search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 164242"

    • குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    பாபநாசம்:

    வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம் அருகே நீர் சேகரிப்பு கிணறு அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தாசில்தார் பூங்கொடி தலைமை தாங்கினார்.

    இதில் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் நடராஜன், ராணி மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஜெகதீசன், செல்வராஜ், தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், தூத்தூர் விவசாய சங்க தலைவர் தங்க. தர்மராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வாழ்க்கை- தூத்துக்குடி கிராமங்களுக்கு இடையே தடுப்பணைகள் அமைத்து தரும் பட்சத்தில் மேற்படி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    • மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு 7வது வார்டில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க வேண்டும் மற்றும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரி உலகுடையாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லதுரை, காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சங்கராபுரம்-ராவுத்தநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர்.
    • நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடு வனந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பழுதாகி விட்டது. இதனால் பொது மக்களுக்கு விநியோகிக் கப்படும் குடிநீரில் புழுக்கள் வந்தது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலைக்கு இன்று காலையில் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த ரோசனை இன்ஸ்பெக்டர் அன்னக் கொடி தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சாலை மறியல் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள் கூறுகையில், நீர்த் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இது பாழடைந்து, டேங்கின் மேல் தளம் உடைந்து பறவைகளின் எச்சம் மற்றும் குப்பைகள் விழுகின்றன. மேலும், இந்த டேங்கில் புழுக்களும் இருக்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் எங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு விரைந்து தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்கள்.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது.
    • பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெறுவதை குறித்து இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது. பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கோவில் மூலவர் சிலை ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ளது. இது சம்பந்தமாக 5-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால் பெரியப்பட்டு கிராம பொதுமக்கள் கடலூர் உளுந்தூர்பேட்டை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் இருந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிடப் பட்டது. இருந்தபோதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வாகன பவனி நடைபெறுவதில் இரு தரப்பினார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது
    • நள்ளிரவு 12.30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    நாகர்கோவில் :

    இறச்சகுளம் ஸ்ரீ எருக்கலங்காவுடைய கண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    தற்பொழுது அங்கு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வாகன பவனி நடைபெறுவதில் இரு தரப்பினார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைடுத்து அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோவில் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரையும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார்.

    இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    • 25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை என பொதுமக்கள் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் கோவை தெற்கு ஆர்.டி.ஓ பாலமுருகன், சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம், கோவை தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல் மற்றும் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.

    இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், பா.ஜனதா கட்சியினர், பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பேசும் போது,25 வருடங்களுக்கு முன்பாக பஸ்களுக்கு வழித்தட உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    அப்போது நெருக்கடி அற்ற போக்குவரத்து இருந்தது. தற்போது மிகவும் நெருக்கடியாக அதிக அளவில் போக்குவரத்து உள்ளது.இதனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

    அதற்கு கோவை தெற்கு ஆர்.டி.ஓ, இனி வரும் காலங்களில் பொது–மக்களு–க்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

    அப்போது பஸ் உரிமையாளர்கள் சங்க கோவை தலைவர் மணி கூறியதாவது:-

    இனி வரும் கா லங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களி–டம் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி அறிவுறுத்தப்படும்.

    மேலும் இது சம்பந்தமாக பஸ்களில், அவிநாசி மற்றும் கருமத்தம்பட்டி நிறுத்தம் பற்றி எழுதப்படும். மேலும் கருமத்தம்பட்டியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்களிடம் கோவை தெற்கு ஆர்டிஓ தனது செல்போன் என்னை கொடுத்து ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    இதில் பா.ஜ.கவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் கருமத்தம்பட்டி மண்டல தலைவர் மோகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள்,
    • இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கே.என். பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு செம்மண் எடுத்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது  மேலும், இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்கு உள்ள ஏரிகள் துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர்  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.

    அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.

    அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

    அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

    அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 11-வது நாளான இன்று கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புதிய ஒப்பந்தம் போடாப்படாமல் விசைத் தறி உரிமை யாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந்தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தள வாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்ேபாது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் தொழி்ற் சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை ேதால்வியடைந்தது.

    ெதாழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.

    பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

    இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது

    இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.

    • வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.

    இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×