search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228165"

    • போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
    • படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.

    நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர். 

    • கலந்துரையாடல் கல்வி, கலாச்சார பரிமாற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்
    • தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு பாராட்டு

    திருச்சி, 

    சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் கலாச்சாரங்கள் குறித்து பலதரப்பினருடன் கலந்து ரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுவீடன் மாணவ குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்தனர். சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவியர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவப வத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷனருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.

    • மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள் என்பதை மேற்கோள் காட்டி எம்.கே.ஜானகிராமன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், உளவியலாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், ஓமன் சலாலாவில் இந்திய கவுன்சில் கிளப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள், தூக்கத்தில் வருவது அல்ல கனவு, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று மேற்கோள் காட்டி பேசினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தொடர்புத்திறன், தன்னம்பிக்கை, சுய உந்துதல், நேர மேலாண்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, கணித துறை தலைவி வாசுகி, வேதியியல் துறை பேராசிரியர் ஜோதி ஸ்டெல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
    • பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.

    இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    • வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
    • திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வட்டார குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை மருத்துவர் மகேந்திரன், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டங்கள் குறித்தும், கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    மேலும், உள்மாநிலம், வெளிமாநிலம், உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போன்ற இனங்களை கொண்டு விவசாயக்குழு உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பங்கேற்றார்.
    • காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    அருப்புக்கோட்டை,

    அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுப்புராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

    விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், இளைஞரணி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சாகுல் ஹமீது,அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் ஏ.கே மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கொப்பைய ராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, நகர அவைத் தலைவர் கணேசன்.

    மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம்,ஒன்றிய குழு துணை தலைவர் உதயசூரியன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் சோலையப்பன், 6-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணி முருகன், வார்டு பிரதிநிதி பாண்டியராஜன் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    மேலூர்

    மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/

    தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
    • கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    ஈரோடு:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாலை 4 மணிக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அவருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து பர்கூர் ஊராட்சி தாமரை க்கரை வந்தடைகிறார்.

    பின்னர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    பின்னர் இன்று இரவு தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் வந்து தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேவர்மலை துணை சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் தாமரை கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இதேப்போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் உறுதி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 3:30 மணியளவில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி நடந்தது.
    • மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உயிர்த்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் இணைந்து ''காளீஸ் எக்ஸ்போ'' என்ற தலைப்பில் 3 நாள் கண்காட்சியை நடத்துகிறது.

    கல்லூரி கலையரங்கில் நடைெபறும் இந்த கண்காட்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர்

    அ.பா. செல்வராசன் தலைமை தாங்கினார்.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி உதவி கலெக்டர் பிருதிவிராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடக்கவுரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கல்வி சார்ந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் அடையும் பலன்கள் மற்றும் இது போன்ற கண்காட்சிகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான அடிகல்லாக அமையும் என்றார். மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் கலை ஆகிய அனைத்து துறைகளையும் பொருத்தி கற்க வேண்டும். மாணவர்கள் தவறில் இருந்து கற்றல், கேள்வி ஞானம் மூலம் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • தூய்மைப் பணியாளர்களிடம் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள், ஈராண்டு ஆய்வு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியவை குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட துறைகள் ரீதியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழு மையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் தற்போது முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என அலுவ லர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையார் மதிவாணன் அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள உயிர் எரிவாயு ஆலை, இயற்கை எரிவாயு மின் இயக்கி நிலையத்தில் ஆய்வு செய்து, மின் உற்பத்தித்திறன் மற்றும் தூய்மைப் பணியா ளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தி னார்.

    கலெக்டர் அலுவலக வளாக அருகிலுள்ள சிவகங்கை படிப்பக வட்ட மையத்தில், போட்டித் தேர்விற்கான பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிவகங்கை ஆதிதி ராவிடர் நல மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதி மாணவியர்களுடன் விழிப்புணர்வு கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் ஆணையர் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரத்தினவேல் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்ற துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த மாணவிகளுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சூலக்கரை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவிகளுடன் "காபி வித் கலெக்டர்" என்ற 19-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காப்பகத்தில் வசிக்கும் மாணவிகளுடன் கலந்துரையாடி 32 மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

    இதில் பங்கேற்ற மாணவி களிடம் கலெக்டர் மேகநாத ரெட்டி அவர்களுடைய ஆர்வம், பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்ட றிந்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழி களை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இது உங்களை முழுமைப்படுத்தும். இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும். உங்கள் படிப்பு சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும்.

    இதைவிட மிக முக்கியமானது நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து உங்களை சுற்றி உள்ள வர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலை யில் நன்றாக பார்பதற்கும், முன்னேறுவதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    காப்பகத்தில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான வழிமுறைகள் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    இதில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×