search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இம்மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் டாஸ்மாக் நிறுவன தலைமையகம், மண்டல - மாவட்ட அலுவலகங்கள், 4,829 கடைகளில் பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆவண கிளார்க்குகள் என மொத்தம் 25,824 பயன்பெறுகின்றனர். அதிகபட்சமாக தீபாவளி போனஸ் ரூ.16,800 வரை கிடைக்கும்.

    மின்னணு முறையில் பணியாளர்களின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக பணம் வரவு வைக்கப்பட இருப்பதால், அதற்கான பட்டியலை மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டெப்போ மேலாளர்கள் தனித்தனியாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நேற்று மாலைக்குள் அனுப்பிவைக்க கோரப்பட்டிருந்தார்கள்.

    அதன்படி, அனைத்து அதிகாரிகளும் நேற்று மாலை இ-மெயில் மூலம் அனுப்பியதை தொடர்ந்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) போனஸ் வழங்கப்பட இருக்கிறது. அவர்களின் வங்கி கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்பட உள்ளது.

    • பேராசிரியர்களுக்கு பீனிக்ஸ் அகாடெமியில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வியில் உலக அளவில் முன்னேறவும், உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் நிலையை தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் சாதாரண ஏழை, எளிய மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு உருவாக்கவும் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நான் முதல்வன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்று திரும்பிய 15 பேராசிரியர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

    • அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ரெயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

    இதை மீறுபவர்கள் ரெயில்வே சட்டப்பரிவின் கீழ் கைது செய்து அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், ரெயில் பயணத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. மேலும் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    • எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
    • முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும்.

    சென்னை:

    மறைந்த முரசொலி செல்வம் படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    "முரசொலி செல்வம் மறைந்த செய்தியை கேட்டு அதிர்ந்துவிட்டேன். என்னால் நம்பமுடியவில்லை. அவருக்கு எந்த உடல்நலக்குறைவும் கிடையாது. எங்களை எல்லாம் சோகத்தில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார். எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர். மறைவதற்கு முன் முரசொலி செல்வம் என்னிடமும் பேசினார். முரசொலி செல்வம் மறைவுக்குப் பிறகு என் மனது உடைந்து சுக்குநூறாகிவிட்டது. அதிலிருந்து எப்படி மீள்வது என தெரியவில்லை.

    முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை தொடங்கப்படும். திராவிட இயக்கத்தை சேர்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கபடும். இந்த பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தக்கூடிய திமுக முப்பெரும் விழாவில் வழங்குவது என முடிவு செய்திருக்கிறோம்."

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

    நாகப்பட்டினம் மாவட்டம், தர்மதானபுரம் ஆட்டுக்கால் மண்டபத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் சாமி (வயது 30). இவர் கடந்த 5 மாதங்களாக புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி இருந்தார். துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

    நேற்று மதியம் மேட்டுப் பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அரவிந்த்சாமி, திடீரென அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த மேட்டுப்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரவிந்த்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் அரவிந்த்சாமி திருமணமாக வில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும், இதுகுறித்து சக ஊழியர்களிடம் அவ்வப்போது கூறி வேதனை அடைந்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும், அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது. ஓடும் பஸ்சில் அரவிந்தசாமி பாயும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • சத்குருவிற்கு இந்த விருதினை கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது.
    • விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, 'CIF குளோபல் இந்தியன் விருது 2024' வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    இந்த வவிருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான 'கனடா இந்தியா அறக்கட்டளை' வழங்குகிறது.

    உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் கூறுகையில், "சத்குரு CIF விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம்.

    சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார்.

    சத்குரு போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள், கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவனைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றிப் போகின்றன.

    சத்குரு யோகா, தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக மனநோய் பிரச்சனைகளின் சவால்களை எதிர்கொள்ளும் கனடாவின் சுகாதார அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது" என்றார்.

    இந்த விருது வழங்கப்பட்டதற்காக சத்குரு தனது நன்றியை CIF-க்கு தெரிவித்துக் கொண்டார். மேலும் விருதுடன் வழங்கப்படும் தொகையான கனடா நாட்டு மதிப்பில் CAD 50,000/- ஐ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

    • லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    • கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.

    போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள் .

    போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் என்பவர் மன்னிப்புக் கேட்ட வீடியோவை சென்னை காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமானவர் இர்பான்.
    • மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு இர்பான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

    பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூட்யூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.

    இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
    • அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று வந்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஒருநாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இது வெறும் டிரெய்லர் மட்டும் தான். டிசம்பர் மாத காலங்களில் பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகுது என தெரியவில்லை.

    ஒரு நாள் மழைக்கே தமிழக அரசின் சாதனையென்று சொல்லி கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெருமழைக்கு தயாராக வேண்டும்.

    ஒரு நாள் பெய்த மழைக்கு படகுகள் மற்றும் தீபாவளிக்காக பஸ்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதுவரைக்கும் பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

    தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் தூர்தர்ஷன் ஊழியர்கள் பாடியது தவறு. அவர்கள் தவறு செய்துவிட்டனர் என மன்னிப்பு கேட்டு விட்டனர். இதற்கும் கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் தி.மு.க. அரசு அரசியல் செய்து வருகிறது.

    சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் நிலவிக் கொண்டுள்ளது.

    மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. விவசாயம் இல்லை. நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

    இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் இதுவரைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. இந்த அரசு வெறும் வாய் அரசியல் செய்து கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
    • லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.

    போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இருவரும் தலைமறைவானார்கள்.

    போலீசார் விசாரணையில் வேளச்சேரியில் உள்ள லாட்ஜில் அவர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாட்ஜில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தன லட்சுமியையும் மயிலாப்பூர் போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மதுபோதையில் ஓவராக பேசிவிட்டேன் என்று அந்த ஜோடி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய பெட்டகம்.
    • தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன.

    இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளது.
    • மதுபோதையில் போலீசாரை அநாகரீகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது.

    சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி தரக்குறைவாக பேசி உள்ளனர். அவர்களை கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்ததற்கு, அந்த ஜோடி கடுமையாக பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    உதயநிதி ஸ்டாலினை இப்போவே கூப்பிடுவேன்... பார்க்கிறாயா? என துணை முதல்வர் பெயரைச் சொல்லி மிரட்டினார். அத்துடன் நிற்காமல் போலீசாரை கைகாட்டி மிரட்டி, அநாகரீகமாகவும் அந்த நபர் பேசியுள்ளார்.

    போலீசாரை அநாகரிகமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த ஜோடி தலைமறைவானது. இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள ஓட்டலில் ஒளிந்திருந்த இந்த ஜோடியை மயிலாப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த ஜோடி கணவன் மனைவி இல்லையென தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×