக்காக பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.

    வீட்டிற்குச் சென்று பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சாப்பிட முயன்ற போது, பிஸ்கட்டின் உள்ளே பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குறைபாடுடன் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுடன் வினியோகம் செய்யப்பட்ட மற்ற பிஸ்கெட் பாக்கெட்களை திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டது.டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பிஸ்கட்டை விநியோகித்த விநியோகஸ்தரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாவட்ட கலெக்டரின் வினீத் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை, அறிவுறுத்தலின்படி பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் விஜயராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் பேக்கரிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
    • முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் தாலுகா குறிச்சான்பட்டி பஞ்சாயத் தில் அமைந்த கரையாளனூர் பொது மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிச்சான் பட்டியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர். முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இதனால் பெரிதும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருவரின் முயற்சியின் பேரில், கரையாளனூரில் வியாழக்கிழமை தோறும் பகுதி நேர ரேஷன் கடை இயங்க அரசு அனுமதி அளித்து, அதற்கான தொடக்க விழா நடந்தது.


    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலருமான முரளிராஜா, ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிச்சான் பட்டி பஞ்சாயத்து தலைவர் மகர ஜோதி சரவணன் வரவேற்றார். தொடர்ந்து கரையாளனூர் கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை பழனிநாடார் எம்.எல்ஏ. திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    பகுதிநேர ரேஷன் கடை அமைக்க, கடை வழங்கிய கரையாளனூர் சண்முக வேலுவிற்கு அனைவரும் பொது மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.தொடர்ந்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கரையா ளனூர் முருகன்,வக்கீல் ராமச் சந்திரன், குறிச்சான்பட்டி தி.மு.க. செயலாளர் துரைசாமி, விவசாய அணி ஜெயராஜ், இளைஞர் அணி திருமலைக்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கரையாளனூர் சண்முகவேலு செய்து இருந்தார்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையில் தனிப்படை அமைத்து செயல்படுத்தினார்.

    தனிப்படை சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன், நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் கடைகளை சோதனை செய்தனர். அப்போது 3 இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது.

    வெள்ளக்கோட்டை, மலையரசன் கோவில் தெரு மற்றும் பாலையம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து நகர் காவல்துறையினர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காசிமிடம் புகார் செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருளை விற்ற ேமற்கண்ட 3 கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    • சுகாதாரம் இல்லாமலும் , தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாகவும் பேய்க்குளம் பஜாரில் உள்ள 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

    சாத்தான்குளம்:

    பேய்க்குளத்தில் கடைகள் உரிமம் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உத்தரவின் பேரில் பேய்க்குளம் பஜாரில் உள்ள கடைகளில் ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், சோம சுந்தரம், ஜேசுராஜ், தியாக ராஜன், சுப்பிரமணியன், ஞானராஜ், யோவான் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். உரிமம் இல்லாத மற்றும் சுகாதாரம் பேணாத 15 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

    மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மேலூர்:

    மேலூரில் கடந்த சில மாதமாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழப்பு நேர்ந்தது. இவற்றுக்கு மதுரை -திருச்சி நெடுஞ்சாலையில் 2 கி.மீ. தூரத்திற்கு கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்பே காரணம் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேலூர் பஸ் நிலையம் முதல் அரசு கல்லூரி வரை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.

    மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், நகராட்சி கமி‌ஷனர் கண்ணன், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றத்தை அந்தப்பகுதி மக்கள் வரவேற்று அதிகாரிகளை பாராட்டினர்.

    குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் கொள்ளையடித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த ஏழு சாட்டுப்பத்து பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கட்டிட தொழிலாளி. கூடங்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40) மற்றும் குழந்தைகள் ஏழு சாட்டுப்பத்துவில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜன்னல் வழியாக கம்பிமூலம் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதில் கொள்ளையனின் ஒரு கை ரேகை சிக்கியது.

    அருமனை வீராலிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (40). இவர் சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் அதிகாலை எழுந்து பார்க்கும்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் மேஜையில் உள்ள டிராயர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 1/2 பவுன் தங்க செயின், 2 பவுன் தங்க வளையலும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை காரோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். இவர் மாங்கோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மாங்கோட்டில் கடை ஒன்று உள்ளது.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது கடையில் இருந்த ரூ.52 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை கீழ மாங்கோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (33). இவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இரவு விஜிலா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 மோதிரங்களை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். காலையில் விஜிலா எழுந்து பார்க்கும் போது சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அருமனை காரோடு பகுதியை சேர்ந் தவர் ராஜு (44). இவர் நாரகத்தின்குழி பகுதியில் கடை நடத்தி வருகிறார். கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் மறுநாள் மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் இருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடங்களில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், அந்த கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடைகளை காலி செய்யும்படி கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீசை எதிர்த்து குமார் என்பவர் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தொல்லியல் தன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், அண்ணா நகர் சேவுகப் பெருமாள் கோவில், மதுரை கிருஷ்ணராயர் தெப்பம் ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், குற்றாலம், திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்,

    சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருச்சி நாகநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் என்று 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு, கடையை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதாவது, கோவில் வளாகத்துக்குள்ளும், வெளியேயும், கோவில் மதில்சுவர் அருகேயும் கடை வைத்திருப்பவர்கள், பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் கடைகளினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே, கடைகளை காலி செய்தால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று வாதிட்டனர். கோவில்களை பாதுகாப்பது என்பது பொதுநலன் ஆகும். எனவே, கடை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினாலும், தனிப்பட்டவர்களின் நலனைவிட, பொதுநலன் தான் முக்கியமாகும்.

    அதனால், கோவிலை சுற்றியுள்ள கடைகளை காலி செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சரியான முடிவினை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையில் சட்டவிரோதம், விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, இந்த நோட்டீசில் தலையிட இந்த ஐகோர்ட்டு விரும்பவில்லை.

    அதேநேரம், மனுதாரர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக, கடை வைத்திருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியுமா? என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடியும். மற்ற கோவில்களில் மாற்று இடம் வழங்க இடம் இல்லை’ என்று கூறியது.

    எனவே, இந்த இரு கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், மாற்று இடம் கேட்டு மனு செய்தால், அதை கருணையுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். பிற கோவில்களில் கடை வைத்திருப்பவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும்.

    அதனால், வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் கடைகளை காலி செய்யவேண்டும். அதுவரையில் குத்தகை தொகை மற்றும் வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 31-ந் தேதி வரையில், கடை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவும் கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.#tamilnews
    ×