இந்தியா (National)

அரவிந்த் கெஜ்ரிவால் கைது- இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்: ராகுல் காந்தி

Published On 2024-03-22 02:21 GMT   |   Update On 2024-03-22 02:21 GMT
  • அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவு.
  • பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது:-

ஊடகங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது போன்றவையும் மத்திய அரசுக்கு போதவில்லை.

இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது.

பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.

இந்தியா கூட்டணி தக்க பதிலடி கொடுக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News