என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
- ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
- கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.
2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது.
- வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார்.
சவுத்போர்ட் கொலைகள்
இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். இறந்த சிறுமிகளுக்கு முறையே, 9, 7, மற்றும் 6 வயது இருக்கும். மேலும் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
வெறுப்பு - வன்முறை - வெறியாட்டம்
இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளை முன்னெடுத்துச் சென்ற அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர். ஆனால் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால் நாட்டில் நடந்து வந்த வன்முறையோ கையை மீறி சென்றுகொண்டிருந்தது.
இணையத்தில் இனவெறி
நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை போலீஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நேற்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- இங்கிலாந்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
- போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என அறிவுறுத்தல்
இங்கிலாந்தில் 3 இளம்பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வந்ததிகளால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் போது கவனமாக இருக்கும்படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப். 55 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கிரகாம் தோர்ப் மறைவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், "கிரகாம் தோர்ப், MBE, காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். கிரகாம் தோர்ப் மரணத்தால் உணரும் ஆழ்ந்த அதிர்ச்சியை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்று தோன்றுகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி உள்ள கிரகாம் தோர்ப் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரகாம் தோர்ப் இங்கிலாந்து அணி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
- இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
- முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.
இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.
- இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
- இலங்கை அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களுக்கான ஆட்டவணையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது டிசம்பர் 28-ம் தேதியும், ஒருநாள் தொடரானது ஜனவரி 5-ம் தேதியும் தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மார்ச் 16-ம் தேதி தொடங்குகிறது.
நியூசிலாந்து vs இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட்: நவம்பர் 28-டிசம்பர் 2, கிறிஸ்ட்சர்ச்
2-வது டெஸ்ட்: டிசம்பர் 6-10, வெலிங்டன்
3-வது டெஸ்ட்: டிசம்பர் 14-18, ஹாமில்டன்
நியூசிலாந்து vs இலங்கை தொடர்
முதல் டி20: டிசம்பர் 28, டௌரங்கா
2-வது டி20: டிசம்பர் 30, டௌரங்கா
3-வது டி20: ஜனவரி 2, நெல்சன்
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 5, வெலிங்டன்
2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 8, ஹாமில்டன்
3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 11, ஆக்லாந்து
நியூசிலாந்து vs பாகிஸ்தான் தொடர்
முதல் டி20: மார்ச் 16, கிறிஸ்ட்சர்ச்
3-வது டி20: மார்ச் 18, டுனெடின்
3-வது டி20: மார்ச் 21, ஆக்லாந்து
4-வது டி20: மார்ச் 23, டௌரங்கா
5-வது டி20: மார்ச் 26, வெலிங்டன்
முதல் ஒருநாள் போட்டி: மார்ச் 29, நேப்பியர்
3-வது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 2, ஹாமில்டன்
3-வது ஒருநாள் போட்டி: ஏப்ரல் 5, டௌரங்கா
- எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பை வென்றதில்லை.
- யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக 2020 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
தற்போது நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இருமுறை யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியாக இங்கிலாந்து உள்ளது.
நடைபெற்று முடிந்த 2024 யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச அளவில் (யூரோ/ உலகக் கோப்பை) ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.
முன்னதாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதே போன்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணி நடந்து முடிந்த யூரோ கோப்பை தொடரில் 15 கோல்களை அடித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஒரே தொடரில் இத்தனை கோல்களை அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
- நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
போட்டியின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி வரை போட்டி 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால் அசிஸ்ட் செய்ய நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.
இதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. துவக்கம் முதலே போராடி வந்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு கோல் அடிக்கப்பட்டதை தொடர்ந்து விறுவிறுப்பாக மாறியது. ஸ்பெயின் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.
இதன் முயற்சியாக 73 ஆவது நிமிடத்தில் பெலிங்கம் அசிஸ்ட் செய்ய இங்கிலாந்து வீரர் கோலெ பால்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடியும் தருவாயில் பரபர சூழல் உருவானது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் மற்றொரு கோல் அடித்து வெற்றி வாகை சூட இரு அணி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர்.
நீண்ட நேரம் நீடிக்காத போராட்டத்தால் 86 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகெல் ஒயர்சபால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இவர் கோல் அடிக்க ககெரெல்லா அசிஸ்ட் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறைாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சக அணி வீரர்களுடன் ஆண்டர்சன் நேரம் செலவிட்டார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு ஆண்டர்சன் மிதமான வேகத்தில் பந்துவீசி விளையாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பென் ஸ்டோக்ஸ் எனது மகள் பேட்டிங் செய்ய எனது மகன் பீல்டிங் செய்ய ஆண்டர்சன் பந்துவீசினார் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
- கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
- இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லின்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மனியில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அவைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
லீக், நாக் அவுட் மற்றும் கால் இறுதி போட்டி முடிவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர் லாந்தையும் வீழ்த்தின.
ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நள்ளி ரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.
3 முறை சாம்பியனான ஸ்பெயின் (1964, 2008, 2012) 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்பெயின் அணியில் டானி ஓல்மோ 3 கோல்களும், பேபியன் ரூயிஸ் 2 கோலும் அடித்து உள்ளனர். அந்த அணி அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து அணி இதுவரை ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில்லை. கடந்த 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முதல்முறையாக முன்னேறியது. இதில் இத்தாலியிடம் தோற்றது.
தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (3 கோல்), ஹூட் பெல்லிங்காம் (2 கோல்), சகா, லாட்கிங்ஸ் (தலா ஒரு கோல்) உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
- பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் அடித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது.
முதல் பாதி போட்டி முடிவில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் போட்டி இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடித்து வெற்றி பெறும் முனைப்பில் விளையாடினர். மாற்று வீரராக களமிறங்கிய ஒல்லி வேட்கின்ஸ் போட்டியின் 89-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
போட்டி முடிவில் நெதர்லாந்து வீரர்கள் மற்றொரு கோலை அடிக்க முடியாமல் தவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
- உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.
இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.
244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்