search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239135"

    • எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.
    • திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த 19.03.2023 அன்று எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது43) என்பது தெரியவந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாசுக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்பது போல கூறிய லட்சுமி பின்னர் போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் தனது கணவரை தானே அடித்துக்கொலை செய்ததாகவும், தனது கள்ளக்காதலன் சின்னராஜ் உதவியுடன் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் பிரகாசுக்கும் திருமணம் நடந்தது. எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

    கடந்த 18.03.2023 அன்றும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்தார்.

    இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்தேன். இதற்காக எனது கள்ளக்காதலன் சின்னராஜூக்கு (38) போன் செய்தேன். சின்னராஜ் சரக்கு வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது.

    திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது. உடலை எரித்தோம் நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு வந்தோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம்.

    உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதான அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் லட்சுமியை சேலம் பெண்கள் சிறையிலும், சின்னராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
    • போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஒரு ஆண், ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பின்புறம் உள்ள குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த ஆனந்த் (37), அவரது மனைவி கவுரி (35) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கணவன், மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

    ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.

    இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார்.
    • நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.

    காஜியாபாத்:

    டெல்லி அருகே உள்ள காஜியாபாத் நகரில் வசிக்கும் சோட்டேலால் என்பவர், கடந்த 10-ந்தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பாலை (வயது 42) ஒரு வாரமாக காணவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    சதீஷ் பால் காணாமல் போய் சில நாட்கள் ஆகியும் அவர் மனைவி நீத்து ஏன் புகார் தெரிவிக்கவில்லை என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

    இந்நிலையில் நீத்துவையும், அவரது கணவர் சதீஷையும் அடிக்கடி வந்து சந்தித்துச்சென்ற ஹர்பால் என்பவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், நீத்து, கவுரவ் என்பவரின் உதவியுடன் சதீஷை கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டார். சதீஷ்-நீத்து குடும்பத்துக்கு பழக்கமான ஹர்பாலுக்கும், நீத்துவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கணவரை கொன்றுவிட்டு, திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்துள்ளனர். சதீஷை கொல்வதற்கு தனது நண்பரான கவுரவ் என்பவரை பயன்படுத்திக்கொள்ள ஹர்பால் முடிவெடுத்துள்ளார்.

    கடந்த 2-ந்தேதி வீடு திரும்பிய கணவர் சதீஷுக்கு நீத்து பானத்தில் தூக்கமாத்திரையை கலந்துகொடுத்தார். அவர் ஆழ்ந்து உறங்கியதும் நீத்துவும், மற்ற இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

    கள்ளக்காதலன் ஹர்பாலும், அவரது நண்பர் கவுரவும் கொத்தனார்கள். நீத்துவின் வீட்டின் அருகே புதிதாக ஒரு வீட்டை அவர்கள் கட்டிக்கொண்டிருந்தனர். அங்கேயே சதீஷின் உடலைப் புதைக்க அவர்கள் தீர்மானித்தனர்.

    அதன்படி உடலை தரதரவென்று இழுத்துச் சென்று அங்கு புதைத்தனர். பின்னர் அதன் மீது கழிவுநீர் தொட்டி(செப்டிக் டேங்க்) கட்டிவிட்டனர்.

    கள்ளக்காதலனின் வாக்குமூலத்தில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்தநிலையில், கட்டப்படும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று போலீசார் செப்டிங் டேங்கை உடைத்தனர். புதைக்கப்பட்டிருந்த சதீஷின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கள்ளக்காதலனுடன் பெண் நீத்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள நண்பர் கவுரவை தேடிவருகின்றனர்.

    'திரிஷ்யம்' பட பாணியில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் காஜியாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
    • ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.

    சென்னை:

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.

    ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

    இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.

    இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.

    இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
    • கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.

    கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

    வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.

    திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.
    • கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள காட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தருமன் (வயது 42). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் வழிப்பிரச்சினை உள்ளது.

    இந்நிலையில் திருப்பதி யும் அவரது மனைவி புவனேஸ்வரியும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தருமனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த தருமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ

    மனையில் அனும திக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தருமன் கொடுத்த புகாரின்பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து திருப்பதி, புவனேஸ்வரி 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.

    இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.

    இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • அய்யப்பன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அய்யப்பன் (வயது35). தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள சுடலை கோவிலில் புகுந்து சாமி சிலையை சேதப்படுத்தினார். இதனைதொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அய்யப்பனின் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் தான் அய்யப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அய்யப்பனுக்கும், அவரது மனைவி ஈஸ்வரிக்கும் (வயது29) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் சீனித்துரை. விவசாயி. இவரது தோட்டத்திற்கு ஈஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ஈஸ்வரிக்கும், சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 12-ந்தேதி அய்யப்பன் வீட்டிற்கு வந்த போது, ஈஸ்வரியும், சீனித்துரையும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார். இதனால் மனம் உடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஆத்திரம் குறையாததால் வீட்டில் உள்ள துணிகளுக்கு தீ வைத்துள்ளார்.

    பின்னர் சுடலை கோவிலுக்குள் சென்று சாமி சிலையை சேதப்படுத்தியுள்ளதும் விசாரணையில் அம்பலமானது.

    இதுகுறித்து அய்யப்பனின் தந்தை ராமையாவும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அத்துடன் அய்யப்பனின் உறவினர்களும், கிராம மக்களும் இருவரையும் கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அய்யப்பனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள சீனித்துரையை தேடி வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார்.
    • சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42). முன்னாள் ராணுவ வீரர். ஆரணி வி.ஏ.கே நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ரேவதி, பிரியதர்ஷினி என்ற மகள் லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

    கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி அவரது மகன் மகளுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார். அன்று இரவு ரேவதி அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி அவரது கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ரேவதி நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கணவனை கொடூரமாக கொலை செய்தது குறித்து ரேவதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜிடன் (41) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

    இதனையறிந்த எனது கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் எனது மகள் மகன்களை அழைத்துக்கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.

    இதுகுறித்து நாகராஜுடம் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து கூலிப்படை மூலம் வெற்றிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    கடந்த மார்ச் மாதம் கூலிப்படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகினோம். ரூ. 10 லட்சம் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்த 6 மாதங்களாக எனது கணவரை கொலை செய்வதற்காக சமயம் பார்த்து காத்திருந்தேன்.

    அப்போதுதான் எனது கணவர் வெற்றிவேலுக்கு பைக் விபத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை முடிந்து அவருடன் வீட்டிற்கு வந்தேன்.

    கணவன் தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரை தீர்த்து கட்ட இதுதான் நல்ல சமயம் என முடிவு செய்தேன்.

    இது குறித்து எனது கள்ளக்காதலன் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தேன். சம்பவத்தன்று அதிகாலை நாகராஜ் மற்றும் ஏற்கனவே பணம் கொடுத்து வைத்திருந்த கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது என்னுடைய கணவர் வெற்றிவேல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தினார். வலி தாங்காமல் கண் விழித்து அவர் சத்தம் போட முயன்றார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை கட்டிலிலேயே அமுக்கி பிடித்தோம்.

    நான் எனது கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். அவர்களை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தேன். பின்னர் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்தேன்.

    அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரியவந்தது. என் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தனர் .

    அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×